(Reading time: 22 - 43 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 12 - தீபாஸ்

oten

வீட்டிற்க்குள் வந்ததும் தனது அறைக்கு செல்வதற்காக படியேறிய ஆதித்திடம் ஜானகி “ஆதித் நான் சாப்பாடு எடுத்துவைக்கிறேன் சாப்பிட்டுவிட்டு மற்றதைப் பார்” என்று கூறினாள்.

“ம்...வைங்கமா இதோ ஐந்து நிமிசத்துல வந்துவிடுகிறேன்” என்று தனது அறைக்கு வந்த ஆதித் கட்டிலில் அமர்ந்தவன் அவனது இலவம்பஞ்சு தலையணையை எடுத்து அதன் மென்மையை உணர்வதற்காக தடவிப் பார்த்தான். அந்த மென்மையோடு காலையில் கோவில் படிஏறுகையில் உணர்ந்த அழகுநிலாவின் மென்மையை தன்னை அறியாமல் ஒப்பிடுபார்த்தது அவன் உள்ளம். .

நோ..! என்று வாய்விட்டு கூறியபடி அந்த தலையணையை தூக்கிப்போட்ட ஆதித், தன மனம் அவளின் பால் ஈர்க்கப்படுவதை நினைத்து தன்னை பற்றிய சுய அலசலில் ஈடுபட்டான். .

அழகான வர்சாவின் கண் அவனின்மேல் விழுவதைக் கண்ட ஆதித்துக்கு அவ்வழகை தன்னுடையதாக்க ஆர்வம் எழுந்தது .அதற்கு காரணம் வர்சாவின் தூண்டில் பார்வையே. மேலும் அவளும் தன்னை போலவே நினைப்பதை உணர்ந்தவனுக்கு எளிதாக கிட்டியவள்தான் வர்ஷா.

வார்ஷா தன மேல் எதற்காக கோபம் கொண்டாளோ அந்த தவறை தான் நிஜம் ஆக்கிவிடுவோமோ? என்று நினைக்கும் போதே மனக்கண்ணில் வர்ஷா மாதேசுடன் இணைந்து நின்ற காட்சி தோன்றியது. அவளை மாதேசுடன் ஒன்றாக பார்த்தவுடன் அவளை தூக்கி எறிவது அவனுக்கு எளிதாக இருந்ததை உணர்ந்தான். பின்பு அவனுக்கு அதேபோல் இப்பொழுது அழகுநிலாவையும் தேடும் தன் மனம் அவளும் எதோ ஒருவகையில் பொய்த்துப்போனால் என்று நினைக்கும் போதே ஆத்திரம் பொங்கியது. “கொன்னுடுவேன்” என்று வாய்விட்டு கூறினான். தன்னைமீறி ஒரு விரலைக் கூட அழகுநிலாவை அசைக்க விட கூடாது விட மாட்டான் இந்த ஆதித் என முனுமும்னுத்தான் .

ஒன்று நிச்சயம் வார்ஷா அவனை கவர முயலாமல் இருந்திருந்தால், ஆதித் கண்டிப்பாக அவளை திரும்பி கூட பார்த்திருக்கமாட்டான். ஆனால் அழகுநிலா கண்டிப்பாக தனக்கு தூண்டில் பார்வை வீசவில்லை ஆனால் அவள் இருக்குமிடம் நோக்கியே தன கண்ணும், மனமும் செல்கிறதே. ஆனால் அவள் தன்னை பார்க்கும் பார்வையில் நன்றி உணர்வு மட்டுமே நிறைந்திருப்பதை உணர்ந்த ஆதித், அந்த கண் தன்னை காதலாக பார்க்கவேண்டும் என்ற ஆசை கிளர்ந்தது.

