(Reading time: 21 - 42 minutes)

வேலாயுதத்தின் கோபத்தையும் முகத்திருப்பளையும் எவ்வாறு சமாளிப்பது என்ற யோசனயுடன் இருந்த மஞ்சுளாவிற்கு அவரே தன் கை பிடித்து இறக்கிவிட்டு உட்கார் என்று கூறியதுமே நெகிழ்ந்துவிட்டால் மேலும் அவர் இணக்கமாக பேசியது அவளுக்கு மேலும் தன மகனின் செயலால் குற்றவுனர்ச்சிக்கு ஆளானாலும் அது ஜானகியினால் கிடைத்தது என்ற குறை இருந்தாலும் இத்தனைநாள் அவள் ஏங்கியிருந்த ஆதரவான வார்த்தைகளை இன்று வேலாயுதத்தின் வாயினால் கேட்டதும் அப்படியே மெல்ட் ஆகிவிட்டாள் மஞ்சுளா.

அத்துடன் அழகுநிலா டீயை நீட்டி இந்தாங்க அத்தை என்று கூறியதை கேட்டதும் அவள் கண்கள் பொலபொலவென கண்ணீரை சொரிந்துவிட்டது. அவள் நீட்டிய டீயை கையில் வாங்கி எதிரில் இருந்த டீபாயின் மேல் வைத்தவள் ஹாலில் பெரிதாக மாட்டியிருந்த ஜானகியின் படத்தின் முன்போய் நின்றவள் கைகூப்பி கண்மூடி நின்று பிராத்தனை செய்தவள் பின் ஆதித்திடம் திரும்பி என்னை நீயும் மன்னித்து உன் அம்மாவாக ஏற்றுகொள்வாயா ஆதித்...! என்று கேட்டாள்,

அதற்க்கு தெரியல நான் உங்களையும் உங்கள் மகனையும் மன்னித்து விட்டேனா? என்றுகேட்டால் அதற்க்கு எனக்கே பதில் தெரியல. ஆனால் என் அம்மா உங்கமேலையும் உங்க பையன்மீதும் கோபப்படக்கூடாது என்று கூறிவிட்டு கண்மூடினார்கள். அதனால் என்னால் என்கோபத்தை உங்கள் இருவரின் மீதும் காட்ட முடியாது அதற்காக உங்களை என் அம்மாவாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. உட்காருங்க என்று கூறியவன் அவன் வீட்டின் தோட்டத்துபக்கம் விரைந்தான்.

----தொடரும்----

Episode 24

Episode 26

{kunena_discuss:1144}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.