எனவே ஆதித் உற்சாகத்துடன் முருகனிடம் நான் அழ்குநிலாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்குவந்துவிடுவேன் நீங்க தைரியமாக இருங்க என்று சொல்லியபடி தனக்கும் சேர்ந்து தைரியம் சொல்லிகொண்டான் அபொழுது சின்னையா உங்க அண்ணன் மாதேஷ் என்று கூறும்போதே எதுவும் ஆகாது நான் பார்த்துகொள்வேன் என்று கூறிவிட்டு தொடர்பைதுண்டித்தவன் இன்ஸ்பெக்டரிடம் மொபைலில் தொடர்புகொண்டு அழகுநிலாவை கடத்தும் அந்த டெம்போவை சுற்றிவளைகச சொல்லிவிட்டு ஸ்பாட்டுக்கு விரைந்தான் ஆதித் .
அழகுநிலா கடத்தப்பட்ட வாகனமும் கொண்டுபோக முயன்ற இடமும் தெரிந்ததினால் போலீசால் நரேனின் கெஸ்ட் ஹவுஸ் வாசலிலேயே எளிதாக அந்த டெம்போவை சுற்றிவளைக்க முடிந்தது .
அங்குவந்த ஆதித் மூட்டையில் மயங்கிய நிலையில் அழகுநிலாவை கண்டவன் உள்ளம் துடித்தது
வேகமாக அவளின் அருகில் வந்தவன் பேபி பாருடீ உனக்கு ஒன்றும் ஆக விடமாட்டேன் எழுந்துக்கோ பேபி என்று அவளை உலுக்கினான் .
அவளின் மயக்கம் தெளியாததால் கைகள் இரண்டிலும் அவளை அல்லிக்கொண்டு காரில் அவளை ஏற்றி ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தான் .
டாக்டர் அவளுக்கு மயக்கம் தெளிய வைப்பதற்காக டிரீட்மெண்ட் செய்து கொடுத்துகொண்டிருந்த வேலையில் வெளியில் உட்கார்ந்திருந்த ஆதித் உள்ளம் கொதித்தது. அழகுநிலா கண்விழிக்கும் போது அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்த மினிஸ்டரையும் அவனின் மகனையும் ஒன்றுமில்லாமல் ஆக்கவேண்டும் என்று முடிவெடுத்து உட்கார்ந்த இடத்தில் இருந்தே செயலில் இறங்கினான் .
தமிழ் நாட்டில் இருந்த எல்லோரும் டிவியின் முன் அமர்ந்து இப்படி பட்ட ஒருத்தனை போய் மினிஸ்டராக நியமித்திருகிரோமே என்று மக்கள் பேசிகொண்டிருன்தனர் .
ஆம் நெட்டில் மினிஸ்டர் காந்தனின் லீலைகள் என்று வெளிவந்த வீடியோவைபற்றி கருத்துகளும் அவருக்கு எதிரான போர்கொடிதூக்கிய எதிர் கட்சியின் ஆர்ப்பாட்டமும் அதனை டிபேட்டாக வழங்க்கிகொண்டிருந்த டிவி சேனல்களும் மினிஸ்டரின் அரசியல் வாழ்கைக்கு முடிவுகட்டிக்கொண்டிருந்தது
அதனை அடுத்து மினிஸ்டர் காந்தனின் பினாமி பேரில் இருந்த சென்னையின் அவுட்டரில் இருந்த பல ஏக்கர் அளவுடைய காட்டின் நடுவே இருந்த கெஸ்ட் ஹவுஸ்ல் சட்டத்துக்கு புறம்பான கள்ளச்சந்தை மற்றும் போதைபொருள் வியாபரம நடைபெறுவதை பற்றி அறிந்த நரேனின் நண்பன் மாதேஷ் போலீசுக்கு துப்பு சொல்ல முயன்றதால் அவனை அங்கு கட்டிபோட்டிருந்த விஷயம் அறிந்த போலீஸ் அவனை அதிரடியாக அங்குபோய் மீட்டதுடன் அங்கிருந்த போதை பொருட்கள் மற்றும் இல்லீகல் பிஸினஸ் டாக்குமென்டுகளை கைப்பற்றியதாக போட்டோவுயடன் நியூஸ் வந்தது
அதனை அறிந்த கட்சியில் மேலிடம் மினிஸ்டரை அடிப்படை உறுப்பினர் இடத்தில் இருந்தே நீக்குவதாக அறிவித்தது.
மேலும் அவரின் புது பேலஸில் கட்டபட்டிருந்த அன்டர்கிரவுண்டில் பதுக்கி வைத்திருந்த மூடைமூடையாக பணம், நகை மற்றும் சொத்துகளின் டாக்குமெண்டை வருமானவரித்துரையினர் திடீர் சோதனையின் மூலம் கைப்பாற்றியதாக நியூஸ் ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது .
இதனை எல்லாம் ஹாஸ்பிடளில் உட்கார்ந்தவாறு செய்த ஆதித் உள்ளமோ இன்னும் அமைதியடையவில்லை.
முருகனும் வேலாயுதமும் ஹாஸ்பிடளுக்கு வந்த ஆதித்திற்கு ஆறுதல் சொல்லிகொண்டிருந்தபோது வந்த டாக்டர்.
ஆதித் உங்க வொய்ப் கண் முழித்து விட்டாங்க அவங்க இப்போது மயக்க மருந்தின் வீரியம் குறைந்து எங்களின் ட்ரீட்மெண்டில் இப்போ விழித்து இருக்கிறார்கள். நீங்க ரொம்ப கேள்வி கேட்காமல் அவங்களை போய் பார்க்கலாம் என்று கூறிவிட்டுசென்றார் .
உள்ளேவந்து அழகுநிலாவை பார்த்த ஆதித்தின் கண்கள் கலங்கிவிட்டது துவண்டு போன தோற்றத்துடன் படுத்திருந்த அழகி, ஆதித்தின் வருகையை கவனித்து பார்த்து சோர்வுடன் புன்னகைத்தவள் அவனின் கண் கலங்குவதை பார்த்து சாரி ஆதித்! உங்களிடம் காலையில்தான் என்னை நான் பத்திரமா பார்த்துகொள்வேன் என்று சொன்னேன் ஆனால் என்னால் அதை காப்பாற்ற முடியல என்றாள் வருத்தத்துடன் .
அவளின் அருகில் வந்த ஆதித், அவளின் நெற்றியில் முத்தமிட்டு பயந்துட்டேன் பேபி, நீ எனக்கு வாழ்கை முழுவதும் வேண்டும் எனறு கூறவும் அழகியும் அவனின் அன்பில் உருகிப் போய் காதலுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்
மருமகளே...! என்ற வேலாயுதத்தின் குரலில் தன்னிலை அடைந்தனர் இருவரும ஆனால் ஆதித் அவளின் அருகில் கையைபிடித்தவாறே உட்கார்ந்துகொண்டான் .
எப்படிமா இருக்கிற இப்போ! மயக்கம் எதுவும் இல்லையே? என்று விசாரித்தார் அப்பொழுது அப்பா என்று கூப்பிட்ட அதித், மாதேஷ் மட்டும் சரியான நேரம் துப்பு கொடுக்கவில்லை என்றால் விபரீதமாகியிருக்கும். மஞ்சுளா அம்மாவிடம் நான் நன்றி கூறியதாக சொல்லிவிடுங்கள் என்று கூறும்போது வாசலில்தான் நிற்கிறார்கள் ஆதித், உள்ளே வரச்சொல்கிறேன் நீயே அவகிட்ட சொல்லிடு என்று கூறினார்.