வேறு வழியில்லாமல் தனது செல்லில் குரலை மாற்றும் மென்பொருளை பயன்படுத்தி மகளிடம் அவளது தந்தை போல் பேசினாள்.
பூமிகாவும் அதை நம்பிவிட்டாள்.
பூமிகா பிறந்த பிறகு அவள் வேலைக்குச் சேர்ந்த பிறகு தான் பவித்ராவும் ஸ்டெல்லாவும் அறிமுகமானார்கள்.
அதன் பிறகு காந்திமதி பாட்டி ஒரு நாள் தங்கள் சொந்த ஊருக்கு அவளுடன் சென்றார். அங்கே அஞ்சல் அலுவலகத்தில் அவர் பத்திரங்கள் வாங்கியிருந்தார். அது முதிர்ச்சியடைந்திருக்கும் என்று அவளை அழைத்துச் சென்றிருந்தார்.
போகும்போதே அவரது பேத்தியின் திருமணத்திற்கு என்று தான் மகனுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்ததாகக் கண்ணீரோடு சொன்னபோது அவளது மனம் வருந்தியது. தனக்கென்று எதையும் யோசிக்காமல் வாழ்ந்த அவரை எப்படி அந்த மகனால் புறக்கணிக்க முடிந்தது?
பத்திரங்களை பணமாக மாற்றி
...
This story is now available on Chillzee KiMo.
...
் அந்த தட்டை கொடுத்து விட்டு ஆர்வம் மிக பேத்தியிடம் திரும்பினார்.
“இங்கே ஓடி வாங்க செல்லம்.” என்று புன்னகை முகமாய் அவர் கைகளை நீட்ட முகத்தில் இருந்த கலக்கம் மறைய சிட்டாய் ஓடி வந்து அவரது கைகளில் புகுந்தாள் பூமிகா. அப்படியே அவளை வாரி எடுத்தவர் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டார்.