(Reading time: 21 - 42 minutes)

அதற்குப்பின் ஆதித் எழுந்து தனது ரூமிற்குச்சென்றான் அவனின் பின்னாலேயே அவனுக்கான பாலை எடுத்தபடி அவனைத்தேடி அவர்களின் அறைக்குள் சென்ற அழகுநிலா சன்னல் பக்கம் திரும்பிநின்று கொண்டிருந்த ஆதித்தின் தோள்தொட்டு இதைகுடிங்க என்று திருபியவள், அவன் கண்களில் வழிந்த கண்நீரைகண்டதும் அவளதுகண்ணும் கண்ணீரை சொரிந்தது. அவனின் தலையை இழுத்து தன நெஞ்சினில் புதைத்து அழுகாதீங்க அத்தை நாம கூடவே தெய்வமாக இருப்பாங்க என்று கூறியதும் அடக்கிவைத்திருந்த கண்ணீரைஎல்லாம் கொட்டியபடி அவளை கட்டிக்கொண்டு தாயிடம் தஞ்சம் அடைந்த சேயாக மாறி கதறினான்.

அவனை தாங்கி நின்றபடி அவனை தேற்ற நினைத்தவள் அவனின் பாரம் தாங்காமல் கீழே தரையில் அவனையும் இழுத்தபடி அமர்ந்தவள் தனது மடியில் அவனின் தலையை தாங்கிகொண்டபடி அவனை தன்னுடன் அனைத்து அவனுக்கு ஆறுதல் அளிக்க முயன்றாள்.

நீண்ட நேரம் அழுதவன் அப்படியே அழுதபடியே மனதின் சோர்வின்காரனமாக இளைப்பாற இடம்கிடைத்த அவளின் மடியில் உறங்கிவிட்டான்.

இரவில் புரண்டு படுக்க முயன்ற ஆதித் தன கழுத்தை வளைத்து பிடித்தபடி அமர்ந்தவாறே தூங்கிகொண்டிருந்த அழ்குநிலாவை உணர்ந்தவனின் தூக்கம் கலைந்தது. அப்பொழுதான் இரவில் தான் அவள் மடியிலேயே அழுதபடி தூங்கியதை நினைத்தவன் ரூமில் லைட் வெளிச்சத்தில் கடிகாரத்தை கண்டு இரவு 1.3௦0 ஆகிவிட்டதை உணர்ந்து எழுந்தவன் அழ்குநிலாவையும் கையில் அள்ளிக்கொண்டுபோய் கட்டிலில் கிடத்தியவன் அவளை அணைத்தவாறு படுத்து உறங்கிவிட்டான் .

றுநாள் கண்விழித்து பார்த்த ஆதித் தன அருகில் அழகுநிலா இல்லாததை உணர்ந்து ரெப்ரஸ் ஆகிக்கொண்டு கீழே படியில் இறங்கியவன் சோபாவில் அமர்ந்திருந்த மஞ்சுளாவை பார்த்தவன் ஒருநிமிடம் அதிர்ச்சியாகிவிட்டன். பின்பு அதனை மறைத்தபடி மீதபடிகளை இறங்கிவரும்போது அங்கு ஒரேநாளில் பத்துவயது அதிகரித்ததுபோன்ற தோற்றத்தில் ஓய்ந்துபோய் வந்த தனது தந்தையை கண்டவன் நெஞ்சில் பாரம் திரும்பவும் ஏறிகொண்டது.

முருகனின் மூலம் வீட்டில் நடந்த கலவரத்தையும் அதனை தொடர்ந்ர்து மாதேஷ் தனது தந்தையை தள்ளிவிட்டது அதனை பார்த்த அதிர்ச்சியில் ஜானகி மயங்கிவிழுந்து இறந்தது அனைத்தையும் அறிந்த மஞ்சுளா தன மகனின் ஈனச்செயல் வெளிவந்ததினால் தன மகன் மீது கோபத்தில் இருக்கும் கணவன், மேலும் அவரையே மாதேஷ் பிடித்து தள்ளிவிட்டதை அறிந்து துடித்து பின் அதனை பார்த்த ஜானகி உயிர்பிரிந்ததை அறிந்து தன கணவன் தன்னை இதுவரை ஒரே வீட்டில் இருந்தாலும் ஒதுக்கி வைத்ததுபோல், தன மகனையும் வெறுத்து ஒதுக்கி, தங்களை விட்டு நிரந்தரமாக பிரிந்துவிடுவாரோ! என அச்சம் கொண்டாள்.

