“இது ஹாஸ்பிட்டல். மறந்துட்டியா?”
“தென்றல். அப்ப நான் வீட்டுக்குப் போன பிறகு அங்கே அழைச்சுட்டு வர்றியா?”
சிறுபிள்ளைத்தனமாக அவள் கேட்டதைப் பார்க்கும் போது தென்றலுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அவள் ஒரு குழந்தைக்காக அத்தனை ஏங்கியிருக்கிறாள்.
“நான் அழைச்சுட்டு வர்றேன். ஆனா அதுக்கு ஒரு நிபந்தனை இருக்கு.”
“என்ன சொல்லு?”
“நீ ஒழுங்கா மருந்து சாப்பிட்டு உடம்பு குணமானால்தானே வீட்டுக்குப் போக முடியும்.”
“நான் ஒழுங்கா சாப்பிடறேன்.”
“இப்ப நான் கிளம்பவா?”
சரி எனத் தலையசைத்தாள்.
தென்றல் அறையை விட்டு வெளியில் வந்தாள்.
“செல் எங்கே ஸ்டெல்லா?”
“எதுக்கு?”
“என்னடி இப்படிக்கேட்கிறே? பூமி போன் செய்ததாக நீதானே சொன்னே?”
“அப்படி சொன்
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் கேட்டுட்டேன். நீ என் தென்றலை ஏதோ கஷ்டப்படுத்தியிருக்கேன்னு தோணுச்சு. அதான் கொஞ்சம் கோபமா நடந்துக்கிட்டேன்.”
அவர்களையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“உங்களைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமையா இருக்கு. என்கிட்டே இருந்த பணத்தால் இப்படி ஒரு நட்பை சம்பாதிக்க முடியலை.”