Page 3 of 5
“தென்றல்!”
ஆச்சர்யமான குரலில் அழைத்தார்.
“அம்மா!” என்று கண் கலங்க ஓடிச் சென்றவள் அவரது காலில் விழுந்தாள்.
அவரும் கைகள் நடுங்க அவளின் தலையைத் தடவினார்.
“எழுந்திரும்மா! எப்படியிருக்கே?”
கேட்டவர் அப்போதுதான் வாசலைப் பார்த்தார்.
அவர்களுக்கு நேரம் கொடுத்து ஒதுங்கியிருந்த முகிலனும் அவன் தோளில் சலுகையுடன் சாய்ந்திருந்த பூமிகாவும் கண்ணில்பட்டனர்.
அவர் மகிழ்ந்துபோனார்.
“வாங்க வாங்க.”
முகிலன் மகளை இறக்கிவிட்டான்.
“பாட்டீ!”
என்ற அழைப்புடன் தன்னை நோக்கி ஓடிவந்த பூமிகாவை ஆவலுடன் அணைத்துக்கொண்டார் நிர்மலா.
“தென்றல்! என்னை எப்படி தெரியும்? நீ சொல்லி அழைச்சுட்டு வந்தியா?”
“எனக்கே இங்கே வந்த பிறகுதான் தெரியும்மா!”
சொன்னவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னிடம் கேட்கலாம்மா. நானும் உங்களுக்கு ஒரு மகன் மாதிரிதான். நான் கம்பெனி வச்சு நடத்தறேன். இங்கேயிருந்து படிச்சு முடிச்சுட்டு வெளியில் வர்றவங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யறேன். என்னோட கம்பெனியில் வேலை கொடுக்க முடியாவிட்டாலும் வேற வேலைக்காவது ஏற்பாடு செய்வேன்.”
உறுதியளித்தான்.