“ஐயோ நந்தா அப்படி சொல்லல..”
“இரு டா நா உன்னை தப்பா சொல்லல..எனக்கு நாவல்ஸ் படிக்குற பழக்கம் ரொம்ப உண்டு ஒவ்வொரு கதையையும் படிக்கும்போதும் அந்த ரொமன்ஸை தமிழ் வார்த்தைகள்ல படிக்கும்போது இது அப்படியே நம்ம மனசுல இறங்கும்..அப்படி படிக்கும் போதெல்லாம் நமக்கானவனு நமக்கு எப்படி தெரியும்..அதெப்படி ஒரு பொண்ணு மேல மட்டும் அப்படி ஒரு பீல் வரும்னு நினைப்பேன்..சோ அப்பபடி வரும்போது என்னோட மொத்த லவ்வையும் அபெக்ஷனையும் அவளுக்கு மூச்சு முட்ற அவளவு குடுக்கனும்னு நினைப்பேன்..உன்னை பாத்த முதல் தடவையே உன் மேல ஒரு இன்ட்ரெஸ்ட் வந்தது உண்மை..
அப்பறம் நாம ப்ரெண்ட்ஸ் ஆவோம்நு நினைச்சு கூட பாக்க முடில..ஒவ்வொரு தடவை நீ பேசும் போதும் உன் கண்ணை பாத்துட்டே இருப்பேன் அதுல ஒரு ஜீவன் தெரியும்..கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள பதிய வச்ச கவிதை நீ..எல்லாத்தையும் தாண்டி உன்னை பாக்குற ஒவ்வொரு தடவையும் மனசளவுல நா உன்னை கிஸ் பண்ணிட்டேதான் இருப்பேன்..அப்படியிருக்கும் போது உன்கூட பேசும் போது எப்படி நா சாதாரணமா பேச முடியும் சும்மா இல்லமா ஒன் இயர் உன்னை பாக்காம உன்குரலை கேக்காம எவ்ளோ கஷ்டம் தெரியுமா???
“சாரிப்பா..”
“ஹணி இன்னொரு தடவை சாரி சொல்லாத..என்னை ஒன் இயர் தவிக்க விட்டதுக்கு தண்டனை லைவ் புல்லா என் லவ்வை சகிச்சுகிட்டு என்கூட வாழணும்.என்ன ஓ.கே வா???”
“லவ் யூ நந்து..”
“ஹாங்ங்ங் என்ன என்ன எனக்கு கேக்கல???”
“ம்ம் ஒழுங்கா போய் தூங்குங்கநு சொன்னேன்”, என்றவள் சிரிக்க அதற்கு மேல் பேச தோன்றாமல் அவன் தன்னிலை மறந்திருந்தான்..
ஜோடி புறாக்களை ஒரு வழியா சேர்த்தாச்சு.ஷப்பா.நா போய் ரெஸ்ட் எடுக்குறேன்..நீங்க கமெண்ட் பண்ணிடுங்க பாக்கலாம்
தொடரும்
{kunena_discuss:1167}