(Reading time: 22 - 43 minutes)

அழகுநிலா ஆதித் வந்ததும் ஆர்வமான பார்வை பார்த்து தலை அசைவுடன் புன்னகை வீசி பக்கத்தில் இருக்கும் தன பாஸ் மாதேஷை சாடையாக காண்பித்து வெளியில் போனதும் பேசறேன் என்று லிப் மூவ்மெண்டில் மற்றவர்கள் பூமிபூஜையில் ஈடுபாட்டுடன் இருக்கும் போது ஆதித்திடம் கூறினாள். ஆதித்துக்கு அவளின் ரகசிய பேச்சு அந்த செயல் ஜிவ் என்று கிரக்கத்தை கொடுத்தது. வர்சாவை தொட்டு பார்க்கவேண்டும் என்ற ஆசை அவனுக்கு முன்பு உண்டாகியிருக்கிறது. ஆனால் அவனை மயக்கும் சிரிப்பும் அழைப்பும் வர்ஷாவிடம் இருக்கும். ஆனால் அழகுநிலா அந்தமாதிரியான ஆதித்தை கவரும் எந்த முயற்சியும் எடுக்காமலே இயல்பான பேச்சிலேயே அவனின் மனதை அவள் உணராமலேயே வீழ்த்தினாள், அடிக்கும் அழகுடன் வர்ஷா அவளின் அருகில் நிற்கும் போதிலும் அவன் கண் அழ்குநிலாவை மட்டும் நாடியதை உணர்ந்தவன், எதற்காகவும் இனி எந்த சூழ்நிலையிலும் அழ்குநிலாவை தன்னால் இழக்கமுடியாது என்பதை தெரிந்துகொண்டான் .

நல்லநேரம் முடிவதற்குள் பூமிபூஜை ஏற்பாடு ஆரம்பமானது. அங்கு வர்ஷாவை வி ஐ பி யாக உணரவைத்தான் மாதேஷ். வர்ஷவிற்கு ஆதித் தன்னை கண்டு கொள்ளாமல் இருந்தது பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது. அவளை ஒரு கல்லையும் மண்ணையும் பார்ப்பதை போல பார்த்துவைப்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் வந்ததில் இருந்து அவனது பார்வை அடிக்கடி அழகுநிலாவை தொடர்வதை கண்டவளுக்கு உடம்பெல்லம் எரிந்தது .

வர்ஷா பூஜையை முன்னெடுத்து செய்வதில் பங்கெடுத்துக் கொன்டாலும் ஒரு கண் ஆதித்தின் மீது வைத்திருந்ததாள். எனவே ஆதித்துக்கும் அழகுநிலாவிற்கும் இடையிலான சாடை பேச்சையும், ஆதித்தின் கண்ணில் வழிந்த அழகுநிலாவின் மீதான ஆர்வமான பார்வையையும் கண்டுகொண்டாள்.

முன்பெல்லாம் ஆதித்துக்கும் வர்ஷாவிற்கும் சண்டை வரும்போது எல்லாம் ஆதித் கடுமையாக பேசினாலும், அடுத்து அவனின் முன் வர்ஷா போய் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு நின்றாள், ஆதித் தன் கோபத்திற்கு தன்னிலை விளக்கம் சொல்லாவிட்டாலும் அவளுக்கு எதேனும் காஸ்ட்லி கிப்டை நீட்டி வர்சாவை மலை இறங்க வைத்து விடுவான்.

அதே போன்று இப்பொழுதும் காம்பிரமைசாக ஆதித் ஏதாவது செய்வான் என்று வர்ஷா எதிர்பார்த்திருக்க, ஆதித்தோ அவளை முற்றிலுமாக புறக்கனித்தான். ஆனால் தன்னைவிட அழகுநிலா எந்தவித்தத்திலும் உயர்ந்தவளாக அவளுக்கு தெரியவில்லை அப்படியிருந்தும் அவள் மேல் ஆதித் காட்டிய ஆர்வம் அவளை காயப்படுத்தியது .

