(Reading time: 15 - 30 minutes)

“என்ன செஞ்சுட்டு இருக்கேன்..இதெல்லாம் தப்பு அம்மா அப்பாக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க..என்னை அசிங்கமா நினைப்பாங்க..இருந்தும் இப்போ நா ஏன் அவர கூப்டேன் ஆயிரம் கேள்வி எதற்கும் பதிலில்லை.”,.சொன்னபடி வந்தவன் அவளை அழைத்து பார்கிங்கிற்குச் சென்றான்..இருவரும் ஏறிய அடுத்த நொடி ஓம் ஆரிலிருந்து ஈசியாரை நோக்கி அந்த கார் பறந்தது..பயணம் முழுவதுமே அமைதி மட்டுமே வியாபித்திருக்க அந்த பெரிய வீட்டின் முன் கார் நின்றது..அதைப் பார்த்து பயந்தவள் பதட்டமாய் வெளியே இறங்கி நிற்க,

“வாடா நம்ம வீடுதான்”, என்றவன் சாவி கொண்டு கதவை திறந்தான்..

“இது..”

“கெஸ்ட் கவுஸ் நம்மளோடதுதான்..அப்பா அம்மா ஊர்ல இல்ல பத்துநாளா நா இங்கதான் இருக்கேன்..எப்பவுமே அவங்க வெளில போய்ட்டா நா இங்க வந்துடுவேன்..சாப்பாடுலா ஹோட்டல்ல..”,என்றவாறே ப்ரிட்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்ட இருந்த நிலைமைக்கு அவளுக்கு நிச்சயம் தேவையான ஒன்றாய் இருந்தது அது வாங்கி கடகடவென தண்ணீரை விழுங்கியவள் சற்று நிதானமாக சரியாய் ஒலித்தது அவள் கைப்பேசி..அவனின் ஆச்சரிய பார்வையை தாண்டிச் சென்று பேசிவிட்டு வந்தவள் சோபாவில் அமர அவளருகில் இருந்த ஒற்றை சோபாவில் அவன் அமர்ந்தான்..

“ம்ம் போன்லா யூஸ் பண்றியா??”

“ம்ம் இப்போதான் த்ரீ டேஸ் ஆச்சு வேலைக்கு போறேனேனு”, ஹர்ஷா வாங்கிக் கொடுத்தான்..

“ஓ..ஒரு தடவை கூட எனக்கு போன் பண்ணணும்னு உனக்குத் தோணலையா???”

“முதல் அவுட்கோயிங் கால் உங்களோடதா இருந்தா நல்லாயிருக்கும்நூ நெனச்சு தான் இன்னும் யாருக்குமே நா கால் பண்ணல வீட்ல பண்ணா பேசுவேன் அவ்ளோதான் “,என அசிரத்தையாய் அவள்கூற கேட்டவனுக்கோ சொர்க்கமே தன்முன் தெரிவதாய் தோன்றியது..

“ஹணி என்ன சொல்றநு புரிஞ்சுதான் பேசுறியா??காலையிலேயிருந்து ஏன் ஏதோ போல பேசுற???”

கைகள் நடுங்க துப்பட்டாவை இறுகப் பற்றியிருந்தவள் அவனைப் பார்க்க அவனோ இமாலயத்தை அடையப் போகும் மகிழ்ச்சியில் இருப்பதாய் இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்தான்..

“நந்தா ஐ..வந்து நா..உங்களை…அது..ஐ லவ் யூ நந்தா”, என்றவள் அவன் கண்களை சந்திக்க தோன்றாமல் எழுந்து சென்று அங்கிருந்த டேபிளில் சாய்ந்தவாறு கைகட்டிக் கொண்டாள்..

“தெரில நந்தா நா ஏன் இப்படியிருக்கேன்னு எனக்கு தெரில..இப்பவும் அப்பாவ நினைச்சா செத்துடலாம் போலதான் இருக்கு அதேநேரம் உங்ககூட சந்தோஷமா ரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா இருக்கு..வீட்ல எப்படி பேசுவேன் என்ன பண்ணுவேன் எதுவுமே தெரில ஆனா நீங்க எனக்கு வேணும் நந்தா..உங்களை பாக்காம இருந்த இந்த ஒரு வருஷமும் எனக்கு நா போட்ட வேலியெல்லாமே நேத்து உங்களை பாத்த அடுத்த செகண்ட் சுக்கு நுறா நொறுங்கிடுச்சு..”

“உங்க மனைவியா தைரியமா இப்படி யாரும் பாத்துடுவாங்களோ தப்பு பண்றோமோநு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாம சந்தோஷமா எல்லாரையும் மாதிரி அழகான ஒரு வாழ்க்கை வாழனும் நந்தா அது நடக்குமா”,

 என்றவளின் கண்களின் கண்ணீர் கன்னம் தொட எழுந்து அவளருகில் வந்தவன் இரு கை விரல்களால் அழுந்த துடைத்துவிட்டான்..அவள் விரல்களை தன்னோடு சேர்த்தவன் அழுத்தமாய் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்..விரல்களை விடுவிக்காமல்,

ஹணி நீ சொன்ன எல்லாமே நடக்கும் நா இருக்கேன்டீ உனக்கு..இந்த தைரியம் ஏன் உனக்கு ஒரு வருஷம் முன்னாடி வரல..ஏமாத்திருவேன்னு நினைச்சியா??நீ என்னோட மிகப் பெரிய அசெட் ஹணி..எக்காரணத்தை கொண்டும் உன்னை நான் மிஸ் பண்ணமாட்டேன்..

தைரியமா இரு..அப்பா அம்மாட்ட பேசுறேன்..உங்கப்பா கால்ல விழுந்தாவது கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்குறேன்.ம்ம்??”,என்றவாறே விரல்களை இன்னுமாய் அழுத்த ம்ம் என அழுதவாறே உதட்டோர புன்னகையும் தோன்றியவள் விழி மூடிக் கூறினாள்..

அவள் சற்று சிரித்தபின் தான் அவனுக்கு நிம்மதியாய் இருந்தது..அப்போதுதான் எத்தனை அருகில் அவளிருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அவள் கன்னத்தை தன் விரலால் அழுத்தி வருட அவன் ஸ்பரிசத்தின் வித்யாசம் உணர்ந்தவளுக்கு உடல் மேலும் நடுங்க,அவசரமாய் அவன் கையை பற்றினாள்..

கையை எடுத்தவனின் மூச்சு காற்று அவள் கன்னம் உரச மீசையின் குறுகுறுப்பு அவளை மொத்தமாய் உருகச் செய்திருந்தது..அவள் கை முழுவதும்  இதழ்பதித்தவன் மறுகையால் அவள் இடையை பற்ற அவள் அவனை தடுக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்..முகமெங்கும் இதழை படரவிட்டவன் இதழை நோக்கி குனிந்தநேரம் தன்னால் முடிந்த மட்டும் முயற்சி செய்து அவனை பின்னே தள்ளிவிட்டாள்..பின்னே சென்றவன் சுயநினைவிற்கு வந்து தன் தலையை இரு கைகளாலும் அழுத்தமாய் கோதிவிட ஹரிணி கலைந்திருந்த தன் தலையை சரி செய்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.