அவனும் தாராவும் கையேடு கை கோர்த்து நின்றது... அவர்கள் இருவரும், தனி உலகிலிருந்து வெளி வருவதற்குள், காவ்யா மூலமாக அறிந்துக்கொண்ட இவர்களின் சந்திப்புகள்... காவ்யா அறிந்தவரை தாராவின் மனதில் உள்ளவை... அவர்களின் குடும்பம்... என்று இப்போதைக்கு தேவையானவற்றை அறிந்திருந்தார்...
“இருந்தாலும் தாராவோட வாய் மொழியா தெரிய வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம், ககன். “
“ஹ்ம்ம்.... இன்னிக்கு முடியலம்மா... கண்டிப்பா கூடிய சீக்கரம் பேசிடறேன்.... “என்று ககன் உறுதியாக கூற...
“ஹ்ம்ம்.. முதல்ல நீ உறுதியா தாராகிட்ட சொல்றதுக்கு முன்னாடி, அப்பாகிட்ட தான் விஷயம் முழுக்க சொல்லணும்... புரிஞ்சிதா கண்ணா... அப்பா என்ன சொன்னாலும் உன் நல்லதுக்குதான் சொல்லுவார்.. நூறு சதவிதம் அதுல உங்களுக்கு நன்மை மட்டும் தான் இருக்கும்... அதை மட்டும் மனசுல நல்லா பதிய வெச்சிக்கோ... பதிய வெச்சா மட்டும் போதாது.. நினைக்கவும் வேணும்“ என்று சற்று கண்டிப்புடன் கூறினார்.
அவரின் கவலை அவருக்கு...!!
ஏன் கவலை..?! எதற்கு..??!! காவ்யா பகிர்ந்த விஷயங்களில் ஏதாவது இருக்குமோ...!!!
தொடரும்
{kunena_discuss:1151}