(Reading time: 12 - 23 minutes)

"வரேன்!"-என்றவரை நகர விடாமல் தடுத்தார் சூர்ய நாராயணன்.

"அண்ணா!நான் போயிட்டு வந்துடுறேன்!"-மெல்லிய குரலில் கெஞ்சினார் அவர்.பதிலோ மறுப்பு தான் வந்தது.

"அண்ணா....!"-அவர் மன்றாடவும் சரியாக கதவு தட்டப்படும் ஒலி கேட்டது.

அவன் தான்!!அது அசோக் தான்!!தவித்திருந்தவரின் நிலையும்,அவர் கரம் பற்றி இருந்தவரின் நிலையும் சூழலை மாறுப்பட்டதாய் காட்டியது அவனுக்கு!!

"மன்னிச்சிடுங்க!எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு!ஆனா,உங்களை கொஞ்சம் அவசரமா பார்க்கணும்!நீங்க தானே நவீன் குமார்?"

"ஆமா!"

"தேங்க் காட்!சார் நேற்று நீங்க கோவில் போயிருந்தீங்களா?உங்க அர்ச்சனை தட்டும்,என் மனைவியோட அர்ச்சனைத் தட்டும் மாறிடுச்சு!அதுல,இந்த மோதிரம் இருந்தது!"அந்தக் கணையாழியை அவரிடத்தில் தந்தான் அசோக்.

அதை கண்டவரின் முகத்தில் அப்படியொரு நிம்மதி!!

"ரொம்ப நன்றி சார்!இது என் அண்ணனுடையது!ராசியான மோதிரம்!"

"நன்றி எல்லாம் வேணாம் சார்!ஸாரி உங்க அனுமதி இல்லாம இவ்வளவு தூரம் வந்ததுக்கு!நான் அவசரமா போகணும் அதான்!"

"பரவாயில்லை சார்!!நீங்க கலெகட்ரா இருந்தும் சிரமம் பார்க்காம வந்ததுக்கு!!"

"இருக்கட்டும் சார்!நடந்த தவறில் என் மனைவியும் சம்பந்தப்பட்டிருக்கா!அதான் நானே வரவேண்டியதா போச்சு!நான் கிளம்புறேன்!"

"எதாவது சாப்பிட்டு போங்க!"

"இல்லை பரவாயில்லை!"-என்று நகர்ந்தவனின் விழிகளில் புலப்பட்டார் சூர்ய நாராயணன்.அவ்வளவு நேரமும் அவன் முகம் பார்த்தப்படியே படுத்திருந்தார் அவர்.மௌனமாக விடைப்பெற்றான் அசோக்.தன் கைப்பேசி எடுத்தவன் சிவன்யாவை தொடர்பு கொண்டான்.

"ஹலோ!"

"மா!மோதிரத்தை கொடுத்துட்டேன்டா!"

"நிஜமாவா?நீங்களே போய் கொடுத்தீங்களா?"

"ஆமாம்மா!இப்போ தான் வெளியே வரேன்!இப்போ சந்தோஷமா?"

"ம்...ராத்திரி எல்லாம் தூக்கமே இல்லை!இப்போ தான் நிம்மதியா இருக்கு!"

"ம்...சரி நான் ஆபிஸ் போறேன்!அப்பறம் பேசுறேன்!"

"ம்..."-என்று காரில் வேகவேகமாக அவன் ஏறியதும்,கார் புறப்பட்டது.நீண்ட பெரும் பயணத்தை நோக்கி!!

Episode 06

Episode 08

தொடரும்!

{kunena_discuss:1149}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.