விக்ரம் தன் அறையினுள் உறங்கிக்கொண்டு இருந்தான்.. அதைக்கண்ட அம்மு மெல்ல அவனருகே சென்றாள்.. பின் நெற்றியில் முத்தமிட்டவள்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் காதலா.. என மெல்லிய குரலில் கூறவும் விக்ரம் தூக்கத்தில் இருந்து எழவும் சரியாய் இருந்தது..
விக்ரம் தன் முன் அழகாய் ரெடியாகி நின்ற தன் அம்முவை கேள்வியாய் பார்த்தான்.. பின் டைம் பார்த்தவன் புருவத்தை உயர்த்தியவன்..
“அதிசயமாய் ஏழு மணிக்கே ரெடியாகி இருக்கிற.. என்ன விசயம்?..”
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்ரம்மாமா..” என அழகாய் புன்னகைத்து பதில்கூறிய அம்முவை கண்டவனுக்குள் என்னன்னவோ விபரீதமான எண்ணங்கள் அவன் மனதில் தோன்றியது.. பின்னே.. அவன்பாட்டிற்கு தூங்கிக்கொண்டு இருந்தான்.. இவ பாட்டுக்கு வந்து முதல் ஆளா வாழ்த்து சொல்லுறா.. சரியான மோகினி.. பாரு எனக்கு பிடித்த ஆகாயநீலத்தில் ட்ரஸ் பண்ணிக்கிட்டு.. அதுவும் கண்ணுக்கு மை வைத்து அழகாய் அலங்காரம் பண்ணிக்கிட்டு வந்து அப்படியே மயக்குறளே.. ஐய்யோ இவள என்ன பண்றது.. என்றவாறு மனதில் புலம்பினான்.. பின் அவளை ஆவலுடன் பார்த்தவன் இவ இப்படியே நிற்கிறாளே.. ஒழுங்கா போயிடு இல்லனா முத்தம் குடுத்துடபோறேன் என பயப்பட அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது..
அவ என்ன சொன்னா.. பிறந்தநாள் வாழ்த்து சொன்னா.. இல்லை இல்லை இல்லை.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்ரம்மாமா னு சொன்னா.. விக்ரம்மாமாவா.. என கண்களை விரித்தவன்.. அவள்புறம் திரும்பி,
“இப்போ என்ன சொன்ன?..”
“இப்பதான் உங்களுக்கு பேசனும்னு தோனுச்சா.. நான் சொன்னதுகூட கவனிக்கலயா..” என கோபமாய் கேட்டாள்..
“அதைவிடு.. என்ன சொன்ன..”
“என்ன, என்ன சொன்னேன்? வாழ்த்து சொன்னேன்.. அதுக்கு ஒரு தேங்க்ஸ் சொன்னீங்களா..”
“ஏய், வாழ்த்துக்கு அப்புறம் என்னை என்ன சொல்லி கூப்பிட்டனு கேட்டேன்..”
“என்ன சொன்னேன்” என பொய்யாய் யோசித்தவள்.. “ஆங்.. ஞாபகம் வந்துடுச்சு.. விக்ரம்மாமானு சொன்னேன்” என குறும்புடன் கூறியவள். பின், “என்ன பண்றது.. நீங்க என்னை விட மூத்தவரு.. அங்கிள மாமானு தானே கூப்பிடுவாங்க என கூறியவளை முறைத்தவன் அவளை பிடிக்க துரத்த அவள் சிரித்துக்கொண்டே ஓடினாள்.. வீட்டிற்குள் ஓடிக்கொண்டிருந்தவள் வெளியே தோட்டத்தில் நுழைய அவளை பிடிக்க பின் தொடர்ந்து ஓடினான் விக்ரம்..
