இந்த வீட்டிற்கு அவளும் நிஷாவும் குடி வந்து இரண்டே வாரங்கள் தான் ஆகின்றன... ஆனால் அதற்குள் நளினியும் அவளும் நெடுங்காலம் தெரிந்தவர்களை போல பேசி பழக தொடங்கி இருந்தார்கள்...
மைத்ரேயியை போலவே நளினியையும் மேடம் என்று தான் முதலில் அழைத்தாள் சரண்யா... ஆனால் நளினி அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை...
முதல் நாளே மேடம் எல்லாம் வேண்டாம் பொதுவாக ஆன்ட்டி என்று கூப்பிடு என்று கண்டிப்புடன் சொல்லி விட்டாள்...
நளினியின் இந்த எளிமையும், எளிதாக பழகும் பாங்கும் சரண்யாவிற்கு மிகவும் பிடித்திருந்தது....
நளினி மட்டும் அல்லாமல் மைத்ரேயியின் கணவன் ஜெயந்தும் அவளுடன் நட்புடனே பேசினான்.
அவனின் கண்ணியமான நடத்தையும், தேவைக்கு மட்டுமான பேச்சும் சரண்யாவை மிகவும் கவர்ந்திருந்தன....
எல்லாவற்றையும் விட மேலாக, இந
...
This story is now available on Chillzee KiMo.
...
மகளும் அவர்கள் வீட்டில் டின்னர் சாப்பிட போவது தெரிந்த உடனேயே, இரவு உணவு நேரத்தை தவிர்ப்பது என்று முடிவு செய்திருந்தான்....
அதனால் இரவு உணவை அவன் மட்டும் தனியே அமர்ந்து சாப்பிட வேண்டி இருந்தாலும், மனதில் எப்போதும் இருக்கும் படபடப்பு போய் ஏதோ வித அமைதி இருப்பதை அவனால் உணர முடிந்தது....