கதவை அடைத்து விட்டு திரும்பினான். அவன் வரவை உணர்ந்து வேகமாக அவன் அருகே வந்தவள் அவன் முகத்தையே பார்த்தாள். அவனோ, "எதுக்கு என் மூஞ்ச பாத்துட்டு இருக்க? நாளைக்கு ரிசப்ஷன். நாளான்னைக்கு லீவ் போட்டிருக்க? அதுக்கு அடுத்த நாள் ஹாஸ்டல் போகணும்ல? மறுபடியும் மூட்டையை கட்டு", என்று சொல்லி விட்டு பாத்ரூமில் புகுந்து கொண்டான்.
"நான் கோபத்துல தான சொன்னேன். இவன் என்னை போக சொல்றான்? நான் எப்படி என் அத்தானை விட்டுட்டு போவேன்?", என்று நினைத்தாள் மதி.
"நான் போக மாட்டேன்னு என்கிட்ட உரிமையா சொல்றாளா பாரு", என்று நினைத்தான் சூர்யா.
அன்று இரவு சாப்பிட அழைத்தாள் மங்களம். "எனக்கு பசிக்கல அத்தை", என்று சொல்லி விட்டாள் மதி.
"அவளை விடுங்க மா. எனக்கு சாப்பாடு தாங்க", என்று சொல்லி விட்டு வெளியே போய் விட்டான் சூர்யா.
"பெரிய இவனாட்டம் என்னை லவ் பண்றேன்னு சொன்னான். நான் சாப்பிடாம இருந்தா அவனுக்கு கவலையே இல்லையா? அவன் பேசாம சாப்பிட போறான்", என்று நினைத்து கண்ணீர் விட்டு கொண்டு அமர்ந்திருந்தாள் மதி.
வெளியே போன சூர்யாவோ யாரையும் கண்டு கொள்ளாமல் டிவி முன்பு போய் அமர்ந்து கொண்டு சாப்பிட அமர்ந்தான்.
பின் கையை கழுவி விட்டு அவளுக்கு தட்டில் இரண்டு தோசையை எடுத்து கொண்டு போனான்.
அதை பார்த்து வள்ளியை தவிர அனைத்து பெரியவர்களுக்கும் நிம்மதியாக இருந்தது. "இந்த நாய்க்கு இவன் போய் கையில் கொடுக்கணுமோ?", என்று வயிறு எறிந்தாள் வள்ளி.
உள்ளே தலை குனிந்து அழுது கொண்டிருந்தவளோ, எதிரே ஏதோ நிழல் தெரிந்ததால் நிமிர்ந்து பார்த்தாள்.
அவன் தான் கையில் தட்டுடன் நின்றிருந்தான். கண்களில் ஒரு வித ஒளியுடன் அவனை பார்த்தாள் கலைமதி.
"ஐ எனக்காக சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கான்", என்று நினைத்து அவள் உள்ளம் துள்ளியது.
அதை பார்த்தவனுக்கு அவளை அப்படியே நெஞ்சோடு அனைத்து கொள்ள தோன்றியது. "அப்படி பாசம் காட்டுனா அவ சரியாக மாட்டா", என்று நினைத்தவன் அந்த தட்டை அவளுடைய கையில் கொடுக்காமல் அங்கு இருந்த சேரில் வைத்தான்.
அதில் அவள் முகம் கூம்பி போனது. "கலை உனக்கு தான் தோசை கொண்டு வந்தேன் சாப்பிடு", என்று கொஞ்சம் கடினமான குரலில் தான் கூறினான்.
தனக்காக எடுத்து வந்தது ஆறுதல் அளித்தாலும் அவன் குரலில் இருந்த கடுமையை கண்டு "எனக்கு பசிக்கல", என்று சொன்னாள்.
"நீ அப்ப பேசுனது எல்லாமே ஒரு கோபத்துல பேசுனதுன்னு தான் நினைச்சிருக்கேன். இப்ப நீ சாப்பிடலைன்னா, நீ என்னை விட்டு பிரிஞ்சு போறன்னு உண்மையாவே நினைக்கிறன்னு நான் நினைச்சிப்பேன். என்னை கொஞ்சமாவது உனக்கு பிடிச்சிருந்தா ஒழுங்கா சாப்பிடு", என்றான்.
அடுத்த நொடி கட கடவென்று சாப்பிட ஆரம்பித்தாள் மதி. அதை பார்த்தவனுக்கு நிறைவாக இருந்தது.
சாப்பிட்டு முடித்தவன் அங்கு இருந்த வாஷ் பேசினில் தட்டை கழுவினாள். "இதை கிச்சன்ல போய் வைக்கணும்", என்று நினைத்தவளுக்கு வெளியே போய் யாருடைய முகத்தையும் பார்க்க பிடிக்க வில்லை. இப்போது அவளுக்காக அவன் உணவு வேறு எடுத்து வந்தது பெரியவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து தர்மசங்கடத்தையும் கொடுத்தது.
அவளையே பார்த்து கொண்டிருந்தவன், "தட்டை காலைல போய் வச்சிக்கலாம்", என்று சொன்னான்.
ஒரு நிம்மதி பெரு மூச்சுடன் அதே சேரில் அதை வைத்து விட்டு நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
கண்களில் வர துடிக்கும் காதலையும், கனிவையும் மறைத்து விட்டு "நீ ரெண்டு நாள் ஹாஸ்டல் போற வரைக்கும் கீழேயே படுத்துக்கோ கலை. என் பக்கத்துல படுக்க வேண்டாம். இல்ல நீ கட்டில்ல வேணும்னாலும் படு. நான் கீழே படுத்துக்குறேன்", என்றான்.
வந்த அழுகையை மறைத்து கொண்டு "நானே கீழே படுத்துக்குறேன்", என்று வீம்பாக சொல்லி விட்டு அவளுடைய போர்வையையும், தலையணையும் எடுத்தாள்.
தினமும் அவன் முகம் பார்த்து தூங்கும் அந்த நொடியை ரசிப்பவளுக்கு இன்று அது நடக்காது என்று நினைத்து அழுகை வந்தது.