சில நொடிகளில் நினைவிற்கு வந்தவன் அவளை கட்டாயமாய் பிரித்தெடுத்து ஆறுதல் கூற அவளோ எதையும் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை..தன்னை நினைத்தே அறுவறுப்பு அடைந்தவாறு அவள் போக்கில் பேசிக் கொண்டே இருக்க அவள் கன்னம் பற்றியவன் சிறிதும் யோசிக்காது அவள் இதழை சிறைப்பிடித்திருந்தான்..சில நொடிகளில் விடுவித்தனை ஆற்றாமையோடு அவள் பார்க்க,
தயவுசெஞ்சு அப்படி பாக்காத டீ..நானும் ஆம்பளதானு காட்றதுக்காக பண்ணல நீ பேசுறதெல்லாம் கேக்க முடில உன்னை நீயே இப்படி குறைச்சு பேசுறத கேட்டுட்டு சும்மா இருக்க சொல்றியா..நீ என் பொண்டாட்டி..அதை தாண்டி எல்லாத்தையும் மறந்துடுநு ஆயிரம் தடவை சொல்லிட்டேன்..எப்போவோ ஒரு கோர விபத்து நடந்து அதுல செத்து பொழச்சு வந்தேனு நினைச்சுக்கோ..
மத்த எதுவும் உன் மனசுல இருக்க கூடாது..இப்போ சொல்றேன் இனி நீயா வந்து முழுமனசோட என் பொண்டாட்டிங்கிற உரிமையோட என் பக்கத்துல வராத வர விளையாட்டா கூட நா உன்னை தொடமாட்டேன்..இது உன் மேல ப்ராமிஸ் நிரு..
எனக்கு என்கூட சந்தோஷமா வாழ விரும்புற நிர்பயா தான் வேணும்..எங்க சுத்தினாலும் கடைசில அதே விஷயத்துல வந்து நிக்காத..இப்பவும் எனக்கு உன் மேல இருக்குற காதல் நூலளவும் குறையல ஆனா இது உனக்காக நா குடுக்குற டைம்..உடம்போட காயங்கள் அப்படியே இருக்கலாம் ஆனா உன் மனக் காயத்துக்கு கண்டிப்பா நா மருந்தா இருப்பேன்..அதை நீ புரிஞ்சுக்குற நாள் சீக்கிரமே வரும் நிரு..நீ ரெடி ஆய்ட்டு வா நா வெளில வெயிட் பண்றேன் என நிற்காமல் சென்றுவிட்டான்..
ஹாய் பிரெண்ட்ஸ் கடைசி பார்ட் நானே ரொம்ப பாரமா பீல் பண்ணி எழுதினது சோ ரொம்ப விரிவா கொண்டூ போக விரும்பல.நிறை குறைகளுக்கு நிச்சயம் காத்திருக்கிறேன்..
தொடரும்
{kunena_discuss:1164}