(Reading time: 21 - 42 minutes)

தன் அண்ணன் அவ்வாறு கூறியதை கேட்ட அழகுநிலா அவனுக்கு நடந்த எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது என்பதனை புரிந்துகொண்டாள் எனவே எப்போன்னே அவர் உங்ககிட்ட பேசினாரு? அவர்தானே உங்ககிட்ட நடந்ததை கூறினார்! என்று கேட்டாள்

அவள் கேட்டதும் குமரேசன் ,அழகி மாப்பிள்ளை இரண்டுநாள் முன்பு என்னை மொபைலில் தொடர்புகொண்டு என்னை சென்னை வரச்சொல்லி கூப்பிட்டார் என்னிடம் பேசவேண்டியுள்ளதாக கூறினார். எனவே நேற்று இரவு கிளம்பி இன்று காலையில் நான் வந்தேன் என்னை கூப்பிட மாப்பிள்ளை ரயில்வே ஸ்டேசனுக்கு வந்தவர் வரும் வழியில் எனக்கு பருக காபி வாங்கிகொடுத்து அங்குவைத்துதான் நடந்த விஷயத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார் அதனை கேட்க்ககேட்க என் தங்கையை பாடாபடுத்திய அதுவும் தவறான் எண்ணம் கொண்ட அந்த நரேனை நினைத்து எனக்கு ரத்தம் கொதித்தது. அருவாளை எடுத்துக்கொண்டுபோய் அவனை வெட்டி போடலாம் என்ற வெறியே எனக்கு ஏற்பட்டது

ஆனால் மாப்பிள்ளைதான் அப்படி அருவாளை அவங்க வீட்டுப்பக்கம் தூக்கிட்டுபோயிடாதீங்க குமரேசன். நான் இதை டீல்செய்துகொள்கிறேன் அவங்க டேஞ்சரானவங்க என்று கூறினார், அது எப்படி மாப்பிள்ளை, அவனை சும்மா விடுவது அதுவும் என் தங்கையை தவறாக சித்திகரிக்கும் படி வீடியோ எடுத்து அந்த வீடியோவை கைபற்றுவதற்காக அன்று அவளை ஆக்சிடென்ட் செய்து ஆம்புலன்சில் கடத்தவேறு ஏற்பாடு செய்து இருக்கிறான்

உங்களின் புண்ணியத்தால் அந்த கண்டத்தில் இருந்து தப்பியிருகிறாள். உங்க அம்மா ஒருபடி மேலே போய் அடிபட்டிருந்த என் தங்கையை வீட்டிற்கே கூட்டிகொண்டுபோய் உதவி செய்திருகிறார்கள் இதெல்லாம் அறியாமல் வீட்டில் தங்கியிருந்த என் தங்கையை கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போன இடத்தில் சோர்வினால் தடுமாறியவளை தாங்கிபிடித்த உங்களைபோய் அழகியுடன் தவறாக இணைத்து பேசியதை மனதில் வைத்துகொண்டு அவளிடம் விளக்கம் கேக்க வந்த நான் மறுபடியும் உங்கள் இருவரையும் தவறாக புரிந்துகொண்டு என் தங்கையை ஊர் பக்கம் இனி வராதே வந்தால் நாங்கள் யாரும் உயிருடன் இருக்கமாட்டோம் என்று விரட்டினேனே! தவறே செய்யாமல் பிரச்சனையில் இருந்த என் தங்கையை அனாதையாக விட்டுச்சென்றேனே! நான் பாவி...! அழகுநிலா இந்த அண்ணனை மன்னித்துக் கொள்வாயா? என்று வருத்தத்துடன் கூறினான் குமரேசன் .

அவன் அவ்வாறு கூறியதும் அழகி என்னன்னே மன்னிப்பு அப்படின்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்கிறீர்கள். சூழ்நிலை என்னை உங்கள் பார்வையில் அப்படி காட்டியிருக்கிறது இப்போ நீங்கள் என்னை புரிந்துகொண்டு என்னை ஏற்றுகொண்டீர்களே அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றாள்.

