அவளின் பயந்த முகத்தை பார்த்தவன் அவளின் அருகில் வந்து காரின்கதவை திறந்தவன் ஏறு அழகுநிலா. நான் உனக்கு கெடுதல் நினைக்கவோ செய்யவோ மாட்டேன் என்றான்.
அழகுநிலா காரில் ஏறி உட்கார்ந்ததும் அந்தபக்கம் வந்து ட்ரைவர் இருக்கையில் அமர்ந்தவனிடம் அப்போ என்னை கல்யாணம் என்று இனி பேச மாட்டீங்க தானே..... என்று திரும்பவும் ஆரம்பிக்கவும்
காரை ஓடவிட்டபடி நான் எப்போ அப்படி சொன்னேன் உனக்கு கெடுதல் செய்யமாடேனு தான் சொன்னேன் என்றான்.
உடனே அப்போ வர்ஷா அவங்களா நீங்க லவ் பண்ணது என்று மறுபடியும் பழைய இடத்திற்கே வந்ததும் ஏய்.....என்று பலமாக கத்தியவன் வாயில் ஒரு விரலை வைத்து ஸ்...சு இனி உன் வாயில் இருந்து வர்ஷா என்ற வார்த்தையோ நான் அவளை லவ் பண்ணினேன்ற மாதிரி பேச்சையோ நான் கேட்கவே கூடாது. நானே அவளை வேண்டாம்னு நெனச்சதுக்கு பிறகு நீ ஏன்டி அவளையே திரும்ப திரும்ப என் கூட இணைத்துப் பேசுற என்றான் கோபத்துடன்.
அவனது கோபத்திலும் தன்னை டி போட்டு அவன் பேசியதாலும் அதிர்ச்சி மற்றும் ரோசம் அடைந்த அழகுநிலா, ஹலோ.. என்ன நீங்க எப்படி ‘டி’ போட்டு பேசலாம்? நான் ஒன்னும் உங்க காதலியோ மனைவியோ கிடையாது. நான் என் மனசில் பட்ட கருத்தக் கூட சொல்லி உங்க லைப் இல் தலையிடக் கூடாது. ஆனா யாரோ ஒரு ராசாத்தி பெத்த இந்த அழகுநிலா வாழ்க்கையை மட்டும் உங்க இஷ்டத்துக்கு நீங்க பந்தாடலாமோ? என்று கேள்வி கேட்டாள்.
அவள் அவ்வாறு சொன்னதும் மனதிற்குள் “யப்பா... பாய்ன்ட் பாய்ண்டா பேசுறாளே, என் பாடு திண்டாட்டம் தான்” என்று நினைத்தவன், தெனாவெட்டாக ஆமா... அப்படித்தான் இப்போ. அதுக்கு என்ன செய்யனும்ற முயல்குட்டிமாதிரி இருந்துகிட்டு அரட்டியா பார்குற?, யார்ட இந்த ஆதித்கிட்டயா? அடங்கி உட்காரு எனக்கு அரவணைக்கவும் தெரியும். அடக்கவும் தெரியும் என்றவன் யோசனையுடன் இவள நம்ம அம்மாகிட்ட கூட்டிடுப்போனா அவங்களையும் எனக்கு எதிரா திருப்பிருவா போலயே...., இவள என்ன செய்ய.... என்று அவன் யோசிக்கும் போதே,
அழ்குநிலாவும் மனதிற்குள் இவன் நாம சொன்னா அடங்க மாட்டான், போனதும் ஜானகி ஆண்டிகிட்ட எல்லாத்தையும் சொல்லனும். அவங்க கண்டிப்பா எனக்கு இவரை கல்யாணம் செய்ய இஷ்ட்டம் இல்லன்னு சொன்னா புரிஞ்சுக்குவாங்க. நீங்க என்னையா அடக்கப் பார்கிறீங்க உங்க அம்மாவ வச்சே உங்களை நான் அடகுறேனா இல்லையா? பாருங்க என்று மனத்திற்குள் நினைத்தபடி ஆதித்திடம் மிஸ்டர் ஆதித் யாரை யார் அடகுராங்கனு பார்ப்போம்! என்றபடி கண்ணை மூடி அமர்ந்துவிட்டாள்.
