“உன் தலைவலி சரி ஆகிடுச்சா/”
தலைவலியா? என்ன தலை வலி...!
ஓ, அவள் சொன்ன பொய் தலைவலி...!
விஷயம் புரிந்து மனம் சுட,
“இப்போ பரவாயில்லை அத்தை...” என்று குற்ற உணர்வுடனே சொன்னாள் நந்திதா.
“ஆனால் இப்போவும் உன் முகம் வாடி போயே தான் இருக்கு...”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை.. அத்தை...”
சொல்லலாமா, வேண்டாமா என யோசிப்பவளை போல சின்ன யோசனையுடன் நந்திதாவை பார்த்த ரேவதி, பின்,
“உதய் செல்லமா வளர்ந்துட்டான்... ஒரே பையன்... அப்பா வேற இல்லை... எதுக்கு எடுத்தாலும் சட்டுன்னு கோபம் வந்திடும்...” என்றாள்.
“அப்படில்லாம்... இல்லையே... அத்தை...”
“எனக்கும் அவனை பத்தி தெரியும்... ரொம்ப பிடிவாதக்காரன்... அதனால தான் கல்யாணத்துக்கு முன்னாடி கூட உன் கிட்ட விட்டுக் கொடுக்குறதை பத்
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்து அதிர்ச்சியில் பேச்சை நிறுத்தினாள் நந்திதா...
அது ஒரு சின்ன துப்பாக்கி...
கதைகளில் படித்திருக்கிறாள்... திரைப்படங்களில் பார்த்திருக்கிறாள்... இப்போது தான் நேரில் பார்க்கிறாள்...
இதை ஏன் உதய் வைத்திருக்கிறான்...?
“உதய்.... இதை எதுக்கு வச்சிருக்கீங்க???”