ஒரு நிமிடம் அவள் தயங்கி தனக்கு இது மாதிரி தெரியாது என்று பின்வாங்கியிருந்தால் ஒன்றுமே செய்திருக்க முடியாது.
மகன் இப்போது இருக்கும் நிலையில் அவனுக்கு பெண் தாருங்கள் என்று யாரிடமும் போய் அவரால் நிற்க முடியாது.
ஏன் அவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடித்த சுருதி கூட தயங்கத்தானே செய்தாள்.
நாளைக்கே மகனுக்கு நினைவு திரும்பிவிட்டால் அந்த தென்றலை விரட்டிவிட்டு தான் ஆசைப்பட்ட மாதிரியே சுருதியைத் திருமணம் செய்து வைத்துவிடலாம்.
வேறு யாரையும் பெற்றோருடன் இருக்கும் ஏழைப்பெண்ணை திருமணம் செய்துவைத்தால் கூட நாளை மகனை விட்டுப் பிரிய மாட்டேன் என்று சொல்வதற்கு வாய்ப்புண்டு. நியாயம் கேட்டு போராடச் செய்வார்கள்.
இந்த வள்ளியம்மையும் அதற்கு ஒத்து ஊதுவாள். மகன் கூட தாயின் பேச்சைக் கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/10451-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-11">Episode 11
தொடரும்...
{kunena_discuss:1154}