அதுவும் வனிதாமணியின் அன்பு அவளுக்கு தனது பெற்றோரை நினைவுபடுத்தியது.
அவர்கள் இருந்திருந்தால் தனக்கு இந்த நிலைமை வந்திருக்காதே என்று இப்போது நினைக்கும்போது அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தது.
அவளுக்கு தாயன்பின் சுவையை ருசிக்க மனம் விரும்பியது. அதனால் இங்கே கிளம்பி வந்துவிட்டாள்.
மகேந்திரன் அப்படி பேசிவிட்டு சென்ற பிறகு கீழே செல்ல மனம் இல்லாமல் மீண்டும் அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் அமர்ந்துதான் இதை எல்லாம் யோசித்துக்கொண்டிருந்தாள்.
அவளது அன்பிற்கு மகேந்திரன் பூசிய வர்ணம் அவளது மனதைக் காயப்படுத்தியது.
கீழே உணவு மேசைக்கு வந்த மற்றவர்கள் அவளுக்காக காத்திருந்தனர்.
மற்றவர்களை அவள் வேண்டுமென்றே காக்க வைக்கிறாள் என்று அதுவேறு அவள் மீது அவனுக்கு கோபத்தை வரவழைத்தது.
ஒருவேளை
...
This story is now available on Chillzee KiMo.
...
லை என்றாலும், பெரியவர்கள் என்ன பாவம் செய்தார்கள். அத்தை காலையில் இருந்து வீட்டில் உழைக்கிறார் என்றால், மாமா தனது தொழிலைக் கவனித்துவிட்டு வந்திருக்கிறார்.
அவர்கள் இருவரும் நேரத்தில் சாப்பிட்டு ஓய்வு எடுக்க வேண்டும். அத்துடன் யுகேந்திரன் பசி தாங்க மாட்டான். அவன் சாப்பாட்டு பிரியன் வேறு.