(Reading time: 9 - 18 minutes)

ஈவினிங் 6 மணி பர்த்டே பார்ட்டி தொடங்கியது.. யாரையும் அழைக்கவில்லை, மித்ரா,அம்மு, தாயம்மா மட்டும் தான்.. மித்ராவும் அம்முவும்தான் அனைத்து டெகரேசனும் செய்தனர்.. மூவரும் விக்ரமுக்காக காத்திருக்க படிகட்டிலிருந்து கம்பீரமாய் இறங்கி வந்தான் விக்ரம்.. பின் அனைவரும் பர்த்டே சாங் பாட, கேக் கட் செய்தவன் மித்ராவுக்கு ஊட்ட, அவளும் அண்ணாவுக்கு ஊட்டிவிட்டாள், தாயம்மாவுக்கு கேக் தந்துவிட்டு பின் அம்மு பக்கம் திரும்பியவன் அவளுக்கும் கேக் ஊட்டிவிட அவளும் மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டு அவனுக்கும் ஊட்டி விட்டவள் அவன் கன்னத்தில் சிறிது க்ரீமை தடவிவிட்டு ஓட அவனும் அவளை துரத்தவும் அதைகண்ட தாயம்மா சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து தன் அறைக்கு சென்றார்..

விக்ரம் அம்முவை பிடித்து தன் கன்னத்தை அவள் கன்னத்தோடு உரசியவன் அவளிடம் என் கிப்ட் எங்க? என கேட்டான்..

“நீங்கதான் ஏதோ கேட்கனும்னு சொன்னீங்க..”

“ம்ம்.. எனக்கு நீ இப்போ ஒரு பாட்டு பாடனும்..”

“ம்ம்.. என்ன பாட்டு?..”

“அது உன் விருப்பம்..”

“சரி.. நான் பாடுறேன்.. என்கூட சேர்ந்து மித்ரா ஆடனும்..” எனவும் மித்ராவின் பக்கம் திரும்பிய விக்ரம் “எனக்காக” எனவும் அவளும் தயக்கத்துடன் சம்மதித்தாள்..

“கவலைப்படாத சங்கு, நானும் உன்கூட ஆடுவேன்..” என்றவள் என்ன பாடல் பாடுவதென்று யோசித்தாள்.. பின் தன் மனதில் இருப்பதை உணர்த்தும் விதமாய் பாடலை யோசித்து பாட ஆரம்பித்தாள்..

உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்

எழுந்ததும் ஏன் மறுபடி விழுகிறேன்... என பாட ஆரம்பித்தவள் விக்ரமின் முகம் பார்த்தாள்.. அவனும் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.. பின் மித்ராவுடன் ஜோடியாய் மெதுவாய் ஆடியபடி பாட்டை தொடர்ந்தாள்..

உன் பார்வையில் தோன்றிட அலைகிறேன்

அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்.....

ஓர் நொடியும் உனை நான் பிரிந்தால்

போர்க்களத்தை உணர்வேன் உயிரில்

என் ஆசை எல்லாம் சேர்த்து

ஓர் கடிதம் வரைகிறேன்

அன்பே ....

உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்

எழுந்ததும் ஏன் மறுபடி விழுகிறேன்

தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே

நான் உனை பார்கிறேன் அன்பே.....

சாரலாய் ஓர் முறை நீ எனை தீண்டினாய்

உனக்கது தெரிந்ததா அன்பே....

என் மனம் கானலின் நீர் என ஆகுமா

கைகளில் சேருமா அன்பே

பேசிக்கும் காலம்தான் வீணென போகுமா 

நினைவுகள் சேர்க்கிறேன் இங்கே

ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே

விழுகிறேன் அன்பே

பூக்களில் தோன்றிடும் வண்ணங்கள் போலவே

பெண்களின் நெஞ்சம்தானடா

வண்ணத்து பூச்சியின் வண்ணங்கள் போலவே

ஆண்களின் நெஞ்சம்தானடா

வண்ணங்கள் வேறென தோன்றிடும் போதிலும்

எண்ணங்கள் சேருமா அன்பே

வண்ணத்து பூச்சியின் சிறகுகள் மோதுதே

இதழ்களும் உள்ளதே இங்கே.

ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே

விழுகிறேன் அன்பே

உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்

எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்.. என பாடலை முடித்து விக்ரமின் முகம் பார்த்தாள்.. அவன் அவள் அருகே வந்து அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றான்.. அம்முவும் புரியாமல் அவனை பின் தொடர்ந்தாள்..

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1158} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.