இப்படி செய்வான் என்று அறியாமல் திகைத்தாள் கலைமதி. இத்தனை நாள் முத்தம் கொடுத்திருக்கிறான் தான். ஆனால் அவளுடைய கைகள், முகம் தவிர வேறெங்கும் அவன் தொட்டது இல்லை. ஆனால் இன்று அவனுடைய உடல் சுமை முழுவதும் அவள் மேல் இறங்கியது.
"ஏன் இப்படி செய்றாங்க?", என்று நினைத்து கொண்டே அவன் தோளில் கை வைத்து அவனை விளக்க பார்த்தாள். ஆனால் அவள் கைகள் இரண்டையும் பிடித்து தன் முதுகில் படர விட்டான் சூர்யா.
அதன் பின் அவளும் அவனை விலக்குவதை விட்டு விட்டு அவன் முதுகில் கை வைத்தாள். ஆனால் சூர்யா அவளுடைய உதட்டில் தன்னுடைய உதட்டை அழுத்த அழுத்த அவளுடைய கைகள் அவன் முதுகில் ஆங்காங்கே பயணித்து அழுந்தியது.
அவளின் கை விரல் அழுத்தத்தில் அவன் இன்னும் அவளுக்குள்ளே புதைந்தான். உதட்டை அவளுடைய உதட்டை விட்டு விலக்கவே அவனுக்கு மனம் வர வில்லை. அவன் உணர்வுகள் அனைத்தும் பேயாட்டம் போட்டன. கடைசியில் அவனுடைய உணர்ச்சிகள் வெடித்து சிதறியதை அவனே உணர்ந்தான்.
"இதுக்கு மேல இப்படியே இருந்தா ஆபத்து", என்று நினைத்து கொண்டு அவள் மேலிருந்து நகன்று அவள் அருகில் படுத்தான்.
கண்களை மூடி அவன் முத்தத்தில் மூழ்கி இருந்தவள் ஒரு பக்கமாக திரும்பி படுத்து அவனை பார்த்தாள்.
அவள் குழப்பமான பார்வையை பார்த்து ரசித்தவன் அவளை மாதிரியே அவள் புறம் திரும்பி படுத்து கொண்டு "என்ன டி?", என்று கேட்டான்.
அவனுடைய உரிமையான அழைப்பில் தலை குனிந்து கொண்டாள் கலைமதி.
"இத்தனை நாள் நின்னுட்டு, உக்காந்துட்டு இருக்கும் போது தான முத்தம் கொடுத்தீங்க? இப்ப எதுக்கு இப்படி படுத்துட்டு....?", என்று தலை குனிந்த படியே கேட்டாள்.
"தெரியலை தோணுச்சு. உனக்கு பிடிச்சிருந்ததா?", என்று சிரித்து கொண்டே கேட்டான் சூர்யா.
அவனுடைய கையில் கிள்ளி விட்டாள் கலை.
"ஆ, வலிக்குது டி. அப்புறம் இப்படி எல்லாம் இனி பேசாத கண்ணம்மா. உன் அத்தான் பாவம்"
"நான் இப்ப என்ன பேசுனேன்? கிள்ள தான செஞ்சேன்?"
"இப்ப சொல்லலை. சேந்து வாழுறதை பத்தி அப்ப பேசின மாதிரி பேசாதேன்னு சொன்னேன். உன் படிப்பு முடியட்டும் சரியா டா?"
"ஹ்ம் சரி"
"நல்ல பொண்ணு. சரி இரு நான் போய் குளிச்சிட்டு வரேன்", என்று எழுந்தான்.
"ஒரு நாளைக்கு ரெண்டு தடவை தான குளிப்பீங்க அத்தான். இன்னைக்கு என்ன மூணாவது தடவை?"
"இன்னைக்கு நிலைமை சரி இல்லை. அதனால தான்"
"என்ன நிலைமை?"
"நான் அழுக்காகிட்டேன் டி போதுமா?", என்று கேட்டு கொண்டே அவள் அடுத்த கேள்வி கேட்கும் முன் குளியல் அறைக்குள் புகுந்து விட்டான்.
தன்னை ஒரு பார்வை பார்த்து விட்டு கட்டிலை பார்த்தாள். "பஞ்சு மெத்தைல படுத்து அழுக்கா ஆகுமா ?", என்று நினைத்து முழித்து கொண்டிருந்தாள்.
சவரின் அடியில் நின்றவனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்து சிலிர்த்தது. முதல் முறை தன் உணர்வை தூண்டி விட்ட அவள் பெண்மையை நினைத்து வியந்தான்.
"அவளை உரசி முத்தம் கொடுத்தத்துக்கே இப்படியா? கடவுளே எப்படி இனி சமாளிக்க? கொல்றாளே ராட்சசி ", என்று புலம்பியவனுக்கு அவள் கேட்ட கேள்விகள் அனைத்தும் நினைவு வந்தது.
அவனை அறியாமலே அவள் மூலம் அவனுடைய ஆண்மை சோதிக்க பட்டதை நினைத்து முகமெல்லாம் வெட்கம் வந்தது அவனுக்கு . "நல்ல வேலை அவளுக்கு எதுவும் தெரியலை. இனிமே கவனமா இருக்கணும்", என்று தனக்கு தானே கூறி கொண்டு குளித்து முடித்து வெளிய வந்தான்.
ஆனால் அவளோ அவனையே குழப்பமாக பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்.
மறுபடியும் அவளை நெருங்க துடித்த கை, கால் மற்றும் மனதை அடக்கியவன் "என்ன கலை அப்படி பாக்குற?", என்று கேட்டான்.
"இல்ல மெத்தை மேல நான் கிடந்தேன். என் மேல நீங்க கிடந்தீங்க. பின்ன எப்படி அழுக்கு வரும் அத்தான்?"
"டேய் சூர்யா , இவ உன்னை பயங்கரமா சோதிக்கிறா டா", என்று நினைத்து கொண்டு "அது சும்மா சொன்னேன் கலை. சரி உனக்கு தூக்கம் வரலையா?", என்று கேட்டு பேச்சை மாற்றினான் .
"ஹ்ம் தூங்கலாம். நீங்களும் வாங்க", என்ற படியே கட்டிலில் ஒரு ஓரம் படுத்தாள்.
"ஹ்ம் சரி", என்று சொல்லி விட்டு விளக்கை அனைத்தவன் விடி பல்ப்பை போட்டு விட்டான். குளித்து முடித்ததும் அவன் உணர்வுகள் சிறிது மட்டு பட்டன. "இனி அவளை தொட கூடாது", என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு அவள் அருகில் மற்றொரு பக்கம் படுத்தான்.