“தென்றல். நீ வீட்டுக்குப் போன பிறகு பாட்டியை சுத்திப்போடச்சொல்லு. எனக்கும் சேர்த்து வேண்டிக்க சொல்லு.”
ஸ்டெல்லா சொல்ல தீபிகா “ஏன்?” என்று கேட்டாள்.
“நீதான் எங்களைப் பார்த்துக் கண்ணு வச்சிட்டியே. அதற்குத்தான்.”
எங்கே அவள் வருத்தப்படப்போகிறாளோ என்று தென்றல் பார்த்திருக்க அவளோ வாய்விட்டு சிரித்தாள்.
“ஆமா! பாட்டியா? நீ இல்லத்தில்தானே வளர்ந்தே? பாட்டி யாரு?”
“அது அவ புருசனோட பாட்டி. அண்ணா வெளிநாட்டுக்குப் போயிருக்கிறதால் பாட்டி துணைக்கு இருக்காங்க.”
இப்போதும் தென்றலுக்குப் பதில் ஸ்டெல்லாவே பேசினாள்.
தென்றல் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஆமா! உன் வீட்டுக்காரர் எங்கேயிருக்கார்?”
“அவர் அமெரிக்காவில் இருக்கார். சரி நாங்க கிளம்பறோம் தீபி. நீ இனி
...
This story is now available on Chillzee KiMo.
...
span>யில் காஃபி டிரேயுடன் வந்த நித்திலா முகிலன் எங்கோ வெறித்துப்பார்த்தவாறு படுத்திருப்பதைக் கண்டு தயங்கி நின்றாள்.
“அண்ணா!”
அவளது குரலில் அவன் நிமிர்ந்து பார்த்தான்.
“காஃபிண்ணா.”
கை நீட்டி பெற்றுக்கொண்டான்.
மெதுவாக உறிஞ்ச ஆரம்பித்தான்.
“அண்ணா!”