(Reading time: 19 - 38 minutes)

யோசனையுடனே வெளியே பார்த்தவள், அங்கே காட்சிகள் அசைவதை உணர்ந்து கார் கிளம்பிவிட்டதை புரிந்துக் கொண்டவளாய் திரும்பி கணவனை பார்த்தாள்.

அவன் கருமமே கண்ணாக சாலையை பார்த்துக் கொண்டிருந்தான்....

இப்படி கோபித்துக் கொண்டு முறுக்கிக் கொண்டிருக்கும் போது நீ அழகாக இருக்கிறாய் என்று சொல்ல எழுந்த ஆவலை அடக்கிக் கொண்டு,

“பரவாயில்லையே துளசியை உங்க சாரியை ஏத்துக்க வச்சுட்டீங்க... கிரேட்...” என்று புகழ்ந்தாள்...

தயின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது...

நந்திதா எப்படி தன்னிடம் பொய் சொல்லலாம் என்று அவன் கோபம் கொண்டது என்னவோ உண்மை தான்... அதிலும் தன் உதவியை நாடாமல் ஜெயிடம் அவள் உதவி கேட்டு சென்றது தெரிந்த போது அவனின் கோபம்

...
This story is now available on Chillzee KiMo.
...

வள் சொன்னதை புரிந்துக் கொண்டவனை போல சில வினாடிகள் அமைதியாக இருந்தவன், பின்,

“யோசிச்சு பாரு நதி... அப்போ மட்டும் தானா??? எப்போவுமே நீ என்னை தள்ளியே தானே வச்சு யோசிக்குற...” என்றான்

“இனிமேல் அப்படி யோசிக்கலை...” யோசிக்க ஒரு வினாடியும் எடுத்துக் கொள்ளாமல் சட்டென சொன்னாள் அவள்...!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.