ரொம்ப சந்தோஷம்பா அழகி அவ புருசனோட கண்டிப்பா வருவா நான் இன்னைக்கு ஊருக்கு கிளம்பறேன் அதனால என்னால் வரமுடியாது என்று கூறினாள்.
அதனை தொடர்ந்து வெளியில் சென்றிருந்த ஆதித் வந்ததும் அவனிடமும் சொல்லிவிட்டு புறப்படபோகும்போது ஆதித் கூறினான், எனக்கு முக்கியமான காண்டிராக்ட் ஒன்று நாளை கட்டாயம் முடிக்கவேண்டியுள்ளது. சோ என்னால் வர முடியாது ஆனால் அழகியை கண்டிப்பாக அனுப்பிவைக்கிறேன் என்று கூறிவிட்டு விடை கொடுத்தான் ஆதித்.
நரேனோ கொதிப்புடன் இருந்தான். மாதேசின் மூலம் ஆதித்தை கஷ்ட்டப்படுத்தியது அவனுக்கு முழு திருப்தியை கொடுக்கவில்லை. மேலும் நேற்று வர்ஷாவின் அப்பா தனது மகள் அப்ராடிற்கு வேலைக்கு கிளம்புகிறாள் என்றும் இந்த கல்யாணத்தில் அவளுக்கு விருப்பம் இல்லைஎன்றும் கூறிவிட்டாள், மேலும் உங்களின் அந்தமாதிரி வீடியோ நெட்டில் வந்ததுக்கு பின் நான் உங்களுக்கு பெண்ணை கொடுத்தால் எல்லோரும் ஏன இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு போய் உங்களின் பெண்ணை கொடுக்கிறீங்கள் என்று என்னை கேவலமாக பார்ப்பார்கள் உங்களுக்கு நான் பெண்கொடுக்க ஒத்துகொண்டதே மினிஸ்டரின் மகன் செல்வாக்கான பெரிய இடம் என்று வெளியில் சொல்வதற்கு ஆசைப்பட்டுத்தான். ஆனால் இனி அப்படி சொல்லமுடியாது பொம்பளைபொறுக்கி என்றுதான் உங்களை ஐடண்டி பண்ணும் இந்த சமுதாயம். அதனால் இத்துடன் இந்த கல்யாணப் பேச்சை நிறுத்திக் கொள்வோம் என்று கூறிவிட்டார் .
மேலும் இத்தனைநாள் அவனுக்கு பெண்ககொடுக்க நான் நீ என்று போட்டிபோட்டவர்களில் பெரும்பாலானோர் இனி அப்படி முன்வரமாட்டார்கள் என்ற நிதர்சனத்தை உணர்ந்த நரேன் அந்த வீடியோ லீக் செய்தது ஆதித்தான் என்று நினைத்து அவன் மேல் கொலைவெறியில் இருந்தான்.
மேலும் அவனின் அப்பா எப்பொழுதும் மகனுக்கு ஒன்று என்றால் அதனை செய்தவர்களை உண்டு இல்லை என்று செய்பவர் ஏனோ ஆதித்தின் விசயத்தில் கொஞ்சம் பொறுமையாக இரு என்று சொன்னது மேலும் அவனுக்கு ஆத்திரத்தையே கொடுத்தது. எனவே அவன் தந்தைக்கு தெரியாமல் ஆதித்தை பழிவாங்குவதற்கு ஏற்பாடு செய்தான்
அழகுநிலாவிற்கு ஜானசி இறந்த துக்கத்தில் இருந்து இன்னும் வெளிவராத அந்த நிலையில் ஆதித்தை தன்னுடன் தனது தோழியின் கல்யாணத்திற்கு கட்டாயப்படுத்தி கூட்டிக்கொண்டு போக மனம் வரவில்லை. மேலும் ஆதித் கடந்த இரண்டு நாட்களாக பிஸ்னஸ் டென்சனில் மற்றதை கொஞ்சம் மறந்து அதில் தீவிரமாக இருந்தான் .
