மாதேஷ் மற்றும் நரேனும் தீவிர ஆராய்ச்சியில் இருந்தனர். நரேன் கூறினான் “டேய் உன் அப்பாவிடம் சொல்லி அந்த ஆதித்தை கொஞ்சம் அடக்கி வைக்கச் சொல்லலாம் இல்லையா, நான்கூட முதலில் அவன் யாரோ பெரிய கொம்பன் என்று பயந்து போய் இருந்தேன் இப்போதானே தெரியுது அவன் உன் அப்பாவின்” என்று மேலே சொல்லப் போகையில் மாதேஷ் அவனை “கொஞ்சம் நிறுத்தரயா இதுக்குமேல பேசுன பிரண்டுன்னு கூட பாக்கமாட்டேன் அடிச்சு பல்லக் கழட்டிடுவேன்”என்றான்
நீ அன்னைக்கு ஜானகி பில்டர்ஸ் எம் டி ஆதித்தராஜ்னு சொன்னதுமே இந்த xxxxxxxxxxஎருமைதானு நான் கண்டுபுடுச்சுட்டேன். ஆனா நீ நினைக்கிற மாதிரி பிரச்சனை இப்போ சிறுசாகல அவனுக்கு மட்டும் அந்த மொபைலில் இருக்கிற வீடியோசில் நான் அப்படி இருக்கிறது தெரிந்தால் உடனே ஆப்புதான் என்றான்.
இப்போ என்னடா செய்ய பேசாம அவளை தூக்கிடலாமா..? என்றதும், மாதேஷ் ஆமா நீ ஆள் வச்சு அவளை அட்டாக் பண்ணின லச்சனத்தை பார்த்தேந்தானே என்றவன், அவள் இப்போ ஆதித்தின் வீட்டில் இருக்கிறாள். அங்கிருக்கும் வரை அவளை நாம் எதுவும் செய்யமுடியாது. முதலில் அங்கிருந்து அவளை கிளப்பணும் என்றவன் அவளை வெளியில் கொண்டுவர ஒருவழி செய்றேன் என்றவன் வசந்த்திற்கு போன் பண்ணினான்.
அவன் எடுத்ததும், டேய் வசந்த் நம்ம நியூ பில்ட்பிங் ஸ்டார்ட் பண்றதுக்கு பூமிபூஜையை புதன்கிழமை செய்வதாகத்தானே பிளான் போட்டோம். ஆனா இப்போ என்ன செய்ற ஜானகி கன்ஸ்ட்ரக்சனுக்கு போன்போட்டு எங்க ஜோசியர் நாளைக்கு பூமிபூஜை போட்டு பில்டிங் வொர்க்கை தொடங்கச்சொல்றார் அதற்கான ஏற்பாட்டை நாளைக்கே ஏற்பாடு செயுமாறு சொல்லுடா! அப்படியே அவங்களுக்கும் நமக்குமான அக்ரீமென்ட்டையும் அப்பவே சைன் பண்ணிடலாம் என்று சொல்லி ஏற்பாடு செய்ற என்று கூறி தொடர்பை துண்டித்தான். பின் அழ்குநிலாவிற்கு தொடர்புகொண்டு பேச ஆயத்தமானான்.
அழகுநிலா சாப்பிட்டுவிட்டு அவள் போடவேண்டிய மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு ஜானகி கொடுத்து போட்டிருந்த நகைகளை கழட்டிவைத்துவிட்டு தன்னுடையதை போட்டுக்கொண்டவள் கிளம்பி தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டு ஜானகியிடம் வந்தவள், “இந்தாங்க ஆண்டி” என்று நகையை கொடுத்தாள். “இப்போ எதுக்கு இதை கலட்டுன நீயே போட்டுக்கோ அழகுநிலா” என்று சொன்னாள் ஜானகி, உடனே “ம்....கூம் நீங்க கட்டாயப்படுத்தி போடச்சொன்னதால் தான் போட்டேன் ஆண்டி,
என் அம்மா சொல்வாங்க ஆத்துல போட்டாலும் அளந்து போடனும் என்று. நீங்க என்னடானா தங்க நகையை போய் இப்படி தூக்கி கொடுக்குறீங்க” என்றவள் அங்கிருந்த மேஜையில் அந்த நகைக்குரிய பெட்டி இருந்ததை பார்த்து அதில் நகையை வைத்து மூடியவள் அங்கேயே அதை வைத்து “பத்தரமா எடுத்து வைங்க” என்றாள். பின் அங்கிருந்த வேலாயுதத்திடமும் வ்ருகிறேன் என்று சொல்லியவள் ஆதித்தியம் விடை பெறுவதற்காக தேடினாள்.
