அவளின் வார்த்தைகளில் குருகிபோய்நின்ற அழகுநிலா, இல்ல எனக்கு ரூபாய் வேண்டாம் என்னிடம் இருக்கு என்று கூறுவதை காரில் ஏறப்போகும் ஆதித் கேட்டதும் அவனால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வேகமாக அவளின் அருகில் வந்தவன் வா என்று அவளின் கைபிடித்து இழுத்துப் போய்கொண்டே திரும்பி வர்ஷாவை எரிக்கும்படி பார்த்துக்கொண்டு போனான்.
அப்பொழுது மாதேஷ், “மிஸ் அழகுநிலா உங்களிடம் லேன்ட் டீடெய்ல் அடங்கிய அக்ரீமன்ட்டுக்கு தேவையான டாக்குமென்ட் இருக்கு அப்படியிருக்கும் போது எப்படி நீங்க ஆதிதிதுடன் போகலாம் என்று கூறி அவளை தடுத்தான்
உடனே ஆதித் அவள் கையில் இருந்த பைலை பறித்து அவனின் அருகில் இருந்த ரமேசிடம் உங்க பாஸ்கிட்ட கொடுத்திடுங்க என்றான், அப்பொழுதும் அவ என்னுடைய ஸ்டாப் என்று கர்ஜித்த மாதேஷ், அழகுநிலா... நீ இப்போ ஆட்டோவில் தான் வரணும் என்று ஆர்டர் போட்டான் உடனே அவளை தனக்கு முன்னால் நிறுத்தி எங்கே திரும்பச் சொல்லு என்னை மீறி அவள் நீ சொல்வதை கேட்டுவிடுவாளா? பார்த்துவிடுவோம் என்று கூறினான்
இவர்களின் வாக்குவாதத்தை பார்த்து ஐயோ இந்த மாதேஷ் இப்போ குழப்பம் பண்ணி அக்ரீமன்ட் சைன் பண்ணமுடியாமல் செய்திடப்போறான் என்று வேகமாக அவனை மாதேஷ் என்று கூப்பிட்டபடி சமாதானப்படுவதற்கு வருவதற்குள், அழகுநிலா ஒரு அடி பின்னால் வைத்து ஆதித்தின் அருகில் நின்றவள், மாதேசிடம் பாஸ் நான் இவர் கூட வருகிறேன் என்று அழுத்தத்துடன் கூறினாள். ஆதித் அழகுநிலா தன அருகில் வந்து நின்றதுமே மீண்டும் அவளின் கை பிடித்துக்கொண்டான்.
தன கையை ஆதித் பிடித்தஉடனே அழகுநிலா ஹஸ்கிவாய்சில் அவனிடம் கொஞ்சம் கையை விடுறீங்களா! அங்க பாருங்க... உங்க வர்ஷா பார்கிறார்கள், என்று தன்னுடைய கையை விடுவிக்கப் பார்த்தாள். அதற்கு ஆதித் இப்போ ஒழுங்கா நிக்கப்போகிறாயா? இல்ல உன்னைத் தூக்கி காருக்குள் போடவா? என மிரட்டல் விடுத்தான் அவளை போன்ற ஹஸ்கி வாய்சிலேயே.
அவனின் வார்த்தைகளில் அதிர்ந்து அவனை அழகுநிலா பார்க்கும்போது அந்த இடத்தில் ஒரு ஆட்டோ வந்து நின்றது அதில் இருந்து இறங்கியவர்கள் அழகுநிலாவின் அண்ணனும் முரளிதரனும். ஆனால் அழகுநிலாவும் மற்றவர்களும் வந்தவர்களை கவனிக்கும் நிலையில் இல்லை.
