(Reading time: 23 - 46 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 11 - தீபாஸ்

oten

வேலாயுதத்திற்கு மனத்தினுள் பல குழப்பங்கள் ஏனென்றால் ஆதித் வர்சாவை காதலிக்கும் விஷயம் அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது

ஜானகியிடம் அதை சொல்லி ஆதித்துடன் பேசவைத்து வர்சாவுடன் அவனது கல்யாணத்திற்கு நிச்சயம் செய்துவிடலாம் என்றும், மாதேஷ் இவனுக்கு ஒருவருடம் மூத்தவன் என்றாலும் இன்னும் அவன் தன காலில் நிற்க ஆரம்பிக்கவில்லை, எனவே முதலில் ஆதித்துக்கு கல்யாணம் முடித்துவிடலாம் என்று நினைவுடன் வீட்டிற்கு வந்தார் .

ஆனால் அவர் வீட்டிற்கு வந்ததும் ஜானகி, வேலாயுதத்திடம் என்னங்க நாம அன்றைக்கு ஜவுளிக்கடையில் ஆதித்துடன் பார்த்தோமே அழகுநிலா அவள் கூட வேலை பார்ப்பவருடன் பைக்கில் வரும்பொது வேப்பேரி ரோட்டில் வைத்து சின்ன ஆக்சிடென்ட் ஆகிடுச்சுங்க நல்லவேளை நம்ம ஆதித் உடனே ஸ்பாட்டுகுப் போய் அவளை ஹாஸ்பிடலுக்கு ஆம்புலன்சில் கொண்டுசென்று அடிபட்ட தலையில் தையல் போட்டுவிட்டு எனக்கு போன் பண்ணினான்

நான்தான் அவளை ஹாஸ்ட்டலில் தனியாக விடவேண்டாம் இங்க கூப்பிடுவா என்று சொல்லிவிட்டேன். நம்ம ரூம் பக்கத்து ரூமில்தான் அவளை தங்க வச்சுருகிறேன். கடவுள் புன்னியத்துள்ள அடி ரொம்பப்படாமல் தப்பிச்சுட்டா என்றாள்.

அவள் கூறியதைகேட்ட வேலாயுதம் என்னம்மா வயசுப்பொண்ணை போய் வீட்டில் கூப்பிட்டுவச்சிருக்க, அவள் வீட்டில் தகவல் சொல்லி அனுப்பியிருக்கணும் அல்லது ஹாஸ்பிடளிலேயே தங்க வச்சு நர்ஸ் போட்டு பார்த்துக்கிட்டு இருக்கலாம் பின்னாடி எதுவும் பிரச்சனையாகிவிடப்போகிறது என்றார்.

அவர் கூறியதை கேட்ட ஜானகி நான் ஒன்றும் அடுத்தவீட்டுப் பெண்ணை ஒன்றும் கூப்பிட்டுக் கொண்டு வரவில்லை நமக்கு மருமகளாகப் போகும் பெண்ணைத்தானே அழைத்து வைத்து கவனிக்கிறேன். ஆக்சிடென்ட் விஷயம் தெரிந்தால் அவர்கள் வீட்டில் பயந்து அவளை வேலை பார்க்க வேண்டாம் என்று ஊருக்கு கூப்பிடுக்கொண்டு போய்விடுவார்கள் அதனால் சொல்லவேண்டாம் என்றாள். என் மருமகளை எப்படிங்க தனியா ஹாஸ்பிடலில் விடுவது என கேட்டாள்

அவள் கூறியதை கேட்டதும் நீ என்ன சொல்ற ஜானகி ஆதித் இந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்யப்போவதாக உன்னிடம் சொல்லிட்டானா? என்று குழப்பத்துடன், “தனக்கு அவன் வர்சாவை காதலிப்பதாக கிடைத்த தகவல் தவறானதோ” என்ற யோசனையுடன் கேட்டார்.