இங்க பாருடா கோபத்தில் என்னை மிஸ்டர் ஆதித்துனு ரொ.....ம்ப மரியாதையா சொல்றத... என்று அவளை வம்பு பேச்சுக்குள் இழுக்க முயன்றான். ஆனால் அழகுநிலாவோ அவன் பேச்சை பொருட்படுத்தாமல் இமை மூடி அமர்ந்து கொண்டாள்.
கார் வந்து நின்ற பின் ஆதித் கதவை திறந்து இறக்கும் ஓசையில்தால் கண் விழித்தால் அந்த கார் ஒரு பங்களாவின் முன் நிற்பதை பார்த்த அழகுநிலா அது முன்பு தான் வந்த ஆதித்தின் வீடு கிடையாதே! என்ற யோசனையுடன் கீழே இறங்கினாள். அப்பொழுது அங்கு விரைந்து வந்த வேலையாளிடம் டிக்கியில் இருக்கிற எல்லாத்தையும் என் ரூமில் கொண்டுபோய் வைங்க என்று கூறிக்கொண்டு இருந்த ஆதித்தை பார்த்து இது யார் வீடு? என்று கேட்டாள்.
அவளை திரும்பி பார்த்தவன் நம்ம வீடுதான் என்று அவளுடன் இணைந்து அந்த மாளிகையின் வாசலுக்கு வந்தபின், அழகுநிலா தயக்கத்துடன் இங்க எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தீங்க? ஜானகி ஆண்டிகிட்ட தானே கூப்பிட்டு போறதா சொல்லியிருந்தீங்க என்று கேட்டாள்.
அவளின் கை பிடித்து எல்லாம் இங்க வச்சே பேசணுமா உள்ளபோய் உன் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்றேன் என்றவன் அவளை இழுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.
அவளால் ஆதித்தை தவறானவனாகவோ! கீழ்த்தரமாகவோ! நினைக்க முடியவில்லை. எனவே என்னதான் சொல்கிறான் பார்ப்போம் என்று எண்ணியபடி நுழைந்தவள் அந்த வீட்டின் உள் அழகும் தூய்மையும் நேர்த்தியும் அவளை ஆ..... வென்று வாய் பிளக்க வைத்தது.
அவள் வீட்டின் அழகை ரசிக்கும் ரசிகையாக மாறி சுற்றி பார்த்துக்கொண்டே, உங்க இந்த வீடு சான்சே இல்லை சூப்பரா இருக்கு.... என்று சொல்லியபடியே அவனின் பின் சென்றாள்.
அதற்கு ஆதித் நான் ஸ்டார் ஹோட்டலும் மால்களும் கட்டித்தருபவன் என் வீட்டை இந்த அளவுக்குக் கூட கட்டாவிட்டாத்தான் ஆச்சர்யம் என்று அவளின் பிரமிப்புக்கு அவசியமில்லை இது எனக்கு சாதாரனமானது என்ற பாவனையில் அவகளுக்கு சொல்லிக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்தான்
அவர்கள் இருவரின் பின்னால் வந்த வேலை காரரிடம் இந்த ரூமிற்குள் இருந்த மற்றும் ஓர் அறையை காண்பித்து அங்க எல்லாத்தையும் வச்சுடுங்க என்றதும் அவன் வைத்துவிட்டு வேற எதுவும் செய்யனுமுங்களா ஐயா என்று கேட்டபடி ஆதித்திடம் வந்தான்
ஆமா..! என்றவன் தன வேலட்டை எடுத்து அதில் இருந்து சில ஆயிரங்களை கையில் எடுத்தவன் இனி எங்க இரண்டு பேருக்கும் சாப்பாடு இங்கதான் நீங்க என்ன செய்றீங்க சமையலுக்கு தேவையான எல்லாமும் வாங்கிகோங்க. சமையல் உங்களால செய்யமுடியாட்டி யாரையாவது உங்ககூட சமையல் வேலைக்கு ஒருத்தரை வேலைக்கு வச்சுக்கோங்க. சம்பளம் நான் கொடுத்துடுறேன் என்றான்