அழகுநிலா வர்ஷவிடம் பேச பலமுறை முயன்று கொண்டிருந்தாள், ஆதித்தின் புறக்கணிப்பில் மன அழுத்தமடைந்த வர்ஷா, அந்த கடுப்பை ஒவ்வொருமுறை அழகுநிலா தன்னிடம் பேச வரும் போது காட்டிக்கொண்டிருந்தாள்.

வர்சா அழகுநிலாவை தண்ணீர் பாட்டில் எடுத்துத்தரவும், கீழே கிடந்த பேனாவை குனிந்து எடுக்கச்சொல்லியும் அதிகாரம் செய்தாள். மாதேசும் செய்யேன் என்ற பாவனையோடு பார்த்தது அழகியை பியூன் லெவலுக்கு இறக்கி அவமானப்படுத்தியது.

இதையெல்லாம் பார்த்தும் பார்காதவாறு இருந்த ஆதித்துக்கு அழகுநிலாவின் மேல் கோபம் ஏற்பட்டது. என்னிடம் மட்டும் வாயாடத் தெரியுது இவ சாப்ட்வேர் இஞ்சினியர்தானே! என்னவோ ப்யூன் லெவலில் வேலை வாங்குறாங்க? இவளும் எதிர்க்காமல் அடிமை மாதிரி இருக்காளே என்று முறைத்து பார்த்தான் அழகுநிலாவை.

அழகுநிலாவின் நிலைதான் மோசமாக இருந்தது. ஏற்கனவே மாதேஷ் மற்றும் வர்ஷாவின் செயல் அவளை மனதளவில் மிகவும் காயப்படுத்தியது என்றால் ஆதித் அவளை முறைப்பதை பார்த்து இன்னும் துவண்டுபோனாள்.

அழகுநிலா ஒன்றும் பயந்த சுபாவம் கொண்டவள் அல்ல. ஆனால் தன்னை வருத்துவது ஆதித்தின் காதலிதானே என்ற எண்ணத்தாலும் தன்னால் காயம் அடைந்த வர்ஷா என்னை காயப்படுத்துவதன் மூலம் ஆத்திரம் தணிக்க நினைக்கிறாள். ஆதித்துக்காக இதை பொறுத்துத்தான் போக வேண்டும் என்ற எண்ணத்தில் இயந்திரத்தனமாக இருந்தாள் அழகுநிலா.

ஆனால், அங்கு ஆபீசில் இருந்து வந்த சிலரில் இருந்த ரமேசுக்கு அழகுநிலாவை அவமானப்படுவதை சகிக்கமுடியாமல் அவளுக்கு வேலையில் தன்னால் ஆன உதவிகளை செய்தான்

அப்பொழுது ஆதித்தை பார்த்த ரமேஷ், சார் நீங்க என்று அவனிடம் சென்றான் அவனும் நான் தான் இங்க பில்டிங் கட்டிக்கொடுக்கப்போறேன் என்றவன், அவனிடம் தன மொபைல் நம்பரை கொடுத்து மற்றவர் அறியாமல் ஆபீசில் பிரச்சனை வரும் போது ஏதேனும் அவளுக்கு உதவி தேவைபட்டால் உடனே இந்த நம்பரில் இருந்து என்னை காண்டாக்ட் பண்ணுங்க என்று லோ வாய்சில் அவனிடன் போகிற போக்கில் சாதாரணமாக பேசுவதுபோல் சொல்லி சென்றான்.

பூமிபூஜை முடிந்ததும் பக்கத்தின் இருந்த ஸ்டார் ஹோட்டலில் ஒரு சுமால் கெட்டுகதருடன் காண்ட்ராக்டில் சைன் செய்வதற்காக புறப்பட்டனர். அழகுநிலா மாதேசின் காரில் ஏறபோகும்போது அங்கிருந்த வர்ஷா “ஏய்” இந்தா என்று தன் பர்சில் இருந்து நூறு ரூபாய் தாளை அவளிடம் நீட்டி நீ எங்க பின்னாடியே ஆட்டோ பிடித்து வந்திரு. லேட் செய்து மாதேஷ்சை டென்சன் செய்திடாதே! என்றவள், மாதேஷிடம் அவள் நம் கூட காரில் வருவது எனக்கு கம்பர்டபிளா இல்லை மாதேஷ் என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.