அவர் அவ்வாறு கேட்டதும் ஜானகி சொன்னாள், அவன் வெளிப்படையாக ஒன்றும் சொல்லவில்லை ஆனால் நானே கண்டுபிடித்துவிட்டேன். உங்களுக்குத் தெரியுமே அன்னைக்கு ஜவுளிக்கடையில் கூட அவளுக்கு அவன் ட்ரெஸ் எடுத்துக் கொடுத்திருப்பதாக கூறினான் ட்ரெஸ் மட்டும் எடுத்துக்கொடுக்கவில்லைங்க நகையும் அவளுக்காக வாங்கியிருகிறான். ஆனால் இரண்டுபேருக்கும் கொஞ்சம் சண்டை போல. எனவே அந்த நகையை எனக்கு வாங்கியதாக என்னிடமே கொடுத்துவிட்டான். இங்க பாருங்க அந்த நகையை என்று அழகுநிலவை அதை போட கொடுப்பதற்கு எடுத்துவைத்திருந்த நகையை காட்டி இது நான் போடுற மாதிரியா இருக்கு என்று மாடனாக இருந்த அந்த நகையை காண்பித்தார் .

தன் மனைவி கூறியதை கேட்ட வேலாயுதம் வர்சாவை பற்றி கூறவந்ததை சொல்லவேண்டாம். அழகுநிலாவை பற்றி முழுவதுமாக தெரிந்தபின் எதுவானாலும் பேசிக்கொள்ளலாம் எனறு முடிவெடுத்தார்

அதன்பின் அவர் அழகுநிலாவின் தோற்றத்தையும் நடவடிக்கையும் ஆராய்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார் மேலும் அவள் தன்னையும் ஆதித்துக்கு ஆசிர்வாதம் கொடுக்க சொல்லச் சொன்னதும் நெகிழ்ந்துவிட்டார்.

மேலும் ஆதித்தும் அவள்முன் தன்னை உதாசீனப்படுத்த முடியாமல் தயக்கத்துடன் அதற்கு உடன்பட்டதை பார்த்தவருக்கு, தன மகனுக்கும் அழ்குநிலாவின் மேல் ஈர்ப்பு உள்ளதை உணர்ந்துகொண்டார் .

அவளின் அலட்டல் இல்லாத எழிமையான பேச்சும் கண்ணியமான உடையும் வீட்டு வேலைகளில் இயல்பாக ஜானகிக்கு உதவிசெய்த விதமும் நேர்த்தியான பழக்கமுள்ள மிடில்கிளாஸ் வீட்டுப்பெண் என்பதை பறைசாற்றியது.

மேலும் ஆதிதுக்கு உள்ள ஸ்டேடஸ்க்கும் இப்பொழுது உள்ள அவனின் தொழில் உலகத்திற்கும் இந்த அப்பிராணிப் பெண் எப்படி அவனுக்கு பொருத்தமாக உள்ளதாக நினைத்து அவன் தேர்ந்தெடுத்தான் என்று நினைத்துக்கொண்டு இருக்கையில் நிமிர்ந்து தனது மனைவியின் முகம் பார்த்த வேலாயுதம் கம்பீறமும் அழகும் அவர்களின் பொருளாதாரத்தில் இருந்து வருவதில்லை. அவர்களின் மனம் மற்றும் செயல்கள் மூலமே அது கிடைப்பதென்பதற்கு உதாரணமாக இருக்கும். தன் மனைவியை பார்த்து ரசனையாக மாறியது அவரது பார்வை

உடனே என்னங்க அப்படி பார்க்குறீங்க! என்று முகம் சிவக்க கேட்டவளிடம், எப்படி ஜானகி இன்னும் முதல்முறை உன்னை பார்த்தபோது இருந்த அதே ஈர்ப்புடன் என்னை இழுக்கற என்றவர். சற்று முகம் வாட “உன் மதிப்பு நான் உன்னை கவர்ந்ததால் தான் சற்று மங்கிவிட்டதோ?” என்று கவலையுடன் கேட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.