எப்படி வளர வேண்டியவள். தங்கள் வீட்டு இளவரசி. அவளின் பிறப்பே அறியாமல் இருந்திருக்கிறோமே.
“ஏன் அப்பத்தா அழறீங்க?” என்று கேட்டவாறே அவரது கண்ணீரைத் துடைத்துவிட்ட அந்த பிஞ்சு விரல்களைப் பற்றி அதில் முத்தமிட்டார் அவர். அப்படியே குழந்தையுடன் உள்ளே சென்றுவிட்டார்.
தென்றல்தான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்த முகிலன் உள்ளே வருமாறு சைகை செய்துவிட்டு சென்றுவிட்டான்.
அவனால் பேச முடியவில்லை. அவன் மனம் ஏற்கனவே நெகிழ்ந்திருந்தது. இப்போது தாயின் கண்ணீரைக் கண்ட உடன் அவன் மேலும் நெகிழ்ந்துவிட்டான்.
தென்றல் இன்னமும் திகைத்து நின்றாள். குழந்தையை மட்டும் உள்ளே அழைத்துக்கொண்டு அவளைக் கண்டு கொள்ளாமல் சென்றுவிட்ட மாமியாரின் செயல் கண்டு அவள் குழம்பினாள்.
க
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு எங்கே செல்வது என்று தெரியவில்லை. தானாக எங்கே செல்லவும் பயந்து கொண்டு அங்கேயிருந்த நாற்காலியில் அப்படியே அமர்ந்துவிட்டாள்.
மனதிற்குள் ஒருபக்கம் தான் வந்து சேர வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டோம் என்ற நிம்மதி இருந்த போதிலும் அப்படியே அவளை நிம்மதியாக இருக்க விடாமல் ஏதோ ஒன்று தடுத்தது.