ஆதித் உங்களுக்கு மீட்டிங். நானும் கல்யாணத்துக்கு போகணும் என்று சொன்னவளின் குரல் பலவீனமாக ஒலித்தது. போலாம் பேபி.... என்றவன் சேலையில் நீ அசத்தலா இருக்கிற அழகிடீ நீ! என்றபடி அவளை தாபத்துடன் அணைத்துகொண்டான் கரங்களோ அத்துமீற அவளோ அவனின் ஸ்பரிசத்தில் அனலாக அதை அணைக்க அவனுடன் ஒன்ற நேரம்போவதை மறந்து இருவரும் மயக்கத்தில் இருக்க ஆதித்தின் மொபைல் ஒலியில் தன்னிலை அடைந்தாள் அழகுநிலா.
அவனை முன்னேற விடாமல் தடுத்த அழகி ரொம்பநேரம் உங்க போன் அடிக்குது ஏதாவது முக்கியமான விசயமா இருக்கபோகுது என்னனு கேளுங்க என்று கூறினால் அழகி. .
அவளை விட மனதில்லாமல் தனது மொபைலை அட்டன் செய்தவன் தனது எதிரில் கூறியதை கேட்டு நீ அவங்களை ரிசீவ் செய்து சைட்டுக்கு கூட்டிட்டு போ. நான் இன்னும் ஓன் ஆவரில் அங்கு இருப்பேன் என்று கூறியபடி தொடர்பை துண்டித்தவன். அழகுநிலாவை இருக்க அணைத்து கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டவன் வா உன்னை மண்டபத்தில் டிராப் பண்றேன் என்றபடி அவளைவிட்டு நகர்ந்தவன் அவனுக்கு தேவையான பைல்களை எடுத்து தனது ஆபீஸ் சூட்கேசில் வைத்துகொண்டான்.
அழகுநிலாவும் தனது கலைந்த ஆடையை சரிசெய்தபடி தன்னை திருத்திக்கொண்டு அவனுடன் கீழேவந்து அவசரமாக வெளியேறப் பார்த்தவனை கைபிடித்து சாப்பாடுமேசைக்கு கூட்டிக்கொண்டு வந்தவள், அங்கு அமர்ந்திருந்த வேலாயுதத்திற்கு தட்டில் சாப்பாட்டை பரிமாறிவிட்டு ஆதித்துகும் சாப்பாட்டை எடுத்துவைத்தவள் அவன் நின்றுகொண்டே அவள் கொடுத்த இட்டிலியை சட்னி சாம்பார்தொட்டு சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே, மாமா நான் கல்யாணத்திற்கு போய்விட்டு வர மூன்றுமணி ஆகிவிடும் என்று நினைக்கிறேன் நீங்க மதியம் டயத்துக்கு சாப்பிடனும், பிபி மாத்திரையை மறக்காம போட்டுக்கோங்க என்று சொல்பவளை பார்த்து நீ சாபிடவில்லையாமா? என்று கேட்டார். காலையில் மண்டபத்தில் வந்து சாப்பிட்டுகொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். சோ அங்கேயே போய் ப்ரண்ட்ஸ் கூட சாப்பிட்டுகொள்கிறேன் என்று சொல்லியபடி அவசரமாக கைகழுவிய ஆதித்திற்கு கை துடைக்க டவல் நீடியவள் வரேன் மாமா என்று சொல்லிவிட்டு அவனின் பின் விரைந்து சென்றாள்.
காரில் ஏறுவதற்குமுன், அங்கு நின்றுகொண்டிருந்த முருகன் டிரைவரிடம், நான் அழ்குநிலாவை மண்டபத்தின் பேரைச்சொல்லி அங்கு இறக்கிவிட்டுவிட்டு சைட்டுக்கு போறேன். நீங்க என் பின்னாடியே கார் எடுத்துகொண்டு வந்து மண்டபத்தில் நிறுத்திகோங்க அவளை பங்சன் முடிந்தபின திரும்ப வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்துடுங்க என்று கூறிவிட்டு அவளுடன் காரில் ஏறி மண்டபத்தை நோக்கி விரட்டினான் காரை .
