மனம் ஒன்றி குடும்பம் நடத்தும் தம்பதியாய் இருந்தால் முன்னேயே இதைப் பற்றி கலந்து பேசியிருப்பர் என்று நினைக்கலாம். இங்கே அவளுக்குத் தெரிந்து இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. எங்கே கலந்து ஆலோசிக்கிறது?
தன்னை சந்தேகத்துடன் நோக்கிய ஸ்டெல்லாவைப் பார்த்து முகிலன் புன்னகைத்தான்.
“அது உன்னோட தோழி கொடுக்கிறது. அதற்கு ஏன் என்னைப் பார்க்கிறேம்மா? வாங்கிக்கோ.”
அவனது உரிமையான பேச்சைக் கேட்ட ஸ்டெல்லாவுக்கு சந்தோசம்.
“அண்ணா! இப்ப உங்க கூட வரமுடியலை. முகவரியைக் கொடுத்துட்டுப் போங்க. நாங்க ஊருக்கு வந்து உங்களை எல்லாம் பார்க்கிறோம்.”
“நான் உன்னோட செல்லுக்கு மெசேஜ் பண்றேம்மா.”
“போயிட்டு வர்றேன் ஸ்டெல்லா. வீட்டில் அம்மா தங்கைங்ககிட்ட சொல்லிடு. நீயும் சொல்லிடு பவித்ரா.”
இருவரும் கண்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்.”
நிர்மலா அம்மாவின் அறை வாசல் அருகே சென்றவள் உள்ளே நுழைவதற்கு அனுமதி கேட்டாள்.
அவரது கம்பீரமான குரல் அனுமதி தர உள்ளே நுழைந்தனர்.
அவரும் அவளை எதிர்பார்த்திருக்கவில்லை.
குடும்பத்துடன்தான் வரவேண்டும் என்று நிபந்தனையிட்டு அவளை வர விடாமல் செய்திருந்தவர் அவர்தான்.