‘அழகா இருக்கியேடி அனும்மா. அய்யோ இப்போ நான் என்ன செய்வேன்.’ அவன் இன்னமும் மெல்லமாய் கிசுகிசுக்க இமைக்கக்கூட இல்லை அவள்.
‘ஹேய்... என்னாச்சு..அப்படியே சிலை மாதிரி நிக்கறே..’ அவன் கரம் அவள் தோள் அணைக்க இப்போது அந்த கேமராவிலிருந்து இன்னொரு கிளிக்.
அவன் கரம் இவள் தோள் தொட்ட மாத்திரத்தில் சடக்கென இவள் கண்களுக்குள் நேரேற்றம்.
‘அனும்மா... என்னாச்சு அனும்மா.. நீ சரியில்லையே. வந்தபோது இருந்த அந்த சந்தோஷம் இப்போ முகத்திலே இல்லையே? என்னாச்சு. அப்பா எதுவும் சொன்னாரா? நினைச்சேன். என்ன சொன்னார்? ஏதாவது சொல்லி குழப்பி விட்டாரா? அந்த மனுஷனுக்கு அதான் வேலை. நீ அதெல்லாம் சீரியஸா எடுத்துக்காதே’.
இடம் வலமாக தலை அசைத்தாள் அனுராதா. தன்னை சட்டென இயல்புக்கு தள்ளிக்கொண்டாள்
‘அதெல்லாம் ஒண்ணுமே இல்லை. நான் ரொம்ப எக்சைடெட்டா இருக்கேன். அதான் பேச்சே வரலை’ அழகாய் புன்னகைத்தாள் பெண்.
‘எப்படி சொல்ல? அவனிடம் எப்படி சொல்ல? உன்னை மூன்று நாட்கள் போலிஸ் ஸ்டேஷனில் கட்டி வைத்து அடித்தவன் என் அண்ணன் ஷங்கர்தான் என அவனிடம் எப்படி சொல்ல? அந்த நிலைக்கு உன்னை கொண்டு சென்றது என் அண்ணி கீதாதான் என அவனிடம் எப்படி சொல்ல?
தொடரும்...
{kunena_discuss:1147}