தோட்டத்தில் ரோஜாசெடிகளுக்கு இடையே ஓடிய தன் நிலாவை ரசித்தவன் “நில்லு அம்மு” என கூறியபடி துரத்தியவன் ஒருகட்டத்தில் அவளை நெருங்க, அவளின் இடையில் தன் கைவைத்து இழுக்க தன் நெஞ்சில் வந்து மோதினாள்..அவளின் பின்புறம் நின்றுகொண்டு அவளிடையை கை வைத்து இறுக்க.. வெட்கத்தில் அவள் முகம் சிவந்ததை ரசித்தான்.. அவள் காதோரம் அவன் மூச்சுகாற்றுபட கண்களை இறுக்க மூடினாள் கூச்சத்தில்..
அவளின் காதோரம் “என்னையா அங்கிள்னு சொன்ன?.. இப்போ சொல்லு பார்க்கலாம்” என ஆழ்ந்த குரலில் அவன் கூற.. அவள் அமைதியாய் கண்களை மூடி நின்றாள்.. அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் விக்ரம்..
க்கும்.. என தொண்டையை செருமும் ஒரு குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டு விலக மித்ரா கலகலவென சிரித்தவள்.. “இங்க என்ன நடக்குது அண்ணா..” என வினவ, அவளைக்கண்டு தடுமாறியவன் அவள் கையில் இருந்த போனை கண்டு,
“போனில் யாரு?..”
“நந்தினிஅத்தைதான்..”
“ஓ.. நான் அவங்ககிட்ட பேசனும்” என்றவன், அவளிடமிருந்த போனை பிடுங்கி அங்கிருந்து வேகமாய் கிளம்பினான்..
அதைக்கண்டு மறுபடியும் சிரித்த மித்ரா, அம்முவிடம் திரும்பி,
“அண்ணா கிரேட் எஸ்கேப் இல்ல.. பாவம் நீதான் மாட்டிக்கிட்ட..”
“நான் ஏன் மாட்டனும்.. நான் யாரைக்கண்டும் பயப்பட மாட்டேன்..” என கெத்தாக அம்மு கூறினாள்..
“ஓ.. அப்போ என் அண்ணா கூட ரொமான்ஸ் பண்ணியதை ஒத்துக்கிற.. ம்ம்.. அதெப்படி சரியாகும்..”
“ஏன் சரியாகாது.. நான் உன் அண்ணியாக போறவ.. மரியாதையா பேசி பழகு” என்றவளை கண்டு மித்ரா, ஒரு கணம் திகைத்தவள் பின் சிரிக்க ஆரம்பித்தாள்..
“ம்ம்.. ஒரு வழியா ஒத்துக்கிட்ட.. வாழ்த்துக்கள் அண்ணி..” என கேலி செய்தவள் பின், “அதெல்லாம் சரி, என் அண்ணாவுக்கு பர்த்டே கிப்ட் கொடுத்துட்டயா.. ரொமான்டிக் கிப்ட்?..”
“முதலில் உன் அண்ணா லவ் சொல்லட்டும்.. அப்புறம் கிப்ட் கொடுக்கலாம்” என்றவள் குறும்புடன் சிரிக்க. அதைகண்ட மித்ரா..
“இல்லை. நீ ஏதோ பிளான் பண்ற, சரி இல்லையே.. என்ன கிப்ட்னு சொல்லுடி..”
“உன் அண்ணாக்கு பிடிக்காத ஒன்னை கிப்ட் பண்ணபோறேன்..”
“என்னது?!!!.. ஏன் பிடிக்காததை கிப்ட் பண்ணனும்?”
“அது அப்படிதான்..என்கிட்ட லவ் சொல்லாததுக்கு பனிஷ்மென்ட்.. எப்போதும் என்னை திட்டிட்டு இருக்கறதுக்கு பனிஷ்மென்ட்”
“இது என்னவோ எனக்கு சரியாய் படல..”
“எல்லாம் சரி வரும்.. நீ கவலைய விடு.. கிப்ட் பார்சல் வந்துடும்.. வா.. போய் உன் அண்ணா கத்துறதை பார்க்கனும்” என சிரித்தவள் அவளைக்கூட்டிக்கொண்டு உள்ளே சென்றாள்..
தொடரும்
{kunena_discuss:1158}