ஆனால் பிரச்சனையே இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதை அவள் புரிந்துக் கொண்டிருந்தாள்... எங்கே சென்றாலும் ஏதோ ஒரு ரூபத்தில் பிரச்சனை வர தான் செய்யும்... ஏன் மைத்ரேயி குடும்பத்தில் மித்ரன் இல்லையா? அவன் ஒருவன் போதுமே, அவள் வாழ்க்கையை வெறுத்து போக செய்ய...!
மனதில் நினைத்ததை சொல்லாமல்,
“அப்படி பிரச்சனைன்னு விட்டுட்டு ஓடி போக முடியுமா மேடம்?” என்றாள்.
“ஓடி போக வேண்டாம்... ஆனால் அந்த ப்ராப்ளமை எப்படி சால்வ் செய்றதுன்னு பார்க்கனும் தானே? ஒன்னு தைரியமா எதிர்த்து நின்னு பேசனும், போலீஸ்ல கம்ப்ளெயின்ட் செய்யனும்... இல்லை துஷ்டரை கண்டால் தூர விலகு டெக்னிக் பயன்படுத்தி நாம தள்ளி போகனும்... இந்த தள்ளி போறதுல நமக்கு கூடுதல் நன்மை இருந்தா அதை செய்றதில தப்பில்லை...”
“ம்ம்ம்.... அது சரி தான் மேடம்... என் மேல
...
This story is now available on Chillzee KiMo.
...
yle="font-size: 18pt;">ஒரு மாதத்திற்கு பிறகு...!
மார்கழி மாதம் என்பதால் வீட்டு வாசலின் முன் பெரிய கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் சரண்யா...
“குட் மார்னிங் டா...”
நளினியின் குரல் கேட்டு புன்னகையுடன் நிமிர்ந்தாள்.
“குட் மார்னிங் ஆன்ட்டி...!”