எதுக்கு இப்போ நீங்க முருகன் அங்கிளை நம்ம பின்னாடி வரச்சொன்னீங்க. நான் ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்திடமாட்டேனா என்று அவள் சொல்லிய மறுநொடி எனக்கு உன்னை தனியா கல்யாணத்துக்கு அனுப்பவே இஷ்டம் இல்லை. ஆனால் போகாதே என்று சொன்னால் நீ வருத்தபடுவாய் என்றுதான் நான் உன்னை அனுப்புகிறேன். ஜாக்கிரதையாக கல்யாண மண்டபத்தில் இரு. உன் பாதுகாப்பிற்காக நான் ஏற்பாடு செய்திருப்பவர்கள் இருப்பார்கள் உன்னை கண்காணித்துகொண்டே இருந்த போதிலும் தனியா எங்கேயும் போகாதே. உனக்கும் எதுவும் என்றால் என்னால் தங்கவே முடியாதுபேபி! எனக்காகவாவது நீ உன்னை பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டும் என்று ஆழ்ந்த குரலில் ஆதித் கூறினான்.
அவன் அவ்வாறு கூறியதும் அவனின் அருகில் நெருங்கி அமர்ந்து அவன் தோளில் தலை சாய்த்தபடி உங்களுகாக மட்டும் அல்ல ஆதித். எனக்கும் தான் உங்ககூட சேர்ந்து நூறுவருசமாவது சந்தோசமாக வாழனும் என்ற ஆசை இருக்கு. அதுக்காகவே நான் என்னை பத்திரமா பார்த்துகொள்வேன் டோன்ட் வொரி ஹன்ட்சம் ஹீரோ என்றாள் அழகுநிலா .
ஏய் என்னசொன்ன ஹன்ட்சம் ஹீரோனா சொன்ன என்று அவளின் வார்த்தையில் மகிழ்ந்தவன், எப்போ இருந்து இப்படி என்று கேட்டு ஒன்றை புருவத்தை உயர்த்தி கேட்டு கண்ணடித்தான்.
எப்பொழுதும்போல் அவனின் அந்த செயலில் முன்புமாதிரி இல்லாமல் நேரடியாகவே அவனை ரசனையுடன் பார்த்தவள் வாய்மட்டும் வேண்டுமென்றே அய்ய ரொம்பத்தான்... சும்மா ரொம்ப பீல்பண்ணி பேசுராரேணு கொஞ்சம் கொஞ்சுனா... எப்பயிருந்துன்னு கேள்வியப்பாரு!, என்று அவளும் அவனுடன் வாயடிப்பதில் சந்தோசமாகி இத்தனைநாள் இறுக்கத்தை கொஞ்சம் குறைத்துக்கொள்வதற்காக கலகலப்பாக பேச்சுகொடுத்தாள் ஆதித்திடம்
அப்போ நீ ஒத்துக்க மாட்ட! நான் ஹீரோனு, ஆனா எனக்கு ஒரு உண்மை தெரியுமே முதல் முதல ஹோட்டல நான் உன்னை மாதிரியே ஒரு கன்னிப் பெண்ணை பார்த்தேன். பார்த்ததுமே அந்த பொண்ணு என்னை பார்த்து பிளாட்டாயிட்ட, அப்புறம் அவ நண்பர்களிடம் சொன்னா! என்னை மாதிரி ஒருத்தனைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் நான் ஒரு ஹன்சம் ஹீரோ மாதிரி இருக்கேனு சொன்னா! அந்த பொண்ணு பேருகூட அ..னு ஆரம்பிக்கும் ம்ம்ம்.. அழகுநிலா தான் , என்ன நான் சொல்றது சரிதானே என்று கேட்டான்
அச்சோ! இது எப்படி உங்களுக்கு தெரியும் என்று கேட்டதும் எல்லாம் ரமேசின் தயவில்தான் இப்போ அவன் என்னிடம்தான் வேலை பார்கிறான் என்றான் ஆதித்.