எனக்காகவாவது அதை வெளியில் விட நீ யோசித்திருக்கலாம் ஆதித்! ஒரு வார்னிங் அவனுக்கு கொடுத்திருக்கலாம் அதன்பின்னும் அவன் திருந்தாவிட்டால் வேறுவழியில் நான் அவனை அடக்கியிருப்பேன் நீ இப்படி செய்வாய் என்று நான் நினைக்கவில்லை என்றார்.
அவர் அவ்வாறு கூறியதும் நான் அந்த வீடியோவை வைரலாக்கல நானே இன்று காலையில்தான் அந்த வீடியோ லீக் ஆனதை பார்த்தேன். நான் மினிஸ்டரிடம் கூட இனி உங்கள் பையன் பெண்களிடம் சில்மிஷம் செய்யாமல் இருக்கச் சொல்லுங்க மீறினால்தான் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தேன் இது என் வேலையில்லை என்று தெளிவாக கூறினான்.
பிறகு யாராக இருக்கும் ஆதித் இது! நீ வெளியிடவில்லை என்றாலும் எனக்கு முதலில் உன் மீதுதான் சந்தேகம் உண்டானது அப்படியிருக்கும் பொது மினிஸ்டர் காந்தன் இப்பொழுது அது நீதான் என்று நம்பி உனக்கு ஏதாவது தொந்தரவு கொடுக்க முயல்வான் ஜாக்கிரதையாக இரு நான் ஊருக்கு போகிறேன் அங்கு கொஞ்சம் நிலைமையை சரிபண்ண எனக்கு சில நாட்கள் ஆகும் அதுவரை ஜானகியை கவனமாக பார்த்துகொள் என்று சொல்லிகொண்டிருக்கும் போதே அன்றுபோல் இன்றும் வாசலில் மாதேசின் கார் புயல் வேகத்தில் வந்து நின்றது.
ஜானகிக்கு சாப்பாடு கொண்டுபோய் கொடுத்த வேலம்மாள் அழகியின் அண்ணன் வந்திருக்கும் விஷயத்தை ஜானகிடம் கூறினாள். அவள் கூறியதை கேட்ட ஜானகி தன்னை ஹாலுக்கு மெல்ல கூட்டிபோக சொல்லி முரண்டு பண்ண வேறு வழியில்லாமல் ஜானகியை நர்சின் உதவியுடன் மெதுவாக நடந்து ஹாலுக்கு வந்து வாங்க தம்பி என்று குமரேசனை வரவேற்றவள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார் .
அமர்ந்த அவரின் காதிலும் மற்றவர்களின் காதிலும் வாசலில் சத்தத்துடன் கார்வந்து நிற்கும் ஓசை கேட்டது.
காரில் இருந்து மாதேஷ் வேகமாக இறங்கியவன் காரின் கதவை ஓங்கி அறைந்த வேகத்தில் தனது அப்பா அங்கு நிற்பதையும் பொருட்படுத்தாமல் ஆதித்தின் முன் சென்றவன் டேய்ய்...உன்ன.. என்று அடிக்க முயன்றபடி என்னை நீ பழிவாங்க அந்த வீடியோவை யூஸ் பண்ணிகிட்டேல உன்னை இனி நான் விட்டுவைத்தால் நான் ஆம்பளையே இல்லைடா என்று அவனின் மீது பாய்ந்தான்.
வேலாயுதம், “டேய்ய் மாதேஷ் உன்னை யார் இங்கு வரச்சொன்னது நீ கிளம்பு இங்கிருந்து” என்று கூறியபடி அவர்கள் இருவரையும் விலக்கிவிட முயன்றார். அப்பொழுது மாதேஷ் அவனின் அப்பாவிடம், உங்களுக்கு நான் முக்கியமில்லை இதோ இருக்கிறானே உங்க செகன்ட் வொய்பின் மகன்தானே பெருசா போய்டான்.
