(Reading time: 11 - 22 minutes)

விக்ரம் தன தொழில்களை வீட்டிலிருந்தே கவனித்தான்.. அம்மு யம்முவிடம் விளையாடி பொழுதை போக்கினாள்... இருவரும் நல்ல நெருக்கமாகினர்.. யமுனா அம்முவை அம்மு என்றும் அம்மா என்றும் அழைக்க பழக்கி வைத்தாள் அமிர்தா..  இருவருக்கும் இடையில் உள்ள பாண்டிங்கை பார்த்து விக்ரமே பொறாமை பட்டான்.. இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை கண்டு விக்ரம் திட்டிக்கொண்டே இருந்தான்.. அவனை எதிர்த்து பேச முடியாத நிலைமையில் இருப்பதை கண்டு அமிர்தா கவலை பட்டாள்.. ஆறு மாசத்துக்கு அப்புறம் இருக்குடா உனக்கு.. என மனதினுள் கருவிக்கொண்டாள்..

ஆறு மாதம் போனதே தெரியவில்லை... அம்மு நன்றாக குணமடைந்தாள்.. அதற்கு விக்ரம் ஒரு காரணமாய் இருந்தான்... மித்ராவும் தாயம்மாவும் அவளை குளிக்க வைத்து ரெடி ஆக்கினால் மீதி அனைத்து நேரங்களிலும் விக்ரம் கூட இருந்து பார்த்து கொண்டான்...

தாயம்மா மனோகருக்கும் ஆனந்திக்கும் இந்த விவரத்தை கூற வில்லை... அவளுக்கு தொண்டையில் problem வந்து ஆறு மாதம் பேச முடியவில்லை என்று மட்டும் ஒருவாறு கூறி சமாளித்திருந்தார்.. அவர்கள் அவளை பார்க்க வருவதாக கூறவும் அவர்களை தடுத்து சமாளித்து நானே நன்றாக பார்த்து கொள்கிறேன் என அவர்களிடம் கூறினார்...

இந்த ஆறு மாதமும் அம்முவுக்கு தான் கஷ்டம்... இயல்பாகவே அவள் லொடலொடவென பேசுபவளை பேச முடியாமல் போனால் பாவம் அவள் என்னதான் செய்வாள்...

உடலில் உள்ள அனைத்து கட்டுக்களும் அவிழ்க்கப்பட்டு பூரண குணமடைந்தாள் அம்மு.. தொண்டை கரகரப்புடன் பேசவும் ஆரம்பித்தாள்.. அதை கண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது..

அதை கொண்டாடும் விதமாக அமிர்தாவின் பிறந்தநாளும் வந்தது... அந்த தேதியை மித்ரா மறந்துவிட்டாள்.. ஆனால் விக்ரம் மறக்கவில்லை.. எப்படி முடியும்... தன் அத்தை எவ்வளவு அழுதார்கள்... தன் அத்தை பெண் பிறந்து அதே நாளில் இறந்த தினமல்லவா...

இவளும் அதே தினத்தில் பிறந்திருக்கிறாள்.. அது பெரிய விஷயம் இல்லை.. ஆனால் தன் அத்தையின் சாயலில் எப்படி இருக்க முடியும்.. தாயம்மாவோ நான் தான் அம்முவை பிரசவம் பார்த்தேன் என கூறுகிறார்.. மனோகர்-ஆனந்தியின் புதல்வி தான் என்கிறார்.. ஒன்றும் புரியாமல் பிறந்த வருடத்தை கேட்கவும் தான் அவனுக்கு விளங்கியது.. அத்தையின் குழந்தை பிறந்த வருடத்தின் அதற்கு அடுத்த வருடத்தில் தான் அம்மு பிறந்திருக்கிறாள் என தாயம்மா மூலம் தெரிந்தவன், அந்த சந்தேகத்தை விட்டான்...

 நாளை அம்முவின் பிறந்த நாள்.. அவளுக்காக ஆசை ஆசை யாய் ராயல் ப்ளுவில் designer சுடிதாரை வாங்கியவன், அதை அவளிடம் தந்து நாளை அணிந்து கொள்ள சொன்னான்..

நாளை அவளிடம் தனது காதலை கூற எண்ணினான்... அவள் பிறந்தநாள் பரிசாக... அவளும் இதைத்தான் ரொம்ப எதிர்பாத்து காத்திருக்கிறாள்.. அவளின் காதல் அவன்மீது நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர குறையவில்லை... அதை அவன் உணர்ந்தும் இருந்தான்... அவளிடம் தன் காதலை கூறியப்பின், தன் அத்தையிடம் அவளை பற்றியும், தன் காதலை பற்றியும் சொல்லி விட வேண்டும் என எண்ணினான்..

பின் தன் காதலை எவ்வாறு ஸ்பெஷல் ஆக சொல்வது என  சில விசயங்களை யோசித்தான்.. அதை அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு நிம்மதியாக தூங்க சென்றான்...

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1158} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.