பிஸ்னஸ் மூலமாவது அவனது துக்கத்தை மறந்து இருக்கும் அவனை கல்யாணத்திற்கு கூட்டிக் கொண்டு போனால் அங்கு யாரும் அவனை அன்னையின் இறப்பிற்கு துக்கம் விசாரிக்கிறேன் என்ற பேரில் திரும்ப அவனை ஜானகியின் இழப்பில் துவண்டு விழவைத்துவிட்டால் என்ன செய்வது! என்ற நினைப்பில் அவனை வற்புறுத்தவும் இல்லை.
மேலும் ராசாத்தி இத்தனை நாள் அவளுடைய இடத்தில் இருந்து வீட்டை நிர்வாகம் பண்ணிக்கொண்டு இருந்ததால் அவள் ஆதித்தையும் அவளின் மாமனாரையும் நேரத்திற்கு சாப்பிடவைத்து மற்ற விசயங்களை அவர்களுடன் பேசி துக்கத்தில் இருந்து திசைதிருப்ப முடிந்தது. ஆனால் நேற்று இரவு அவர் ஊருக்கு போய்விட்டதால் வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் வேலைக்காரர்களையும் கவனித்து அவளும் தனது தோழியின் கல்யாணத்திற்கு கிளம்பி ரெடியானவள் என்னங்க, மதியம் மாமாவுக்கு சாப்பாட்டை ரெடி செய்யச்சொல்லி டேபிளில் வேலம்மாளை எடுத்துவைக்கச் சொல்லிவிட்டேன் நீங்களும் மாமாவிற்கு நேரத்துக்கு சாப்பிடச்சொல்லி மொபலில் தொடர்புகொண்டு சொல்லுங்க என்று சொல்லியபடி தனது வெண்பட்டுசேலையின் அமைந்திருந்த டார்க்ரெட் கலர் பார்டருக்கு மேட்ச்சாக ஆழ்ந்த சிகப்புகலர் ஜிமிக்கியை போட்டுக்கொண்டே அசால்டாக ஒதுங்கியிருந்த புடவையை சரிசெய்யாமல் ஜிமிக்கியின் சுரையை டைட் செய்தபடி பதில் வராமல் இருப்பதை பார்த்து திரும்பி ஆதித்தை பார்த்தால்
ஜானகி இறந்தபின் ஏனோ துக்கம் காரணமாக இத்தனைநாள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தாலும் அதைத்தாண்டி இருவரும் அந்தரங்கமாக இணையவில்லை அதற்கு அவர்கள் இருவருமே இருந்த துக்கமும் அந்தமாதிரி ஆசையையும் தூண்டவில்லை
ஆனால் இன்று கல்யாணத்திற்கு என்று கிளம்பி வந்த அழகுநிலா பட்டுபுடவையில் இருந்தால் ஜானகி இறந்த அன்று அவருக்காக புடவை உடுத்தியவள் அதன் பிறகு இன்றுதான் புடவை உடுத்தியிருந்தாள்
கிளம்பும் அவசரத்தில் ஆதித்திற்கு போட்டுக்கொள்ள உடைஎடுத்துவைத்து விரிப்புகளை சரிசெய்து அதன் பின்பே அவள் கண்ணாடியின் முன் நின்று தன்னை அலங்கரிக்க ஆரம்பித்திருந்தாள். எனவே அவள் உடுத்தியிருந்த புடவை அபாயகரமாக இறங்கி அவளின் இடையும் தந்தம்போன்ற வழுவழுத்த குழிந்த வயிற்றையும் கண்ட ஆதித்துக்கு சலனம் உண்டானது .
ஆதித்தின் பார்வை போகும் திசையை பார்த்தவள் கை அன்னிச்சை செயல்போல் தனது புடவையை சரிசெய்யமுயன்றபோது அவளின் அருகில் நெருங்கி அவனே அதை சரிசெய்வதுபோன்ற பாவனையில் அவளின் இடையில் கைபதித்து இம்சித்தான் .