(Reading time: 13 - 25 minutes)

கணேசன் இதற்கு பதில் சொன்னார்..

“நாங்க ரெண்டும் பேரும் கூட பொறந்தவங்க இல்லை.. எங்க அப்பாவும், வேலன் அப்பாவும் தான் கூட பொறந்தவங்க. நான் பொறந்து கொஞ்ச நாளிலேயே எங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் ஆத்து தண்ணியில் மூழ்கி இறந்துட்டாங்க.. அதுக்கு பொறவு என்னை வளர்த்தது எல்லாமே எங்க பெரியம்மா, பெரியப்பாதான்.. நான் அவங்கள அப்பா, அம்மான்னு தான் கூப்பிடுவேன்.. ஊரிலே யாருக்கும் வித்தியாசமே தெரியாது.. நாங்க அண்ணன் தம்பிங்களா தான் வளர்ந்தோம்.. வேலன் நல்லா படிச்சதாலே அவன் அரசாங்க வேலைக்கு போனான்.. நான் இங்கன இருக்க நிலமெல்லாம் பார்த்துட்டு இருக்கேன்.. பத்து வருஷம் முன்னே வரை எங்க பெரியம்மா , எங்க ரெண்டு பேர் கூடவும் தான் இருந்துச்சு.. வேலன் பொஞ்சாதி வள்ளிக்கு நடுவில் கொஞ்சம் உடம்பு சரியில்லாம போனதில் அம்மா மலர பார்த்துக்க , அவங்க கூடவே இருந்துட்டாங்க.. வருஷா, வருஷம் கோவிலுக்கு மட்டும் வந்துட்டு போவாங்க” என்று முடித்தவர்,

“அம்மா.. இப்போ சொல்லு நம்ம மலரு விருப்பத்த விட, அப்பா எத பெரிசா நினைசுருக்க போறாங்க?”

“அவர பொறுத்தவரை அவர் உசுரை காப்பத்தினவர் வீட்டுலே தான் மலர கொடுக்கணும்ன்னு ஆசை பட்டார். “ என்று கூற,

செழியன் அப்பாவிற்கு இப்போது தோன்றியது “கணேசனின் பெரியப்பா தான் நமசிவாயம் ஐயாவோ? “ என, அதை வெளிப்படையாக கேட்க எண்ணும் போது, வடிவு ஆச்சி அவர் பக்கத்தை சொல்ல ஆரம்பிக்கவே அவர் நிறுத்தி விட்டார்.

ஹாய் பிரெண்ட்ஸ்.. ஒரு வழியா.. விழிகளிலே காதல் விழா அதன் முடிவை நோக்கி நகர்த்த ஆரம்பிச்சாச்சு.. அடுத்த எபிசொட் பென்அல்டிமேட் எபிசொட்டாவும்,. அதற்கு அடுத்த எபிசொட் பைனல் அப்டேட்டும் கொடுக்கலாம்ன்னு இருக்கேன்.. இதுவரை இந்த கதையில் நான் எங்கியாவது தொடர்பு விட்ருந்தா .. அதை அடுத்த அப்டேட்லே சரி செய்து விடுகிறேன்.. அப்படி எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன்.. ஒருவேளை இருந்தா, கேளுங்க பதில் சொல்கிறேன். தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. இந்த அப்டேட்க்கும் உங்கள் கமெண்ட்ஸ் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. நன்றி..

தொடரும்!

Episode # 43

Episode # 45

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.