(Reading time: 19 - 38 minutes)

“அம்மா..அவகிட்ட கல்யாண பேச்சை ஆரம்பிச்சது நான்தான்..இப்போ அவளை விட்டுட்டு போறேன்னு சொல்றது துரோகம் இல்லையாம்மா..அதுவும் போக ஏதோ ஒரு நாய் பண்ண தப்புக்கு இவ வாழ்க்கை புல்லா இப்படி அழுதுட்டு இருக்கனுமா சொல்லு??டீவிலயும் பேப்பர்லயும் இப்படி நியூஸ் கேள்விபடும் போது அந்த பொண்ணுங்களுக்காக எவ்ளோ வருத்தப்படுறோம்..இப்போ நம்மள ஒருத்தியே பாதிக்கப்படும் போது அவளை ஏன்ம்மா ஒதுக்கி வைக்கனும்..

இந்த விஷயத்தை கேக்குறதுக்கு முன்னாடி வரகூட ஒருவித பாசம்தான் இருந்தது அவ மேல ஆனா எப்போ அவ என்னை மதிச்சு இவ்ளோத்தையும் சொன்னாளோ அந்த நிமிஷம் இனி என் வாழ்க்கைல அவளை தவிர வேற பொண்ணுக்கு இடமில்லனு முடிவு பண்ணிட்டேன்ம்மா..இதுக்கு மேல இதுல யோசிக்க ஒண்ணுமில்ல ..”,என்றுகூறிச் சென்றுவிட்டான்..

அதன்பின் சரோஜா ராஜியிடமும் சரி தமிழிடமும் பேசவில்லை..மறுநாள் தமிழிடம் கூறி  நிர்பயாவை வீட்டிற்கு வரச் சொன்னார்..ராஜிக்குமே இதில் தலையிட தயக்கமாய் இருந்தது..இப்படி ஒரு சூழலில் மாமியாரை மீறி எதுவும் பண்ணவும் முடியாது என தோன்ற அமைதியாய் இருந்துவிட்டாள்..கூறிய நேரத்திற்கு நிர்யா அவன் வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை அழுத்த அவனே வந்து திறந்தான்..அவனது பார்வை எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேலை எனும் பொருள் தாங்கியிருக்க அதை கவனியாதவாறு உள்ளே சென்றாள்..

சரோஜாவும் ராஜியும் ஹாலில் அமர்ந்திருக்க தயக்கமாய் அவரெதிரில் சென்று நின்றாள்..இப்படி உக்காரும்மா எனக் கூற சென்று அமர்ந்தாள்..அதற்குள் உள்ளே வந்தவன் அவளைவிட்டு சற்று நகர்ந்து அமர்ந்தான்..என்னவாயினும் தான் அவள்புறம்தான் என்பதாய் இருந்தது அவன் தோரணை…

“நேத்து எல்லாத்தையும் என்கிட்ட சொன்னதும் நல்லதுக்குதான்ம்மா..இல்லனா அவசரப்பட்டு கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ணிருப்போம்..சரி இப்போ சொந்தகாரங்க யாராவது இருக்காங்களா??இல்ல தனியா தான் இருக்கியாம்மா??”

“அப்படிலா யாரும் இல்ல ஆன்ட்டி எனக்கு யாரையும் தெரியாது..”

“ஓ..நல்லது அப்போ நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணி தரணும்மா..”

மூவருமே என்ன நடக்கிறது என புரியாமல் முழிக்க தமிழ் ஏதோ கூற வாயெடுக்க சரோஜா அதற்குள்,”நா உன்கிட்ட பேசல தமிழ் அமைதியா இரு..நீ சொல்லும்மா..”

“இந்த நிமிஷம் எனக்கு தெரிஞ்ச என்னை மதிச்சு பேச இருக்குற ஒரே பெரியவங்க நீங்க தான் நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன்..சொல்லுங்க..”

“எங்க மூணு பேருக்கும் தெரிஞ்ச உன்னுடைய கடந்தகாலம் இனி யாருக்கும் தெரியகூடாது..நீ இதபத்தி யார்கிட்டேயும் பேச மாட்டேன்னு சொல்லு..”

விரக்தி சிரிப்பு உதட்டில் உதிக்க ,”இதென்ன பெருமைபடுற விஷயமா ஆன்ட்டி எல்லார்கிட்டேயும் போய் சொல்லிட்டு இருக்க இவருக்கு நல்ல லைப் அமையனும்ங்கிற எண்ணத்துல தான் உங்ககிட்டேயே சொன்னேன் இதுக்கு மேல எதுக்கு அத பேச போறேன் நானே மறக்க நினைக்குற விஷயம் அது..”

“புரியுது நிர்பயா ஆனா நா சொல்றது இப்போ என்கிட்ட சொல்றதுக்கு ஒரு காரணம் கிடைக்குற மாதிரி நாளைக்கும் எதாவது நடக்கலாம் அந்த நிலைமைலயும் நீ சொல்ல கூடாதுன்னு தான் நா சொல்றேன்..”

“சத்தியமா இனி இதை சொல்லமாட்டேன் ஆன்ட்டி..”மென்மையாய் சிரித்தவர்,

”சரி இப்போ சொல்லு என் பையன் தமிழை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா???”,என நிதானமாய் கேட்டார்..

தமிழும் ராஜியும் அடுத்த நொடி அவரருகில் சென்று அவர் கைப்பற்றிக் கொண்டனர்..நிர்பயாவோ நடப்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்..

“தேங்க்ஸ்ம்மா..நா எதாவது தப்பா பேசிருந்தா மனசுல வச்சுக்காத..”

“பரவால்லடா..உன்னால மட்டும்தான் அவ லைப்ப மாத்தமுடியும் அதுக்கு நா தடையா இருக்க மாட்டேன் தமிழ்..”

“ஆன்ட்டி..”

இங்க பாரு கண்ணம்மா..உனக்கு நடந்தது மிகப் பெரிய கொடுமைதான்..அநியாயம்தான் ஒத்துக்குறேன்..ஆனா இதுல உன் தப்பு என்னடா இருக்கு எதுக்காக உன் வாழ்க்கைய முடிச்சுக்க நினைக்குற..நீ நடந்தத மறைச்சு புது வாழ்க்கை தொடங்கினாதான் தப்பு..சம்மந்தப்பட்ட நாங்களே தெளிவா இருக்குறப்போ நீ ஏன் உன்னை குழப்பிக்குற..

இப்படி பொண்ணு மேல கைவைக்குறவன பாத்த இடத்துலயே சுட்டு போடுற தண்டனை இன்னும் வராம இருக்குறத நினைச்சே இந்த நாட்டல யாரும் வெக்கபட மாட்றாங்க..நல்லா வாழறதுக்கு நீ ஏன்டா வெக்கபடனும்..

ஒரு பொண்ணுக்கு நடந்த தப்புக்கு அப்போவே தண்டனை குடுத்து மறுபடியும் தப்பு நடக்காம பாத்துக்க முடியாத இந்த சமூகம் தான்டா வெக்கப்படனும்..உனக்கு அம்மா அப்பா அக்கா அண்ணாணு அத்தனை உறவையும் தமிழ் மூலமா கடவுள் குடுக்குறாருனு நினைச்சுக்கோ எங்களை நம்பி வந்தப்பறம் நீ முழுவதுமா எங்க பொறுப்பு என கன்னம் தடவ இறுகப் பற்றிக் கொண்டு கதறினாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.