(Reading time: 22 - 43 minutes)

ஆதித் தான் ஜேம்ஸின் முக்கியமான கிளையன்ட் மேலும் இன்றைய தொழில் உலகின் சிங்கம் போன்ற ஆதித்தை பற்றி அறிந்தவன் அவன் எனவே அவனின் கர்ஜனை பார்த்ததும் தனது பாஸ் ஜேம்ஸை விட்டுவிட்டு அவன் வெளியேறிவிட்டான்.

ஆதித் வரும்போதே கவனித்துவிட்ட ஜேம்சுக்கு மனதினுள் உதறல் எடுத்தது. தான் அவர் சீக்ரட்டாக இருக்கனும் என்று சொன்ன அந்த வீடியோ பதிவை வைரலாக்கிவிட்டோம் என்பதனை ஆதித் தெரிந்துகொண்டானோ! என்று பயந்தான் .ஆனால் ஒரு கெட்டவனின் முகத்திரையை சமூகத்தின் முன் கிழித்து காட்டியதுக்கு எதற்கு பயப்படவேண்டும் என்று தைரியமாக நின்றான் .

ஆனால் ஆதித்தின் உக்ரமான தோற்றத்தையும் கர்ஜனையையும் கேட்டவன் தைரியம் எல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் விடை பெற்றது .

வெளியில் ஜேம்ஸின் உதவியாளன் சென்ற மறுநிமிடம் ஜேம்ஸின் அருகில்வந்து கொத்தாக அவனின் சட்டையை பிடித்த ஆதித் நான் என்ன சொன்னேன் அன்னைக்கு, அந்த மொபைலில் இருந்த மேட்டர் துளிகூட லீக் ஆகக்கூடாது என்றேனே பிறகு ஏண்டா அப்படி செய்த? என்று கர்ஜித்தான் .

சார்.... நான் ஒன்றும் அப்படிசெய்யல என்று சொன்ன ,மறுநிமிடம் அவனின் கன்னத்தில் பளார் என்று ஆதித்தின் கைவிரல் பதிந்தது அவனின் இடிபோன்ற அடியில் நிலை குலைந்த ஜேம்ஸ் அடுத்த அடி அவனிடம் வாங்காதவாறு தற்காத்துக்கொள்ள பின்னால் நகர்ந்தபடி சாரி.. சார்... நான் தான்சார்... மன்னிச்சுக்கோங்க சார் என்று நடுங்கினான் .

அவனின் நடுக்கத்தை பார்த்தவன் தன்னுடைய கோபத்தை கட்டுபடுத்தியபடி அங்கிருந்த சேரில் ஒருநிமிடம் கண்ணை மூடியபடி உட்கார்ந்தவன் பின் அவனிடம் அதை வெளியில் லீக் ஆக்கணும் என்றால் எப்பவோ செய்திருப்பேன்

அந்த மினிஸ்டரும் நரேனும் வெறி புடிச்சவங்க அது லீக்கான மறுநிமிடம் என்னை சார்ந்தவர்களையும் என்னையும் பழிவாங்கணும் என்பதற்காக எதுவும் செய்ய தயங்க மாட்டானுங்க என்பதை தெரிந்துதான் அதை நான் வைரலாக்கல.

மேலும் அந்த வீடியோ ரெக்கார்ட் என்கிட்டே இருகின்ற காரணத்தினால் நான் தன அவனை மிரட்டிகொண்டிருந்தேன்.

எப்படின்னு பார்க்கிறாயா ஜோசப், இனி பெண்களிடம் இதுபோல் அநாகரிகமாக நடந்துகொண்டாலோ என்னை சார்ந்தவர்களுக்கு எதுவும் தொல்லை கொடுத்தார்கள் என்றாலோ என்னிடம் இருக்கும் உங்களின் அந்த வீடியோ பதிவை வைரலாக்கிவிடுவேன் என்று மிரட்டியிருந்தேன் .