இறங்கிய குமரேசனின் கண்களில் பட்டது அழகுநிலா வேறு ஒரு ஆணின் கைபிடித்து நின்று கொண்டிருந்ததைத்தான். முரளிதரன் குமரேசனிடம் சொன்னான் உங்க தங்கையை நான் கோவில் படியில் ஒருத்தருடன் நெருக்கமாக ஏறியதை பார்த்தேன் என்றேனே, அவரின் அருகில் தான் இப்பொழுது உங்க தங்கை நிற்கிறாள் என்றான்
அப்பொழுது மாதேஷ் கோபமாக மிஸ் அழகுநிலா நீங்க எப்ப என்னை மதிக்காமல் இன்சல்ட் செய்தீங்களோ இனி என் கம்பெனியில் உங்களுக்கு இடம் இல்லை உங்க சர்டிபிகேட்டை நீங்க எப்படி என்னிடம் இருந்து வாங்குகிறீர்கள் என்று பார்ப்போம் என்று கண் சிவக்க மிரட்டினான் அழகுநிலாவை.
அவன் கூறியதும் ஆதித் “நீ என்ன அவளை வேலையில் இருந்து தூக்குறது பொறுக்கி நாயே, இனி அவ உன் அபீஸ் பக்கம் மழைக்கு கூட ஒதுங்க மாட்டாடா. உன் கூட சுத்துவானே மினிஸ்டர் மகன் நரேன், அவனின் ஐ போன் இப்போ என் கையில் இருக்குடா “இனி இவள மிரட்டுவ” ஏதாவது மிரட்டுனேனு தெரிஞ்சா அதில் உள்ள உங்க வண்டவாளத்தை உடனே உலகம் முழுவதுவும் நெட்டில் வைரலாக பார்க்கும் படி செய்துவிடுவேன என்று கர்ஜித்தான்.
. இதை எதிர்பார்க்கவில்லை மாதேஷ். அந்த போன் அழ்குநிலாவிடம் தான் இருக்கும். வேலையை விட்டு தூக்குகிறோம் என்றால், மிடில் கிளாஸ் காரிதான வந்து வேலைக்காக கெஞ்சுவாள்! அப்போ நரேனை வைத்து அவளை கார்னர் செய்து அந்த மொபைலை வாங்கலாம் என்று அவன் நினைத்துக்கொண்டு பேசினான் மாதேஷ். ஆனால்! அது இப்பொழுது ஆதித்தின் கைக்கு போய்விட்டது என்று தெரிந்ததும் ஆடிப் போய்விட்டான் அவன். அதில் தன் வீடியோவையும் பார்த்திருகிறான் என்றதும் பயம் தொற்றிக்கொண்டது அவனை.
மாதேஷ் அழ்குநிலாவை பார்த்து ஏய் அழகுநிலா நீ யார்கூட மோதுகிறாய் என்று தெரிஞ்சுதான் மோதுகிறாயா? ஒழுங்கா அவன் கிட்ட இருந்து ஐ போனை வாங்கி கொடுத்திடு இல்லேனா பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று அவளை நோக்கி வந்தான்.
அழகுநிலாவை தன பின்னல் இழுத்து நிறுத்திய ஆதித் உனக்கு எல்லாம் வாயால் சொன்னா பத்தாது போல என்றவன் தன பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து உன்னையும் உன் கூட வீடியோவோயில் இருக்கிற பொறம்போக்கு எல்லோரையும் ஊரே காரித்துப்புரமாதிரி செஞ்சிரட்டுமா? என்று கேட்டுகொண்டே போனை இயக்க ஆரம்பித்தான்.
உடனே மாதேஷ், ஏய்.... வேண்டாம் ஆதித். அப்படியெதுவும் பண்ணிடாத என்றதும், அவன் முகத்தை வெறுப்புடன் பார்த்த ஆதிதிடம் “ஆதித் வேணாம் இதுல இருந்து நீ ஒதுங்கிக்கோ அவளுக்காக என்கிட்டே மோதுறதுக்கு அவ என்ன உன் வருங்காலப் பொண்டாட்டியா? என்று அவனை போலவே மாதேசும் சிலிர்த்துக்கொண்டு பேசினான்.