(Reading time: 21 - 42 minutes)

மாதேஷ், ஜானகி மயங்கி விழுந்ததுமே மற்றவர்கள் அனைவரின் கவனமும் அவளிடம் இருப்பதை கண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டான். ட்ரைவர் முருகனின் மூலம் ஜானகியின் உடல்நிலை தெரிந்திருந்தபோதும் ஆதித்தின் மீது இருந்த கோபத்தில் அங்கு தான் பிரச்சனை செய்யவந்து அதன் காரணமாக ஜானகி மயங்கி விழுந்ததுமே அவனுக்கு இங்குவந்து தவறு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு எழுந்தது இருந்தபோதும் தனது அந்த வீடியோ பதிவு ஆதித்தின் மூலம் வைரலாகி தன்னுடைய இமேஜ் சமுதாயத்தில் குறைந்து தற்போது வெளியில் தலை காட்ட முடியாதநிலை ஏற்படுத்தியதை நினைத்து அந்த உறுத்தலை உதறித்தல்லியவன் நேராக அந்த நரேனிடம் சென்றான்.

தலையில் இருந்து குருதி வடிவதை கூட உணராமல் வேலாயுதம் ஜானகி இறந்ததை ஒத்துக்கொள்ளமுடியாமல் ஜானகி இங்க பாருமா என்னிடம் பேசுமா இப்படி இருக்காத.... எனக்கு பயமாக இருக்கிறது என்று அவளின் கன்னத்தை தட்டி தட்டி அவளுடன் உரையாடிகொண்டிருந்தார்.

ஆதித் தனது அம்மாவின் உயிர் பிரிந்ததை உணர்ந்ததும் அவன் கண்கள் கண்ணீரால் தளும்பியது ஜானகின் காலடியில் நிற்கமுடியாமல் தொய்ந்து அமர்ந்து இறுகிவிட்டான். .

அழ்குநிலா அந்த நர்சிடம் ஏதாவது பண்ணுங்க அத்தையை முழிக்கவையுங்க அவங்களை காப்பாத்துங்க என்று கதறினால் அந்த நர்ஸ் மனச தேத்திக்குங்க மேடம் அவங்க நம்மளைவிட்டு போய்ட்டாங்க என்று கூறினாள் .

அங்கிருந்த குமரேசன்தான் அப்பொழுது அந்த சூழலை தனது கையில் எடுத்துகொண்டான் தனது ஊருக்கு போன்செய்து தனது அம்மா ராசத்தியிடம் விஷயத்தை கூறி என்னென்ன செய்யவேண்டும் என்று கேட்டவன் மளமளவென அங்கிருந்த வேலைகாரர்களின் உதவியுடன் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டான் .

அந்த நர்ஸ் வேலாயுதத்தின் தலையில் வடிந்த இரத்தத்தை பார்த்து அதற்கு முதலுதவி செய்ய முனைந்தபோது அதற்கு ஒத்துளைக்காத்தவரை குமரேசன் தான் கட்டாயபடுத்தி கட்டுப்போட வைத்து அமரவைத்தான் .

முடிந்தது எல்லாம் முடிந்தது. ஜானகியை கொண்டுபோய் மயானத்தில் தகனம் செய்து முடித்துவந்தாகிவிட்டது. இரவு வேலாயுதமும் ஆதித்தும் ஜானகியின் அறையில் விட்டத்தை வெரித்துப் பார்த்துகொண்டு அமர்ந்திருந்தனர்.

ராசாத்திதான் அழ்குநிலவை அதட்டி நீயும் இப்படி அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தால் பின்பு உன்புருசனையும் மாமனாரையும் யார் தேற்றுவது இந்தா இந்த பாலையாவது அவங்க இரண்டுபேரையும் குடிக்கவைத்துவிட்டு வா என்று அவளின் கையில் இரண்டு பெரிய டம்ளரில் வேலாம்மளிடம் பால் வாங்கிவந்து கொடுத்து கொடுகச்சொல்லி அனுப்பினாள் .

ரூமிற்குள் வந்தவள் ஆதித்திடம் போய் என்னங்க இந்த பாலாவது குடிங்க என்றாள். ஆனால் அவனோ சோர்வுடன் அமர்ந்திருக்கும் அவன் தந்தையிடம் அவள் நீட்டிய பாலை வாங்கிகொண்டு போனான் .

அப்பா நீங்க இப்படி சோர்வாக எதுவும் சாப்பிடாமல் இருப்பதை அம்மா விரும்ப மாட்டாங்க. அம்மா இங்கதான் நம்ம கூடவே இருந்து பார்த்துகிட்டு இருப்பாங்க அவங்க சந்தோஷத்திற்காகவாவது இதை நீங்க குடித்துதான் ஆகனும் என்றவன் அவரின் கையை பற்றி அதில் டம்ளரை திணித்தான் .

அதனை வாங்கியவர் எத்தனைநாள் உன் அம்மா இப்படி நாம இருவரும் பேசமட்டோமா என்று கவலைப்பட்டு அழுதிருகிறாள் தெரியுமா? இப்போ நீ என்னிடம் பேசும் போது அவள் மறைந்துவிட்டாளே என்று கூறியவரின் கையை வாயின் அருகில் தம்ளருடன் பிடித்துசென்றவன் அவரில் வாயில் பாலை அருந்தும்படி வைத்தான்.

அவர் குடிக்கும் வரை பொறுமையாக இருந்தவன் அவர் குடித்து முடித்ததும் நீங்க எப்போ தொண்டாமுத்தூர் கிளம்பப்போறீங்க அப்பா என்று கேட்டதும் அதிர்ச்சியுடன் அவனின் முகம் பார்த்த வேலாயுதத்திடம் நான் உங்களை விரட்டுவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். அம்மாவின் கடைசி ஆசை, நீங்க இனியாவது மாதேசின் அம்மாவுக்கு நல்ல கணவனாக இருக்கவேண்டும் என்பது. எனக்குத்தான் தாய் தந்தையுடன் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கை குடுத்துவைக்கவில்லை அதற்காக என்னை மறந்து உங்களை அங்கே போகச்சொல்லவில்லை. இனி என் வாழ்கையில் வரும் நல்லது கெட்டது அனைத்தும் உங்களின் முன்னிலையில்தான் நடக்கும் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தொண்டாமுத்தூரில் உங்களின் துணை அவர்களுக்கு மிகவும் அவசியம் என்று கூறினான் ஆதித் .

அவன் அவ்வாறு கூறியதும் விரக்தியான சிரிப்பு ஒன்றை வெளியிட்டவர். நீ சொல்வதையும் என் ஜானகிக்காக கட்டாயம் தொண்டாமுத்தூர் சென்று வாழ்கிறேன் ஆனால் என்னால் என் ஜானகி இருக்கும் இந்த வீட்டை மறந்து அங்கு இருக்கமுடியும் என்று தோணவில்லை இருந்தாலும் முயற்ச்சிசெய்கிறேன். ஏழாம் நாள் விசேசத்திற்கு பிறகுதான் அங்குபோவேன் என்று கூறியவர் அங்கேயே படுத்துவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.