(Reading time: 10 - 19 minutes)

“என்னோட பங்காளி வீடு இங்க அந்த சந்துல இருக்கு... அவன் வீட்டுல எல்லாரும் ராத்திரி ஆட்டம் சினிமாக்கு போய் இருக்காங்க... அவன் வீட்டு உள்ள போய்டலாம்... அங்க இருந்து பார்த்தா கூட்டு ரோடு அந்த சந்து எல்லாமே நல்லாத் தெரியும்....”

“சரி மணி..... நீ சொல்றதும் சரிதான்... ஆனா போனவங்க எத்தனை மணிக்கு வருவாங்க... திடீர்ன்னு வந்துட்டாங்கன்னா அவங்களை வேற சமாளிக்கணும்....”

“அவங்க வர இரண்டு மணி ஆகும் தம்பி.... படம் பார்க்க ECR ரோடு பக்கம் போய் இருக்காங்க....”

“ஓ அப்போ சரி வா போகலாம்.....”

அதன்படியே சாரங்கனும், மணியும் சென்று அந்த வீட்டின் உள் சென்று நுழைந்து காத்திருக்க ஆரம்பித்தார்கள்...

நேரம் செல்ல செல்ல வந்து கொண்டிருந்த ஓரிரு வாகனங்களும் நின்று ரோடே காலியாக இருந்தது... டீக்கடைக்காரனும் கடையை மூடிவிட்டு சென்றுவிட்டான்...

மேலும் ஒரு பத்து நிமிடங்கள் சென்றபின் லாரி ஒன்று கூட்டுரோட்டைக் கடந்து பக்கத்தில் இருந்த சந்திற்குள் நுழைய, கவுன்சிலரின் ஆட்கள் அந்த லாரியை சுற்றி வளைத்தார்கள்..... அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த கவுன்சிலரும் வந்து சேர்ந்தார்....

லாரியை ஓட்டி வந்த டிரைவர் விவரம் கேட்க, தாங்கள் சொல்லும் இடத்திற்கு வண்டியைத் திருப்ப கட்டளையிட அவனும் அதன்படியே லாரியைத் திருப்பினான்....

ஏற்கனவே கவுன்சிலர் பொருட்களை எங்கே கடத்தப் போகிறான் என்று தெரிந்துவிட்டதால். சாரங்கனும், மணியும் நேராக KLM கல்யாண  மண்டபத்தை அடைய அங்கு லாரியில் இருந்த பொருட்கள் அனைத்தும் இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன.... தன் கைபேசியில் சாரங்கன் அனைத்தையும் ரெகார்ட் செய்ய ஆரம்பித்தான்.... அதற்குள் மணி மாரிக்குத் தகவல் தந்துவிட்டதால் அவனும் மேலும் சில ஆட்களுடன் வந்து அவர்களும் நடப்பது அனைத்தையும் பதிவு செய்ய ஆரம்பித்தார்கள்...

தொடரும்

Episode 25

Episode 27

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.