அவங்களும் கொஞ்சம் அடக்கித்தான் வாசித்துக் கொண்டிருந்தார்கள். நீ இடையில் அதை லீக் செய்ததினால் இப்போ என் அழகியை அவங்க கடத்திட்டாங்க அவளுக்கு எதுவும் ஆகிடுச்சுன்னா என்னால் என்று குரல் இறங்க பேசியவன் தன்னை சரிபடுத்திகொண்டு, அவங்களை கொன்னு புதைத்திடுவேன் உன்னை செல்லா காசாக்கிடுவேன் என்று கூறினான் .

அவன் கூரியதை கேட்ட ஜோசப் சார் நான் இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை! அந்த வீடியோ பதிவில் என் தங்கையையும் வீடியோ எடுத்து வைத்திருந்ததை பார்த்து கோபத்தில் அவங்களின் முகத்திரையை கிழிக்கணும் என்று செய்துவிட்டேன் .

உங்களையே இப்படி மிரட்டுறவங்க நான்தான் அப்படினு தெரிந்தால் என்னை எறும்பு மாதிரி நசுக்கிடுவாங்க என்று பயத்துடன் கூறினான் .

அவன் கூறியதைக் கேட்ட ஆதித் நீதான் என்று தெரிந்தால் அவன் உன்னை நசுக்குவான். ஆனா இனி நான் சொல்வதை நீ செய்யாவிட்டால் நான் உன்னை போட்டுடுவேன் என்று கர்ஜித்தான் .

அதன்பின் அந்த வீடியோவில் உள்ள சில பதிவுகளை காட்டி நான் உனக்கு எப்போ எப்போ இதைஎல்லாம் நெட்டில் அப்லோட் செய்ய சொல்கிறேனோ அப்போ அதை செய்யணும் என்று மேலும் சில விசயங்களை அவனை செய்யச் சொல்லிக் கொண்டிருக்கும் பொது அவனின் மொபைல் ஒலி எழுப்பியது.

அழகுநிலா பற்றிய விபரம்பற்றி கூறத்தான் தன்னை போலீஸ் அழைக்கின்றரோ என்று மொபைலை எடுத்து பார்த்த ஆதித் டிரைவர் முருகன் என்பதை அறிந்து சோர்வுடன் மொபைல் காலை அட்டன் செய்தவன் முருகன் மாமா நீங்க மண்டபத்தின் வாசலில் அழகிக்காக நிற்கவேண்டாம் என்று சொல்லபோவதை காதில் வங்காமல் முருகன் டென்சனுடன் பேசத்தொடங்கினான்.

சின்னய்யா அழகி அம்மாவை காய்கறி டெம்போவில் கடத்திக்கொண்டு அவுட்டரில் இருக்கிற அந்த மினிஸ்டரின் கெஸ்ட் ஹவுஸ்சில் கொண்டு போக முயல்வதாக நம்ம மாதேஷ் அய்யா போன் செய்து சொல்லும் போது அவரையும் யாரோ தாக்கிவிட்டர்கள் ஆ என்ற மாதேஷ் அய்யாவின் சத்தம் கேட்ட விநாடி அவரின் மொபைல் சுவிட்ச் ஆப் ஆகிடுச்சு என்றான் .

காய்கறி டெம்போ என்று சொன்னதும் ஆதித் அலார்ட் ஆகிவிட்டான். ஏனெனில் இன்ஸ்பெக்டருடன் அந்த கல்யாண மண்டபத்தில் இருந்த வாசலில் இருந்த சி சி டிவி ரெகார்டில், வாசலில் நின்றது நரேனின் கார்தானா என்று பார்பதற்கு பார்த்தபோது மண்டபத்தில் இருந்து ஒரு காய்கறி டெம்போ வெளியேறுவதை பார்த்தது ஞாபக்கம் வந்துவிட்டது ஆதித்துக்கு .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.