முன்னமாவது ஜானகி தன்னிடம் கொடுத்த சத்தியத்தை காப்பாத்துவதற்காகவாவது தன வீட்டிற்கு இத்தனை வருடமாக வந்து போய் கொண்டிருந்தவர் இனி வராமல் போய்விட்டால் என்ற எண்ணமே அவளை அங்கு வரும்படி கிளப்பிவிட்டிருந்தது. .

வந்தபின் தன கணவனின் ஓய்ந்துபோன தோற்றத்தை கண்டவள் கண்கள் கலங்கிவிட்டது அவரின் துக்கத்தை துடைக்க உரிமையாக அவரின் அருகில் போக அவள் உள்ளம் ஆசை கொண்டாலும் அந்த உரிமையை அவர் இத்தனை வருடம் தனக்கு மறுத்திருந்ததால் அவ்வாறு சென்று அவரை தேற்ற தயக்கத்துடன் நின்றுகொண்டாள்.

பின் கை இரண்டையும் கூம்பியபடி என் மகனை மன்னித்துவிடுங்க ஜானகி உடலுக்கு முடியாத இந்த நேரத்தில் அவன் இங்குவந்து பிரச்சனை செய்திருக்கக் கூடாது. ஜானகியின் இழப்பு உங்களை எந்த அளவு பாதித்திருகிறது என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. தயவு செய்து எங்களை மன்னித்துவிடுங்கள் எங்களை ஒதுக்கிவிடாதீர்கள் என்று வேண்டினாள்.

மஞ்சுளாவிற்கு சொத்து சுகம் இருந்தது முதல் மனைவி என்ற முறையில் வேலாயுதத்தின் சொத்துக்களுக்கு எல்லாம் முதல் உரிமை அவளுடயதே. இருந்தபோதும் மஞ்சுளா தனது முட்டாள்தனத்தால் இழந்த தனது கணவனின் அன்புக்காக அவள் இத்தனை வருடம் காத்திருந்தாள்.

மேலும் தாலி கட்டிய நிமிடமுதல் கணவனின் கம்பீரத்தின்மீதும், கணவனின் மீதும் தீராத காதல் கொண்டிருந்தாள் ஜானகி , ஆனால் காதலில் வஞ்சமும் சூழ்ச்சியும் கொண்டு வேலாயுதத்தை அடைந்துவிட துடித்த ஜானகி .தனது அந்தகைய குணநலன் மூலம் வீலாயுதத்தின் வெறுப்புக்கு ஆளாகி அவரை பிரித்துவிட்டதை காலம்கடந்து புரிந்து கொண்டால் ஜானகி,

இன்றுவரை தனது கணவனின் காதல் கானல் நீராகிப் போனதை நினைத்து வருத்தம் கொண்டாலும், தன அருகில் அவரை பார்த்துகொண்டாவது அவரின் மகனை பெற்ற திருப்தியுடனே காலத்தை கழித்துவிட நினைத்தவள், அவரின் தரிசனமும் இனி கிடைக்காதோ என்பதில் கலங்கி போய்விட்டாள்..

அவளின் அருகில் வந்தவர், அவளின் கையை இறகிவிட்டார் உட்கார் மஞ்சுளா. என் ஜானகி உன்மீது கோபம் கொள்ளக்கூடாது, உன்னை சந்தோசமாக வைத்துகொள்ளனும் என்று கடைசிநிமிடத்தில் என்னிடம் கூறிவிட்டே கண்மூடினாள். மாதேஷ் நடந்ததை தீர விசாரிக்காமல் அந்த வீடியோவை ஆதித்தான் வைரலாகிவிட்டான் என்று கோபம்கொண்டு இங்குவந்து பிரச்சனை செய்து நடக்கக்கூடாடது எல்லாம் நடந்துவிட்டது. இது எல்லாத்துக்கும் ஒருவிதத்தில் நான்தான் காரணம். மாதேஷை நல்லபடியாக வளராததிற்கு காரணம் உன்மீது நான் கொண்டிருந்த ஒதுக்கமே ஒரு காரணம். இதில் உன்னை குற்றம் சுமத்தி என்ன ஆகப்போகிறது என்று கூறிகொண்டிருகும் போதே அழகுநிலா கையில் டீடம்ளருடன் வந்தவள் இந்தாங்கததே என்றபடி அவளிடம் நீட்டினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.