ஒருத்தன் தன்னைக் காயப்படுத்தியதற்காக தான் மற்றவர்களை கஷ்டப்படுத்த வேண்டுமா?
தன்னை ஒருவாறாக தேற்றிக்கொண்டவள் முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்தாள்.
“டேய் சாப்பாட்டு ராமா. உண்மையைச் சொல்லு. மத்தவங்க எனக்காக காத்திருக்காங்கன்னு கூப்பிட வந்தியா? இல்லை உனக்கு பசி தாங்கலையா? நான் வரலைன்னா உனக்கு அத்தை சாப்பாடு கிடையாதுன்னு சொன்னாங்களா?”
அவளது கேலிக்குரலைக் கேட்டதும்தான் அவன் இலகுவானான்.
அவன் முகத்தில் தெளிவைக் கண்டதும் அவள் மனம் நிம்மதியுற்றது.
அதற்காகதான் அவள் அப்படி பேசியதே.
எழுந்து குளியல் அறைக்குள் சென்று முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள்.
வந்தவள் முகத்தில் எந்த ஒப்பனையும் போடாமல் பொட்டை மட்டும் வைத்துக்கொண்டு “வா போகலாம்” என்றாள்.
இருவரும் அவளது அறையை விட்டு வெ
...
This story is now available on Chillzee KiMo.
...
து திருகினார்.
“அது என்னடா? மேக்கப்னா பொண்ணுங்க மட்டும்தானா? நீங்க எல்லாம் செய்யவே மாட்டீங்களா?”
“அம்மா. நீ மட்டும் இதற்கு விதிவிலக்கும்மா. நான் உன்னை சொல்லலைம்மா. எனக்கு ஏற்கனவே சிறுகுடலை பெருங்குடல் தின்ற மாதிரி பசிக்குது. இப்ப சாப்பிட விடும்மா.”
கெஞ்சலாகக் கேட்டான்.