‘நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சோம் அங்கிள். ஒருத்தரை பத்தி ஒருத்தருக்கு நல்லா தெரியும். கல்யாணத்துக்கு அப்புறம் உங்க பொண்ணு கண்ணிலே இருந்து தண்ணி வராது அதுக்கு நான் உத்திரவாதம்..’ மகிழ்ச்சியான புன்னகையுடன் அவர் அனுவின் பக்கம் திரும்பினார்.
‘அனுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்.’ சொன்னார் பெரியப்பா ‘அனு நீ என்னம்மா சொல்றே?’ அவன் தவிப்புடன் அவள் பக்கம் திரும்ப
‘அது வந்து... பெரியப்பா...’
‘என்னமா அது வந்து? பையன் நல்ல பையனா தெரியறானே! உனக்கு பிடிச்சிருக்கா இல்லையானு சொல்லு..’
பதில் சொல்லவில்லை அனுராதா.
‘மேடமுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் அங்கிள். அவங்க மட்டும் என்னை பிடிக்கலைன்னு சொல்லட்டும் நான் அப்படியே கிளம்பிடுறேன்’ அவன் சற்றே உறுதியான குரலில் சொல்ல
விழிகளை நிமிர்த்தி அவனை கூர்மையாக பார்த்தாள் அனுராதா.
தொடரும்......
{kunena_discuss:1147}