ஊருக்குள் உள்ள பெரியமனுசங்க வைபபாட்டி வைத்துகொள்வார்கள் ஆனால் அவர்களின் வாரிசாக தான் முறைபடிதாலிகட்டிய பொண்டாட்டி பெத்த பையன்கள் மேல்தான் பாசமாக இருப்பார்கள் ஆனால் இங்க என்னடானா நீங்க என்று மேற்கொண்டு பேசபோனவனின் கன்னத்தில் வேலாயுதம் என்னடா சொன்ன என் ஜானகியை வைப்பாடினா சொன்ன உன்னை என்றபடி ஒரு அறைவிட்டார்.
அதில் ஆத்திரமடைந்த மாதேஷ் ஆதித்தை விட்டுவிட்டு வேலாயுதத்தை பிடித்து தள்ளிவிட்டான் உள்ளே இருந்தவர்கள் வெளியில் கேட்ட அமளிதுமளியில் கலவரம் கொண்டு வாசலுக்கு விரைந்து வந்தனர் ஜானகி வாசலுக்கு வந்தபோது மாதேஷ் தள்ளிவிட்டதில் வேலாயுதம் நேராக் அவளின் கண்முன் கீழே விழும் காட்ச்சிதான் அவருக்கு கிடைத்தது
அதில் அதிர்ச்சியடைந்த ஜானகி என்னங்க என்று பலவீனமாக சொல்லியபடி வேரறுந்த மரமாக கீழே சரிந்து மயங்கி விழுந்தாள்.
கீழே விழுந்த வேலாயுதமோ அங்கிருந்த பெஞ்சில் தலையிடித்து ரத்தம் கொட்டுவதை கூட உணராமல் தன மனைவியின் பலவீனமாக குரலில் எழுந்து அவளருகில் ஓடினார். அதற்குள் மற்றவர்களுடன் நர்சும் அவளிடம் விரைந்தனர் அவளுக்கு செய்யவேண்டிய அனைத்து முதலுதவிகளையும் துரிதமாக செய்தாலும் அவள் கண்விழிக்கவே இல்லை. நர்ஸ் டாக்டரிடம் மொபைலில் தொடர்புகொண்டு பேசியதும் உடனே அவளை மருத்துவமனைக்கு கொண்டுவரச்சொன்னார்.
கடைசி நிமிடத்தில் கண்விழித்த ஜானகி அருகில் பதட்டத்துடன் நின்றிருந்த ஆதித்தையும் வேலாயுதத்தையும் கை அசைவில் அருகில் வரச்சொன்னவள் தான் இனி பிழைக்கமாட்டேன். ஆனால் நீங்கள் இருவரும் மாதேஷை எக்காரணம் கொண்டும் எந்த சூழலிலும் வெறுத்துவிடக்கூடாது என்றவர் ஆதித்திடம் அவன் உன் அண்ணன் அவனுடன் நீ பகைமை பாராட்டக்கூடாது என்றும் கூறியவர் நீண்ட போராட்டத்துடன் மூச்சுவிட சிரமத்துடன் வேலாயுதத்திடம் நீங்கள் இதுவரை மஞ்சுளா அக்காவுடன் மனம் உவந்து வாழவில்லை அவங்களும் என்னை போல் பெண்தானே, அவர்கள் ஒருகாலத்தில் செய்த தவறை இன்னும் நீங்கள் மறக்காமல் வாழ்ந்து அவர்களுக்கு தண்டனை கொடுத்தது போதும் .
சூழ்நிலை காரணமாக நான் அவர்களின் வாழ்க்கையை பங்குகொண்டு பெரிய துரோகத்தை நான் அவர்களுக்கு செய்துள்ளேன் இனியாவது அவர்களுடன் நல்ல கணவனாக நடந்து கொள்ளுங்கள் அப்பொழுதுதான் என் பாவம்குறையும் என் ஆத்மாவும் சாந்தியடையும் என்றவர் அழ்குநிலாவை கண்ணசைவில் அருகில் அழைத்து அவளின் கையோடு தனது மகனின் கை சேர்த்தவள் எதோ கூறவரும்போதே அவளின் மூச்சு அடங்கிவிட்டது. .