அவள் சென்ற நேரம் சுலோச்சனா அங்கே சரண்யாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
இருவரும் அவளை வரவேற்று உபசரிக்க, மைத்ரேயி வாங்கி வந்த பொம்மையை நிஷாவிடம் கொடுத்தாள்...
அந்த பிஞ்சுக் குழந்தையின் முகத்தில் வெளிப்படையாக தெரிந்த சந்தோஷம் மைத்ரேயியின் மனதை நெகிழ்த்தியது...
எப்படியாவது சரண்யாவை அவர்கள் வீட்டில் வந்து தங்க சம்மதிக்க வைப்பது என்று முடிவு செய்துக் கொண்டாள்... அது சரண்யாவிற்கு மட்டுமல்லாமல், நிஷாவிற்கும் நன்மையை தரும் என்று அவளுக்கு தோன்றியது.
சரண்யாவின் ஜூரம் பற்றிய விசாரிப்புகள், காஃபி உபசரிப்பு என்று சிறிது நேரம் சென்றது...
மெல்ல தான் வந்த விஷயத்தை ஆரம்பித்தாள் மைத்ரேயி...
“இங்கே இருந்து ஆபிஸ் வர உனக்கு கஷ்டமா இருக்குமே சரண்யா... எப்படி மேனேஜ் செய்ற?”
சரண்யா பதில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் செய்தப்போ, இவங்க சொன்னாங்க டெய்லி ஈவ்னிங் நீ வரும் போது ரோட்ல தொல்லை செய்றாங்கன்னு... அதுக்கு எனக்கு தெரிஞ்ச ஒரு வழியா இதை சொல்றேன்...”
மைத்ரேயியின் குரலில் இருந்த அக்கறை சரண்யாவிற்கு புரியாமல் இல்லை...
ஏன் சுலோச்சனா மைத்ரேயிடம் பேசியது கூட அவள் மீதுள்ள அக்கறையினால் தான்...