“போனாப் போயிட்டு போறே போ. இத்தனை நாள் நான் மட்டும்தான் உங்ககிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சுக்கிட்டு நின்னேன். இப்ப என் கட்சியோட பலம் அதிகமாயிடுச்சு. என்னோட கிருஷ்ணா இருக்கா.”
“சரிம்மா. இனி நானும் தாய்க்குலம் கட்சிதாம்மா.”
என்று சரணடைந்த பின்னேதான் அவனை சாப்பிட விட்டார் வனிதாமணி.
மற்ற மூவரும் அமைதியாக சாப்பிட்டனர்.
வனிதாமணி கிருஷ்ணவேணியைப் பார்த்தார். அவருக்கு சந்தேகம் வந்தது.
வனிதாமணி சின்ன மகனைப் பார்த்து என்ன என்று சைகையில் கேட்க அவன் பிறகு சொல்வதாக சைகை செய்தான்.
மகேந்திரனும் இதை எல்லாம் கவனிக்கத்தான் செய்தான். அவனுக்குப் பக்கத்தில் வனிதாமணி அமர்ந்திருந்தார்.
அவனுக்கு எதிரேதான் யுகேந்திரன் அமர்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில் கிருஷ்ணவேணி. அவன் அவளுக்கென்று அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ோபம் படர்ந்தது.
அவளை எப்படியாவது தங்களுடைய வாழ்க்கையில் இருந்து அகற்ற வேண்டும் என்று நினைத்தான்.
அதற்கு நேர்மாறாக யுகேந்திரனோ அவள் முறைப்படி தங்கள் வீட்டிற்கு வரும் நாள் எப்படி இருக்கும் என்று கற்பனைக்கு உள்ளானான். அப்போது அவளது முகத்தில் வரும் சுடர் ஒளியைக் காண ஆவல் கொண்டான்.