அப்பொழுது அறையில் இருந்து வேலாயுதம் வெளியில் போவதற்கு கிளம்பி வந்தவர் வாங்க குமரேசன் எப்படியிருகுறீங்க? ஊரில் எல்லோரும் நலமா என்று கேட்டதும் அமர்ந்திருந்த குமரேசன் மரியாதை நிமிர்த்தமாக எழுந்தபடி எல்லோரும் நல்லா இருக்கோம் மாமா அத்தை எப்படி இருக்கிறாங்க என்று விசாரித்தான்.

உட்கார்ந்தே பேசுங்க குமரேசன் எனக்கு முக்கியமா வெளியில் போகின்ற வேலை இருப்பதால் நான் இப்போ கிளம்புகிறேன் என்றவர் ஆதித்தை பார்த்து தன்னுடன் வருமாறு கூறி தலை அசைத்தார்.

அவரின் முகம் பெரும் கவலையையும் யோசனையும் தாங்கியிருப்பதை பார்த்த ஆதித் தான் காலையில் குமரேசனை ஸ்டேசனில் பிக்கப் செய்ய சென்ற போது சற்று தாமதமாக ரயில் வந்ததினால் தனது மொபலில் உள்ள யூடியூப் ஓபன் செய்து பார்த்தவன் அதில் அதிகமாக அன்று காலையில் பார்க்கப்பட்ட மினிஸ்டர் மகன் மற்றும் தொழிலதிபர் சிலரின் பிள்ளைகள் நடிகையுடன் போட்ட ஆட்டம் என்ற தலைப்பில் வந்திருந்த பதிவை அவனும் பார்த்திருந்தான்.

தனது தந்தையின் முகக்குரிப்பில் இருந்து அவருக்கும் விஷயம் தெரிந்துவிட்டது என்பதனை உணர்ந்தவன் அவரின் கேள்விகளுக்கு தன்னை தயார்படுத்தியபடி வேலாயுதத்தின் பின்னே வெளியில் சென்றான்.

வெளிவராண்டாவிற்குவந்த வேலாயுதம் ஆதித்திடம் நீதான் அதனை நெட்டில் வைரலாக்கினாயா என்று கேட்கலாமா ? என்ற என்னமும் இப்படிப்பட்ட பையனுக்கு வக்காலத்து வாங்குறீங்களே! என்று கேட்டுவிடுவானோ என்ற தயக்கத்தில் ஒருநிமிடம் என்ன செய்வது என்று உறைந்து நின்றார். மறுநிமிடமே தான் இப்பொழுது வெளியில் தலைநிமிர்ந்து செல்லமுடியாதவாறு .செய்த அந்த வீடியோ பதிவை என்னை நினைத்தாவது வெளியிடாமல் ஆதித் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் கொண்டு ஆதித்திடம் பேச ஆரம்பித்தார்.

ஆதித் நீ என்னிடம் அழ்குநிலாவிற்கு அந்த நரேனின் மூலம் நடந்த ஆபத்து, அதில் மாதேசின் பங்கு முதலியவற்றை சொன்னதுமே நான் நேரில் போய் மாதேஷை கண்டிக்கனும் என்றுதான் நினைத்திருந்தேன் ஆதித். ஆனால் ஜானகியின் உடல்நிலை, உனது கல்யாணம் போன்றவைகளின் காரணமாக என்னால் அங்கு போகமுடியாமல் போய்விட்டது. இருந்தாலும் மொபைலில் மஞ்சுளாவை தொடர்புகொண்டு அவனின் செயல்கள் அனைத்தையும் சொல்லிவிட்டேன் அவள் தான் மகனை நல்லபடியாக வளர்க்காமல் விட்டுவிட்டதை நினைத்து இப்பொழுது வருந்திக்கொண்டு இருக்கிறாள். மேலும் மாதேஷை வீட்டிற்கு கூப்பிட்டுக் கொண்டுவந்து அவனை இனி சென்னை பக்கம் செல்லவிட கூடாது என்றும் கூறினாள். ஆனால் அதனை செய்ய நான் ஊருக்கு போவதற்குள் இப்படி ஆகிவிட்டது இப்பொழுது அந்த வீடியோ வெளியானதால் பாதிக்கபடுவது அவன் மட்டும் அல்ல அவனை பெற்ற பாவத்திற்காக நானும் சமுதாயத்தில் தலை குனிய வேண்டியதாகிவிட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.