அவளின் பதிலை ஏற்றுக் கொண்டோ என்னவோ அவன் மேலே எதுவும் பேசாமல் இருந்தான்...
நந்திதாவும் தனக்குள் யோசனையில் மூழ்கி போனாள்....! உதயிடம் தனக்கிருக்கும் அன்பை எப்படி அவனுக்கு புரிய வைப்பது என்ற யோசனை...
வீடு வந்த பிறகும் கூட அதே யோசனையிலேயே இருந்த நந்திதா, ஏதோ சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்....
உதய் ஒரு ட்ராவல் பேகை மூடி வைத்துக் கொண்டிருந்தான்...
“உதய்...! எதுக்கு பேக்?”
“இன்னும் இரண்டு மணி நேரத்துல என் பிளைட் கிளம்புது நந்திதா... டெல்லில இம்பார்டன்ட் வேலை இருக்கு... நம்ம புது லைன்க்கு வேண்டிய ரா மெட்டிரியல்ஸ் ஆர்டர் செய்யனும்... நாகுவும், மூர்த்தியும் இந்நேரம் போயிருப்பாங்க... நான் பர்த்டே பார்ட்டிக்காக லேட்டா கிளம்புறேன்...”
“என் கிட்ட நீங்க எதுவும் சொல்லவே இல்லையே?”
...
This story is now available on Chillzee KiMo.
...
ு நடந்தான்...
செக்-இன் செய்து, செக்யூரிட்டி செக் முடித்து, அவனுடைய பிளைட் கிளம்ப இருந்த கேட்டை அவன் அடைந்த போது ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகி இருந்தது....
நந்திதா போன் செய்ய சொன்னது நினைவில் வந்தது...
யோசனையுடன் சைலன்ட் மோடில் இருந்த போனை கையில் எடுத்து பார்த்தான்...