அவன் அவன் ரூமிற்கு சென்னு கார்சாவியை எடுத்துக்கொண்டு கையில் சுழற்றியபடி வந்தவன் “.வா உன்னை டிராப்பண்றேன்” என்று கூறினான்.
அவன் கூறியதை கேட்டதும் சற்றுமும் அவன் தன்னிடம் கோபம்கொண்டு பேசிய பேச்சு ஞாபகம் வந்ததால் இனி எதற்கும் இவனின் முன் நிற்க்கக் கூடாது என்ற முடிவெடுத்தாள்.
எனவே வேகமாக “இல்ல வேண்டாம்.... உங்களுக்கு ஏற்க்கனவே நான் நிறைய தொல்லை கொடுத்திட்டேன் நானே கால்டாக்சிக்கு போன் செய்து போய்கொள்வேன்” என்றவள் தனது மொபைலை எடுத்து டயல் செய்யப்போகும்போது அதை டக்கென்று பறித்து அனைத்து அவள் கையில் கொடுத்தான் ஆதித்
பின் அவளிடம் “எனக்கு உன்னை டிராபன்னுவது ஒன்றும் பிரச்சனையில்லை நான் உன் ஹாஸ்டல் பக்கம்தான் போகிறேன். அப்படியே உன்னை அங்கு இறகிவிடபோகிறேன், அதனால் ரொம்ப சீன போடாமல் ஒழுங்கா வா” என்று முன்னால் நடக்க ஆரம்பித்தான். அதற்குமேல் மறுக்கமுடியாமல் அவனை தொடர்ந்து செல்ல ஆரம்பித்த அழகுநிலா ஜானகியிடம் “போய்ட்டுவருகிறேன் ஆண்டி” என்று கூறினாள்.
அதற்கு ஜானகி “நீ வீட்டிற்கு கிளம்புவதாக சொன்னதால்தான் உன்னை போகவிடுறேன் இல்லையென்றால் இப்போ இருக்கிற உன் உடல்நிலைக்கு உன்னை தனியாக அனுப்பவெல்லாம் மாட்டேன்” என்று கூறியபடி அவளுடன் வெளியில் வந்து காரில் அவள் ஏறும்வரை உடன் இருந்து அனுப்பிவைத்தாள் ஜானகி.
கார் கிளம்பியதில் இருந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த அழகுநிலா, அவன் முகத்தை முகத்தை பார்ப்பதை உணர்ந்த ஆதித் என்ன கேட்கணும் என்று நினைக்கிறாயோ அதை கேட்டுவிடு என்று கூறினான்.
அவன் அவ்வாறு கூறியதும் ஒருவித தயக்கத்துடன் “இல்லை, நீங்க உங்க வீட்டில் வைத்து என்னை நன்றி விசுவாசமில்லாதவள் என்று கோபமாக என்னிடம் பேசினீங்களே! எதை வைத்து என்னை நன்றி விசுவாசமில்லாதவள் என்று நீங்க சொல்றீங்க” என்று கேட்டதும் காரை கிரீச் என்று சடன் ப்ரேக் போட்டும்போதே அதை லாவகமாக சாலையின் ஓரத்தில் நிறுத்தியவன், கோபமாக அவளின் அருகில் சென்றான், அவனின் செயலில் பயந்துபோய் தன கையில் வைத்திருந்த பேக்கை இருக்கப்பிடித்தபடி கதவோடு ஒன்றினாள் அழகுநிலா.