“இன்னைக்கு தேவைப்படும்னு எடுத்து வச்சிருந்தேன்...” என்று இப்போதும் அவளை பார்க்காமலே சொன்னான் அவன்...
அவன் சொன்ன பதிலின் பின்னே இருக்கும் பொருளை புரிந்துக் கொள்ள முயன்றவளின் கண்கள் விரிந்தன...
“உதய்!!!! நீங்க... நான்...”
அதிர்ச்சியில் கோர்வையாக பேச முடியாமல் அவள் தடுமாற,
“பேசாதே நீ...” என சீறினான் உதய்...!
உதயின் கோபம் நந்திதாவிற்கு புதிதல்ல... ஆனால் இந்த சீற்றம் அவள் இதுவரை பார்த்திராதது!
“உன்னை பொக்கிஷமா பாதுகாத்து பார்த்துக்கனும்னு நான் நினைக்கிறேன்... ஆனால் நீ என்னை எங்கே வச்சிருக்க??? என்னவா நினைக்குற? ஹஸ்பண்ட், வைஃப்ன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? நீ வான்னு சொன்னா வரதுக்கு, வேண்டாம்னு சொன்னா கண்டுக்காம இருக்கவும் நான் ஒன்னும் நீ வளர்க்குற நாய் குட்டி இல்லை... கணவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
றான், நீ என்னடான்னா நான் அவனுக்காக பேசுறேன்னு சொல்ற... நான் என்ன செய்ய, சொல்லு? உண்மையா சொல்லனும்னா நீங்க இரண்டு பேரும் நல்லா இருந்தா எனக்கு போதும்...”
“நான் வேண்டாம்னா சொல்றேன்... அவரை பத்தி ஒரு தடவையாவது உன் கிட்ட தப்பா சொல்லி இருப்பேனா? ஆனால் அவரை பார்த்தீயா எப்படி நடந்துக்கிறார்?”