நிர்பயா வயதொத்த பெண்கள் இருவர் வந்திருக்க அவர்களோடு அவளுக்கு பொழுது கழிந்தது காலையிலிருந்து தமிழ் கண்ணிலேயே படவில்லை..மண்டபத்தில் தன் நண்பர்களை சந்திக்கச் சென்றிருப்பதாக மெசெஜ் அனுப்பியிருந்தான்..மதிய உணவு முடிந்து சிறிது நேரத்தில் பார்லரிலிருந்து பெண் வந்துவிட்டிருந்தார்..மாடியில் தனதறையில் வைத்து ஒப்பனையை ஆரம்பிக்க நேரம் ரெக்கை கட்டி பறந்தது..மேக்கப் முடித்து அப்போதுதான் சரோஜா கொடுத்த உடை பையையே திறந்தாள்..
அழகிய அரக்கு நிற லெஹன்கா சோலியில் தங்க ஸரி வேலைப்பாடுகள் அமைந்திருக்க தங்க நிற ப்ளவுஸும் இரண்டு வண்ணமும் கலந்தவாறான துப்பாடாவும் கொண்டு அழகாய் இருந்தது..மனம் கொள்ளா பூரிப்போடு அதை அணிந்தவளுக்கு தேவையான குந்தன் நகை செட் முழுவதையும் அணிந்துவிட்டார் அந்த பெண்..தலையை உயர்த்தி கொண்டை போட்டிருந்ததால் துப்பட்டாவின் ஒருமுனையை பின்தலையை மறைத்தவாறு போட்டு பின் செய்ய நிர்பயாவிற்கு தன் அன்னை நியாபகம் வந்தது..
அவரின் திருமணத்தின் போது இப்படிதான் அவர் உடையணிந்திருந்த நியாபகம்..கண்கள் ஈரத்தால் நனைய சட்டென தன்னைதானே தேற்றிக் கொண்டவள் கட்டிலின் நுனியில் மெதுவாய் அமர்ந்தாள்..ப்யூட்டிஷியன் அவளிடம் விடைபெற்று கிளம்ப கதவை லேசாய் சாத்திவிட்டு செல்ல கூறினாள்..அவள் சென்ற சில நிமிடங்களில் கதவை யாரோ லேசாய் தட்ட,சரோஜாவாக இருக்கும் என்றெண்ணி,கதவு திறந்துதான்ம்மா இருக்கு என குரல் கொடுத்தாள்..
அப்படியாம்மா??என உள்ளே வந்தவன் வாய் பேசவும் மறந்து நின்றான்..
“நீங்களா சாரி..ட்ரெஸ் ரொம்ப ஹெவியா இருந்ததால..”
“அடப்பாவிங்களா ஊருக்கு வந்த ஆறே நாள்ல என் அழுமூஞ்சி பொண்டாட்டிய இப்படி மாத்தீட்டீங்களே..ஏ ரசகுல்லா அடையாளமே தெரில..இப்படிதான் கல்யாணத்தன்னைக்கு பொண்ணுங்க எல்லாரும் புருஷன ஏமாத்துரீங்களா??”
“ஏன் செல்வா ரொம்ப மேக்கப் போட்டுருக்காங்களா??நல்லாயில்லையா??”,என முகம் சுருங்க கேட்டவளை நெருங்கியவன் தோள்பற்றி தன்னருகில் இழுத்தான்..
“ஏன் உடனே ஆப் ஆகுற..தேவதை மாதிரி இருக்க போதுமா??ஆனா எனக்கு எப்பவுமே அழுமூஞ்சிய தான் பிடிக்கும்”, என அவளுயரத்திற்கு குனிந்து கூற,சற்றும் தாமதிக்காமல் தன்னவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள்..ஒருமுறை இறுக அணைத்து விடுவித்தவன்,
“சரி நிரு நா போய் ரெடி ஆய்ட்டு வரேன்..ம்ம்??நா என்னோட ஷெர்வானிய எடுத்துட்டு போக தான் வந்ததே.. இன்னைக்கு ஒருநாள் தான் இந்த உள்ளே வெளியே விளையாட்டு..நீ கீழே இருக்குறப்போ நா ரூம்க்கும் நா கீழே இருக்குறப்போ நீ இங்கேயும்னு..முடில.கரெக்ட் தான?”, என கேட்க,குனிந்தவாறே சம்மதமாய் தலையசைத்தாள்..
கீழிறங்கி வந்தவளை பார்த்த சரோஜாவிற்கும் ராஜிக்கும் தமிழின் ஒரு முடிவு ஒரு பெண்ணின் வாழ்வை எத்தனை அழகாய் மாற்றிவிட்டது என பெருமையாய் தோன்றியது..அவளோடு அதை பகிர்ந்து கொள்ள தோன்றினாலும் இருக்கும் உறவினர்கள் முன் அதை காட்டிக் கொள்ளாமல் அவளை அழைத்துச் சென்றனர்..
அதன் பிறகு அவள் அவனை சந்தித்தது மணமேடையில் தான்..தங்கநிற ஷெர்வானி அவன் உயரத்திற்கும் உடல்வாகுக்கும்மிகப் பொருத்தமாய் இருந்தது..அவள் பெற்றோரும் காதல் திருமணம் என்பதால் அவ்வளவு சொந்தபந்தங்களை அவள் பார்த்ததேயில்லை..எவ்வளவு உறவுகள் எவ்வளவு பரிசுகள் எத்தனை எத்தனை ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும் இப்படி ஒரு அற்புதமான நிகழ்வுகளை தன் மனப் பெட்டிக்குள் பத்திரமாய் பூட்டி வைத்துக் கொண்டாள்..
ஒருவழியாய் ரிசெப்ஷன் போட்டோ ஷீட் என அனைத்தையும் முடித்து கீழிறங்க மணி இரவு 10 ஆகிவிட்டது..நிர்பயா மிகவும் சோர்வாய் தெரிய மணமகள் அறையில் சென்று அவளை உறங்கச் சொல்லி சரோஜா அனுப்பி வைத்தார்..நீண்ட நாட்களுக்குப் பின் படுத்தவுடன் அன்று தான் உறங்கியிருக்கிறாள்..ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளுக்கு ராஜியின் குரல் எங்கோ ஒலிப்பதாய் தோன்ற லேசாய் அசைந்தவள் ராஜியை பார்த்து எழுந்தாள்..
“அண்ணி..”
“எழுந்துக்கோடா மணி 4 ஆய்டுச்சு இப்போவே குளிச்சாதான் தலை கொஞ்சமாவது காயும்..போ குளிச்சுட்டு வா”, என்று கூறி அனுப்பி வைத்தாள்..குளித்து முடித்து வந்தவளை ஃபேனிற்கு கீழே உக்கார வைத்து தலையை உலர வைத்து குடிப்பதற்கு காபி கொண்டு வந்து கொடுத்தாள்..
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணி..”
“இதுல என்னடா இருக்கு என் கல்யாணத்துல எங்க அண்ணி பண்ணாங்க நா உனக்கு பண்றேன்..ஆமா எங்க கஸ்டம்ஸ்லா எப்படியிருக்கு??உனக்கு ரொம்பவே புதுசா இருக்கும் இல்ல?”
“ம்ம் ஆமா அண்ணி ரொம்பவே..பட் எல்லாமே அழகாயிருக்கு..இப்போதான் பர்ஸ்ட் டைம் பாக்குறேன்..”