எதிரிலிருந்தவர்களை நிமிர்ந்தும் பார்க்கவில்லை..ரகுவோ ஏஞ்சலிடம்,
“என்ன டியர் உன் ப்ரெண்ட் யாரையுமே முகத்தை பாத்து பேச மாட்டாங்களா?”?என நக்கலாய் கேட்க,சட்டென தலை நிமிர்த்தி அவனை முறைத்தாள்..
“ப்பாபா என்ன லுக்கு..பட் இதேமாதிரி முழிச்சு பாத்து வந்துருந்தா கால்ல அடிபடமா வந்துருக்கலாம்” என அவன்கூற,
காலையில் தன்னை பிடித்தவனின் நியாபகம் வந்தது..
“ஓ சாரி நீங்க தானா அது..ரொம்ப தேங்க்ஸ் ஹெல்ப் பண்ணதுக்கு” என சின்னதாய் சிரித்தவள் ஏஞ்சலிடம் கூறிவிட்டு வகுப்பறைக்குச் சென்றுவீட்டாள்..
என்ன டியர் நியூ அட்மிஷனா???
“ஆமா அண்ணா..செம ப்ரிலியண்ட்..பட் கொஞ்சம் சைலண்ட்..”
ம்ம் முகத்துல இருக்குற திமிரே சொல்லுதே படிப்பாளினு என்றவன் அத்தோடு அந்த பேச்சை விட்டு தங்கள் அரட்டையை தொடர்ந்தான்..
மக்களே ஆரம்பபம் எப்படி இருக்கிறது..சோ ஹீரோ செம ஜாலி ஹீரோயின் ஒன்லி அவங்க ஜோலி..கருத்துக்களுக்கு காத்திருக்கிறேன்..
தொடரும்
{kunena_discuss:1167}