தன மேலேயே வெறுப்பு அடைந்த ஆதித், இது இல்லையென்றால் அது என்று உடனே மனதை மாற்றிக்கொண்ட நான் என் தந்தைக்கு எப்படி தண்டனை கொடுக்க முடியும்? என்று மருகினான்

மேலும் கண்டபடி அவனது மனம் தரிகிடத்தோம் போட்டு ஆடிக்கொண்டிருக்கையில் அவனது மொபைள் ஒலியில் அதை எடுத்து காதிற்கு கொடுத்து “சொல்லுங்க அம்மா” என்று கூறினான் உடனே ஜானகி “ஆதி கீழே சாப்பிட வாப்பா! வேறு வேலையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளல்லாம்” என்றதும் “ம்...இதோ வந்துவிட்டேன்” என்றவன் மொபைலை அனைத்து தம் முகத்தை நீர் அடித்து கழுவி டவலில் துடைத்தவன் கீழே இறங்கிவந்தான்.

அழகுநிலா இருக்கும் அறையை கடந்து செல்லும் போது உள்ளுக்குள் இருந்து அவள் பேசும் சத்தம் கேட்டதும் ஆதித் “என்ன இவ சாப்பிட வராம யாருடன் பேசிக்கொண்டு இருக்கிறாள்” என்று தயங்கி நின்றவன் காதில் அழகுநிலா கூறிய “என்ன அண்ணே! ஒருவருஷம் கழித்துத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன் என்றதற்கு சரியென்று சொன்னீங்க, இப்ப என்னடானா.... உடனே கல்யாணம் அப்படின்னு சொல்றீங்க” என்ற அவளின் வார்த்தையில் முகம் ருத்தரதாண்டவமானது வேகமாக அவளிருந்த அறைக்குள் நுழைந்த ஆதித்,

அழகுநிலாவின் முகத்தை ஆராய்ந்தபடி முன்னேறியவனுக்கு அவளின் பதட்டமான முகபாவனை கண்டதும் அவளின் பதட்டத்தை எப்பாடுபட்டாவது குறைக்கவேண்டும் என எண்ணம் தோன்றியது. பின் அவள் தன் மொபைலில் கூறிய “ஒருவாரம் லீவ் எல்லாம் தர மாட்டாங்க செவ்வாய்கிழமை வாங்க அண்ணா நான் கிளம்பியிருகிறேன்” என்று கூறியதை கேட்டதும், அவளின் பதட்டத்தால் சற்று குறைந்திருந்த அவனின் கோபம் திரும்ப, மீண்டும் ரவுத்திரத்தை பூசிக்கொண்டது அவனது முகம்.

அழகுநிலாவிற்கு கோவில்படியில் தான் ஏறும்போது ஆதித்துடன் தன்னை முரளிதரன் பார்த்ததே நினைவில் எழுந்தது. அவளுக்கு முரளிதரனுடன் தனக்கு திருமணம் நின்றுவிடுவதை பற்றி கவலையில்லை. ஆனால் அதற்காக அவன் தனது வீட்டில் கூறும் காரணம்...., அடுத்த ஆணின் அருகில், தான் நெருக்கமாக இருந்ததாக பார்த்ததாக அவன் தன வீட்டில் கூறினால் அது தன் கிராமம் முழுவதுவும் பரவினால் நினைக்கும்போதே நெஞ்சம் பதறியது நிலாவிற்கு.

அந்த நேரத்தில் அவளின் அருகில் கோபத்துடன் கேட்ட ஆதித்தின் குரலில் செயலில் மேலும் கதிகலங்கி போனாள். தலையை பிடித்து உட்கார்ந்திருந்த அழகுநிலாவின் நாடியை தன இருவிரலால் அழுத்திப்பிடித்து நிமிர்த்தியவன் உட்கார்ந்திருந்தவளின் முகம் நோக்கி குனிந்து அவளின் முகத்தை கோபப்பார்வை பார்த்தபடி தெரியும் டீ எனக்கு அதனால்தான் காலையிலேயே சொன்னேன். இந்த காலத்தில் யாரும் நன்றி விசுவாசத்துடன் இருக்கமாட்டார்கள் என்று. ஆனால் நான் ஒன்றும் ஏமாளி கிடையாது. என் கண் பார்வையை விட்டு ஒரு அடி எடுத்துவச்சே தொலைச்சுடுவேன் உன்னை என்று கர்ஜித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.