“வாட்கின்ஸனில், உன் விருப்பத்தை நீ கூறியதுமே, உன்னிடம் என் விருப்பத்தை சொல்ல நினைதேன்டா. ஆனால் ஏதாவது பரிசுடன் வந்து சொல்ல நினைத்து தான், அன்று உன்னை, வாஷிங்க்டனில் உணவு விடுதியில் தனியே விட்டு, சென்று வாங்கி வந்தேன். அதை கோவிலில் வைத்து கொடுக்க நினைத்து தான் அன்று கோவிலுக்கு உன்னை அழைத்துச் சென்றேன். கோவிலுக்குள் இருக்கும் பொழுது தான், இதை காரிலேயே வைத்து விட்டு வந்தது நியாபகம் வந்தது. இதை எடுக்க காருக்கு சென்ற பொழுது தான், அந்த காப்ரிலாவிடம் மாட்டிக் கொண்டேன். சரி இப்போ நல்ல நேரத்தில் அவளைப் பற்றிய பேச்சு வேண்டாம். நீ இந்த அத்தான் கூட எப்படி எல்லாம் இருக்கணும்னு ஆசை வச்சேன்னு சொல்லு பார்க்கலாம்.” என்றான்.
அபி கேட்ட ஸ்டைலில், அந்த பாட்டு தான் நியாபகம் வந்தது உத்ராவிற்கு. மெதுவாக அந்த வரியை பாடவும் செய்தாள்.
“ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தான
சந்திக்கத் தான் ஆசை வச்சேன்.
குத்தாத முள்ளு குத்தி,
குதிங்காலு வலிக்குதுன்னு
மடி மேல காலப் போட ஆசை வச்சேன்.”
பாட்டைக் கேட்டு அவளை அள்ளிக் கொண்டான் அபி.
தொடரும்...
{kunena_discuss:1170}